புதிய சிறுகதை
இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் எனது புதிய சிறுகதை அவரது நாட்கள் வெளியாகியுள்ளது.
விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார். பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் …
மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். **
ரஷ்ய இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை. புஷ்கின் துவங்கி இன்று முக்கியக் கவியாக விளங்கும் வேரா பாவ்லோவா வரை இதில் இடம்பெற்றுள்ளார்கள். இந்நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.
எனது நாவல் நிமித்தம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்த நாவல் வெளியாகும்.
அமெரிக்காவின் தேசியக் கவியாக கொண்டாடப்படும் பில்லி காலின்ஸ் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் தொகுக்கபட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நேர்காணல்களின் தொகுப்பு. கவிதை எழுதுவது குறித்தும் கவிஞனின் அகம் குறித்தும் சிறப்பாக தனது பார்வைகளை முன்வைக்கிறார் பில்லி காலின்ஸ். ‘பிக் டேட்டா காலத்தில் கவிதைகளின் தேவை அல்லது கவிதை எழுதுவது எப்படியிருக்கிறது என ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர் கவிதை என்பது ஸ்மால் டேட்டா என்று பதில் சொல்கிறார். உண்மை தான். பில்லி காலின்ஸ் சொன்னதைப் …
இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை இரண்டு தொகுதிகளாகத் தொகுத்துள்ளார் கே.எம்.ஜார்ஜ். இதனைச் சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. முதல் தொகுதி கவிதைகளும் இலக்கிய வரலாறும் கொண்டது. இரண்டாவது தொகுதி புனைகதைகள். இரண்டும் சேர்ந்து 2400 பக்கங்கள். 1993ல் இந்தத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அதன் மறுபதிப்பை 2013ல் வெளியிட்டிருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஆயிரம் ரூபாய் விலைக்கு இணையத்தில் வாங்கினேன். புனைகதைகள் தொகுப்பில் 22 மொழிகளிலிருந்து 178 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகள், 68 நாவல்களின் சிறிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. …
இணைய வழியில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் -நூறு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன். எனது உரைக்குப் பதிலாக கலந்துரையாடலை வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நிறைய வாசகர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டது, இன்னும் நிறைய கேள்விகள் மிச்சமிருந்தன. நேரமில்லாத காரணத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை. பேராசிரியர் வினோத் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. அய்யா ஆறுமுகசாமி நேற்றைய நிகழ்விலும் …
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கதைகளின் பட்டியல் இணைய வழி நிகழ்வு – பேசப்பட்ட கதைகள் 1 புத்தனாவது சுலபம் 3 பிழை திருத்துபவரின் மனைவி 4 நடந்து செல்லும் நீரூற்று 5 கதவைத் தட்டிய கதை 6 அம்மா 7 அப்பா புகைக்கிறார் 8 பேசும் கற்கள் 9 அவளது வீடு 10 பீங்கான் நாரைகள்(மூன்று குடும்பங்களின் கதை) 11 இல்மொழி 12 சொர்ணத்து ஆச்சிக்கு …