அறிவிப்பு

செங்கல்பட்டில்

மார்ச் 11 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இடம்  : ஹோட்டல் கணேஷ் பவன் செங்கல்பட்டு நாள் : 11.03.2017 மாலை 5 மணி தலைப்பு  :  கற்றுத்தரும் கதைகள்

பதின் கலந்துரையாடல்

ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பதின் நாவலுக்கான கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.  கலந்து சிறப்பித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள். வாசகர்களுக்கு நன்றி. ஒருங்கிணைப்பு செய்த வேடியப்பனுக்கும், டிஸ்கவரி புக் பேலஸ் வாசகவட்டத்திற்கும் அன்பும் நன்றியும் நிகழ்வை ஸ்ருதிடிவி முழுமையாகப் பதிவு செய்துள்ளது. நண்பர் கபிலனுக்கு நன்றி. நிகழ்வின் காணொளிகள் அனைத்தும் ஒரே சுட்டியில் https://www.shruti.tv/?p=10678

பதின் மதிப்புரை

இம்மாத செம்மலர் இதழில் தோழர் எஸ்.ஏ.பி பதின் நாவல் குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார் நன்றி  : செம்மலர் எஸ். ஏ. பெருமாள்

பதின் கலந்துரையாடல்

பிப்ரவரி 12 ஞாயிறு மாலை 6 மணிக்கு  டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் எனது பதின் நாவல் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் நிகழ்வினை டிஸ்கவரி வாசகவட்டம் ஒருங்கிணைப்பு செய்துள்ளது

அஞ்சலி

எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் இன்று காலமாகிவிட்டார். சிவக்குமாரை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். நல்ல எழுத்தாளன். வேடிக்கையாகப் பேசக்கூடியவன். அவனது மறைவு ஆறாத் துயரை உருவாக்குகிறது. எனது கண்ணீர் அஞ்சலிகள்

ராஜஸ்தான் பயணம்

பிப்ரவரி இறுதியில் ஒரு வாரம் ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.  அங்கே சிறிய உதவி தேவைப்படுகிறது ராஜஸ்தானில் வசிக்கும் இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் தொடர்பு கொள்ளவும். எனது மின்னஞ்சல் writerramki@gmail.com

திருச்சியில்

பதின் நாவலுக்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது களம் இலக்கிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது 29. 01.2017 ஞாயிறு  மாலை 5   :30  மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டல் அரங்கில்  இந்நிகழ்வு நடைபெறவுள்ளது இதில் இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்