தேதியற்ற மத்தியானம்
கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பு தேதியற்ற மத்தியானம் தேசாந்திரி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.
கவிஞர் தேவதச்சனின் புதிய கவிதைத்தொகுப்பு தேதியற்ற மத்தியானம் தேசாந்திரி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இலக்கிய இதழில் ஓவியம் சார்ந்த எனது இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. முதற்குறுங்கதையின் தலைப்பு வெர்மீரின் பால். இதழில் அச்சுப்பிழையாக வெர்மின் பால் என வந்துள்ளது. இரண்டாவது கதை வான்கோவின் உருளைகிழங்கு உண்பவர்கள் ஓவியம் குறித்தது. தலைப்பு : பசியின் வெளிச்சம்.
கேரளாவில் நடைபெறவுள்ள சர்வதேச இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 3 காலை எனது அமர்வு நடைபெறுகிறது
நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞரைச் சந்தித்தேன். சென்னை ஓவியக்கல்லூரியில் பயில்வதாக அறிமுகம் செய்து கொண்டு தான் வரைந்துள்ள கோட்டோவியத்தை என்னிடம் காட்டினார். அதில் நானும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் தஸ்தாயெவ்ஸ்கியும் இருந்தோம். வியப்போடு அந்த ஓவியம் பற்றிக் கேட்டேன் நீங்கள் விருதுநகர் புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வந்ததைப் பற்றி வரைந்திருக்கிறேன். நீங்கள் விருதுநகருக்கு ரயிலில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பேச்சில் எப்போதும் கி.ராவை, சுந்தர ராமசாமியை உயர்வாகச் சொல்கிறீர்கள் ஆகவே அவர்களும் உங்களுடன் …
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை வாங்கலாம் என வாசகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இவை இன்றைய எனது பரிந்துரைகள். பதிப்பாளர் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அரங்கு எண் தெரியவில்லை. நினைவின் குற்றவாளி – கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன், வேரல் பதிப்பகம் ₹130 ( நகுலன் பற்றிய நினைவுகளும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவக்குறிப்புகளும் கொண்டது. ) கதை இல்லாதவனின் கதை- மலையாளம்- எம். என். பாலூர் ( கதகளி கலைஞரின் வாழ்க்கை நினைவுகளைச் சொல்லும் அற்புதமான படைப்பு. )தமிழில்: …
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதையை ரேடியோ நாடகமாக அகில இந்திய வானொலி சென்னை நேற்று ஒலிபரப்புச் செய்தார்கள். எனது சிறுகதையை ரேடியோ நாடகமாக எழுதியவர் குமரி எஸ். நீலகண்டன். நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எஸ்.அண்ணாமலைப் பாண்டியன் ஜே.ஜெயா. நாடகத்தில் பங்கேற்று நடித்த ரவி சுப்ரமணியன். கிருஷ்ணமூர்த்தி, பரத் ராஜ்,வி. லோகபாபு உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 265 மற்றும் 266. மூன்றாவது வரிசையில் உள்ளது. இந்த அரங்கில் தினமும் மாலை ஐந்து மணி முதல் இருப்பேன். விருப்பமான வாசகர்கள் , நண்பர்கள் சந்திக்கலாம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2024 உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.
47 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 265 மற்றும் 266. எனது அனைத்து நூல்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.
எனது புத்தக வெளியீட்டு விழாவில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து உரையாற்றினேன்