குறைந்த ஒளியில்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலம்பரைகோட்டைக்கு அழைத்துச் சென்றார். காலை ஆறுமணிக்கு முன்பாக அங்கிருக்க வேண்டும் என இருள் கலையாத சாலையில் பயணம் செய்தோம். விடிகாலை வெளிச்சத்தில் அவரும் இரண்டு நண்பர்களும் நிறையப் புகைப்படங்களை எடுத்தார்கள். மிகச்சிறப்பான புகைப்படங்கள். இன்றுவரைஅந்தப் புகைப்படங்களைத் தான் எனது புத்தகங்களின் பின்னட்டையில் பயன்படுத்தி வருகிறேன் பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி …