அறிவிப்பு

கல்முகம்

மனித முகத்தைப் போல தோற்றமளிக்கும் கற்களைச் சேகரித்து ஜப்பானில் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்கள். அது பற்றிய காணொளி

எழுத்தே வாழ்க்கை

எஸ். ராவின் புத்தகத்தினூடே ஒரு பயணம் : G. கோபி எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற வரலாற்றுக் கட்டுரைகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை. மேலும் துணையெழுத்து, இலக்கற்ற பயணி, ரயில் நிலையங்களின் தோழமை, வீட்டில்லாத புத்தகங்கள், தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைக்களும் வாசிப்பதற்கு அரிய தகவல்களும் வித்தியாசமான …

எழுத்தே வாழ்க்கை Read More »

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்

கே.ஜி, ஜார்ஜ் நினைவு மலர்

மறைந்த இயக்குநர் கே.ஜி. ஜார்ஜின் நினைவைப் போற்றும்விதமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள மலரில் எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி.

ரஷ்ய வெளிச்சம்

‘மாஸ்கோவின் மணியோசை’  வாசிப்பனுபவம். ரம்யா ரோஷன் ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும். நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த …

ரஷ்ய வெளிச்சம் Read More »

ஆங்கிலத்தில்

எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் இணைப்பு https://www.usawa.in/issue-8/Translation/The-Last-Horse-Cart-R-Satish.html

இணைய இதழில்

Medium என்ற இணைய இதழில் எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருப்பதை இன்று தான் பார்த்தேன். சிங்கப்பூரில் வசிக்கும் ராஜ் ஸ்வரூப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. தகுந்த ஆங்கிலப் பதிப்பாளர் கிடைக்காத காரணத்தால் அந்நூல் இன்னும் வெளியாகவில்லை. The Eighty-Year Wait கதை அரிய பறவையான JERDON COURSER பற்றியது. கதையின் இணைப்பு. https://rs-writes-well.medium.com/the-eighty-year-wait-fd95a57b8fec

அன்பும் நன்றியும்

47வது சென்னை புத்தகத்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். அவர்களுடன் உரையாடினேன். வாசகர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் ஈடற்றது. புத்தகக் கண்காட்சியின் போது நூறு கைகள் எனக்கிருப்பது போல உணர்ந்தேன். இந்த நம்பிக்கை வாசகர்கள் உருவாக்கியது. அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றி. தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து எனது நூல்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. எனது புதிய புத்தகங்களையும் பரிந்துரைகளையும் ஒளிப்பதிவு …

அன்பும் நன்றியும் Read More »