அறிவிப்பு

உலகப் புத்தக தினம்

நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும். உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள். தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது …

உலகப் புத்தக தினம் Read More »

நீலச்சக்கரம் / கடிதம்

எனது சிறார் நூலான நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தினை வாசித்து தங்ககோபி என்ற பள்ளிச்சிறுவன் எழுதிய கடிதம். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளில் அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

புதுச்சேரியில்

ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார். மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்.. வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். …

புதுச்சேரியில் Read More »

எஸ்.ராவிடம் கேளுங்கள் -1

எஸ்.ராவிடம் கேளுங்கள் காணொளித் தொடர் நேற்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கேள்விகளை இதில் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி

நேற்று (13.04.24) எனது பிறந்த நாள். காலை முதலே நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்கள். ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வாழ்த்துச் சொன்னார்கள். தங்கைகளின் வாழ்த்து அதைத் தொடர்ந்து வந்தது. கவிஞர் தேவதச்சன் வாழ்த்துச் சொல்லியதோடு பிறந்தநாளை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார். மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவர் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. ஆனால் அவர்கள் இளமையின் குருவி எங்கிருந்தோ சப்தமிடுவதைக் கேட்பதாக உணருவார்கள். …

நன்றி Read More »

“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை

முனைவர். வ. இரமணன் தமிழ் நாடு தடய அறிவியல் துறை. பிரபஞ்சத்தின் சிதறம் (entropy) எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறது வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது ஒழுங்கின்மை அல்லது சிதறிக்கிடப்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. எந்த ஒரு ஒழுக்கமும் இயற்கைக்கு எதிரானது. என்று ஆதிமனிதன் வாழத்தலைப்பட்டானோ அன்றே இயற்கையை எதிர்க்கத்துணிந்து விட்டான். இன்றுவரை மனிதன் இயற்கையை எதிர்த்துக்கொண்டேதான் இருக்கிறான். நாம் நமக்கென்று சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை இல்லையென்றால் மனிதன் வாழ்வது கடினமாகிவிடும். ஒரு கட்டற்ற வாழ்க்கையை …

“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை Read More »

எம்.எஃப் ஹுசைன்

Through the Eyes of a Painter – ஓவியர் எம்.எஃப் ஹுசைன் இயக்கிய திரைப்படம். 18 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படம் ஓவியனின் பார்வையில் ராஜஸ்தானின் மூன்று கிராமங்களை மிகுந்த அழகுணர்வுடன் சித்தரிக்கிறது. இசையும் காட்சிப்படிமங்களும் இணைந்து புதிய அனுபவத்தைத் தருகின்றன. படத்தில் உரையாடல் கிடையாது காட்சிக்கோர்வைகளின் வழியே காலமும் கலைகளும் உருவாக்கிய மாற்றங்களை அடையாளப்படுத்துகிறார். மணிகௌலின் ஆவணப்படங்களைப் போன்ற அழகியலைக் கொண்டிருக்கிறது.

ஸ்ருதி டிவி / வாழ்த்துகள்

ஸ்ருதி டிவி ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகத் திருவிழா என இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதில் ஸ்ருதி டிவியின் பங்கு மிக முக்கியமானது. ஸ்ருதி டிவியைச் சிறப்பாக நடத்திவரும் கபிலன், சுரேஷ் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தினரை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்