அறிவிப்பு

குறைந்த ஒளியில்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலம்பரைகோட்டைக்கு அழைத்துச் சென்றார். காலை ஆறுமணிக்கு முன்பாக அங்கிருக்க வேண்டும் என இருள் கலையாத சாலையில் பயணம் செய்தோம். விடிகாலை வெளிச்சத்தில் அவரும் இரண்டு நண்பர்களும் நிறையப் புகைப்படங்களை எடுத்தார்கள். மிகச்சிறப்பான புகைப்படங்கள்.  இன்றுவரைஅந்தப் புகைப்படங்களைத் தான் எனது புத்தகங்களின் பின்னட்டையில் பயன்படுத்தி வருகிறேன் பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி …

குறைந்த ஒளியில் Read More »

புகைப்படங்கள் 1

உயிர்மை பதிப்பகம் நடத்திய எனது மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்பிற்குரிய உதயசந்திரன் ஐஏஎஸ். இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்,  எழுத்தாளர் ஷாஜகான், ஒவியர் விஸ்வம், டாக்டர் திருநாவுக்கரசு. ஐஐடி சசி, மணிமாறன், வழக்கறிஞர் தேவகுமார் . பங்கேற்ற நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வினை படப்பிடிப்பு செய்து இணையத்தில் பகிரும் ஸ்ருதி டிவிக்கும். சிறப்பான புகைப்படங்களை எடுத்து தந்த …

புகைப்படங்கள் 1 Read More »

புத்தக வெளியீட்டு விழா

நாளை ருஷ்ய கலாச்சார மையத்தில் எனது  மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. நண்பர்கள், வாசகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மூன்று புத்தகங்களும் சேர்ந்து ரூ 500 விலைக்கு அரங்கில் கிடைக்கும்.

இடக்கை- நேர்காணல்

இடக்கை நாவல் குறித்த நேர்காணல்  வீடியோ ஒன்றினை எனது மகன் ஹரியும்  அவனது நண்பர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். அதன் இணைப்பு edakkai video link .. https://youtu.be/r1JIy_xmJPQ நண்பர்கள், வாசகர்கள் இதனை சமூக ஊடகங்களில் பகிரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் •••

இடக்கை -வெளியீட்டு விழா

எனது புதிய நாவல் இடக்கை வெளியீட்டு விழா ஏப்ரல் 3 ஞாயிறு மாலை 6 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு என்ன சொல்கிறாய் சுடரே, மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆயிரம் வண்ணங்கள் இரண்டும் வெளியிடப்பட இருக்கின்றன. உயிர்மை பதிப்பகம் இந்த நூல்களை வெளியிடுகிறது. நிகழ்வில் கலந்து  கொள்பவர்கள் பற்றிய கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் தெரிவிக்கிறேன்.