அறிவிப்பு
கோவையில் நடைபெற்ற விழாவில் எனக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது, நிகழ்வினை கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், கோவையில் நிறைய இளம்வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி தருவதாக இருந்தது, அன்றைய விழாவில் வழக்கறிஞர் ராமலிங்கம் அவர்கள் கம்பனும் கண்ணதாசனும் என்று ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார், கம்பனின் பெருமைகளை அவர் எடுத்துச் சொல்லும் விதம் பரவசம் தருவதாக இருந்தது, வீடு வந்த இரண்டுநாட்களாக நானும் கம்பனில் தான் முழ்கியிருக்கிறேன் •• விகடனில் வெளியாகி …