அறிவிப்பு

நல்லி-திசை எட்டும் இலக்கிய விருது

2011 ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, இதில் ஆங்கிலத்தில் இருந்து நான் மொழியாக்கம் செய்த குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருதினைப்பெற்றிருக்கிறது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில் இயற்கையைப் பற்றி பல்வேறு இனக்குழுவினரிடம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். இந்த விருதிற்கு ரொக்கப் பரிசு ரூ.10,000. மற்றும் பாராட்டுப் பத்திரம் அளிக்கப்படுகிறது. இதற்கான விழா அக்டோபரில் நடைபெற உள்ளது. **

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா

எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவும் தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டுவிழாவும் மதுரையில் நடைபெற உள்ளது. உயிர்மை நடத்தும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபறெ உள்ளது, இதில் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள், நிகழ்ச்சி பற்றிய முழுமையான விபரங்களை சில நாட்களில் தெரிவிக்கிறேன், செப்டம்பர் 2 முதல் நடைபெறும் மதுரை புத்தக கண்காட்சியில் 3 மற்றும் 4ம்தேதிகளின் பகலில் …

மதுரையில் புத்தகவெளியீட்டு விழா Read More »

கதைகள் அறிவோம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்களை கடந்த இரண்டு மாதங்களில் மதுரை, திருச்சி, ராஜபாளையம். சென்னை, ஆத்தூர் என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தியும் கதைசொல்லியும் வருகிறேன். ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தா பள்ளியில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்வில் ஏழு பள்ளிமாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாசித்து தங்களின் கருத்துரைகளை வழங்கியது சிறப்பாக இருந்தது திருச்சி எஸ்ஆர்வி பள்ளியில் ஆசிரியர்களுக்குக் கதை சொல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கினை நடத்தினேன், கதை சொல்வதை கல்வியோடு இணைந்த ஒரு பாடமாகவே …

கதைகள் அறிவோம் Read More »

வரலாறும் இலக்கியமும்

Writing History and Literature: Ideas and Practice என்ற தேசியக்கருத்தரங்கு  பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டில் ஆகஸ்ட் 10,11,12 ஆகிய மூன்று  நாட்களில் நடைபெற உள்ளது,  இதில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி செல்கிறேன். •• சேலம் தமிழ்சங்கம் நடத்துகின்ற கவிஞர்மீரா நினைவு நவீன இலக்கியப் பயிலரங்கில் கலந்து கொள்ள 13,14 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் செல்ல இருக்கிறேன் ••

மலேசியப்பயணம்

மலேசியத் தமிழ் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஆகஸ்ட் 18 முதல் 25 வரை மலேசியா செல்ல இருக்கிறேன், இதில் ஆகஸ்ட் 19, 20 ,21 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் சிறுகதைப் பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறேன், மற்ற நாட்களில் மலேசியாவின் பினாங்கு. கெடா. ஈப்போ ஆகிய மூன்று இடங்களில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன, விரிவான நிகழ்ச்சி நிரலை விரைவில் வெளியிடுகிறேன், இந்தப் பயணத்தின் போது மலேசியாவில் உள்ள இலக்கிய வாசகர்கள். ஆர்வலர்களைச் சந்திக்க விரும்புகிறேன், …

மலேசியப்பயணம் Read More »

மரணவீட்டின் குறிப்புகள்

நவீன நாடகப்பயிலரங்காக விளங்கி வரும் தியேட்டர் லேப் நடிகர்களை முறையாகப் பயிற்சி தந்து உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குகிறது, கூத்துப்பட்டறையில் பயின்ற ஜெயராவ் இதை நடத்துகிறார், அவர் ஒரு சிறந்த நடிகர், நாடக இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர், இவர் இயக்கிய சங்கீத பைத்தியம். மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் போன்றவை சிறப்பான நாடகங்கள். இவரது தியேட்டர் லேப்பின் சார்பில் இரண்டு வருசங்களுக்கு முன்பாக எனது நதி அறியாதது என்ற நாடகம் அலியான்சே பிரான்சேயில் நடைபெற்றது. தற்போது அவர்கள் தஸ்தாயெவ்ஸ்கியின் …

மரணவீட்டின் குறிப்புகள் Read More »

இரண்டு விழாக்கள்

யாமம் நாவலுக்காக நான் தாகூர் விருது பெற்றதைப் பாராட்டி இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. ஜுலை 29 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இராஜபாளையம் அர்ஜுன்மந்திரம் திருமண மண்டபத்தில் நாற்று இலக்கிய அமைப்பு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் யாமம் குறித்த ஆய்வுரையும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது ஜுலை 31 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர், நூறடி சாலையில் நடைபெற உள்ள கலைஇலக்கிய விழாவில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதனை ஏற்பாடு செய்திருப்பவர்கள், …

இரண்டு விழாக்கள் Read More »

நாகரத்தினம் கிருஷ்ணா

எனது நண்பரும் சிறந்த எழுத்தாளருமான நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சில் வாழ்ந்துவருபவர், சொந்த ஊர் பாண்டிச்சேரி, இவரது  மார்த்தா ஹரி,  நீலக்கடல் போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள்,  பிரெஞ்சு எழுத்தாளர்களையும் சமகால பிரெஞ்சு இலக்கியப்போக்குகளையும்  தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர், இவர் புதிதாக வலைப்பக்கம் ஒன்றினைத் துவக்கியிருக்கிறார், இதில் பிலிப் விலென்(Philippe Vilain) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது. பார்வைக்கு https://nagarathinamkrishna.wordpress.com/mukappu/ **

இரங்கல்

ஈழத் தமிழ் இலக்கிய த்தின் மிக முக்கிய ஆளுமையும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••

புதிய பதிப்பு

தாகூர் விருது பெற்றுள்ள எனது யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது, உயிர்மை இதைச் சிறப்பு பதிப்பாக மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது. விலை ரூ275, UYIRMMAI PATHIPAGAM 1/29 SUBRAMANIYAN STREET ABIRAMAPURAM  CHENNAI-600018. TAMIL NADU TELE/FAX: 91-44-24993448 uyirmmai@gmail.com