அறிவிப்பு

தெலுங்கு சிறுகதை தொகுப்பில்

மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது

அதிகாரத்தின் அறைகள்

(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார்  அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார்.  போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …

அதிகாரத்தின் அறைகள் Read More »

இந்து தமிழ் நாளிதழில்

இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம்

தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார். 16ம் தேதி மாலை …

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம் Read More »

புத்தகக் கண்காட்சி -2

மூன்று நாட்களாக தினமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன். திரளான கூட்டம். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். நேற்று தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு கோணங்கி வந்திருந்தார். அவரது புதிய நாவல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மாலையில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், சாரதி ஆகியோரைச் சந்தித்தேன். அன்னம் அகரம் பதிப்பகம் கதிர் ஹெப்சிபா ஜேசுநாதனின் மா–னீ‘  நாவலின் புதிய பதிப்பு கொண்டு வந்திருக்கிறார். நேற்று அந்த நூலை அவரிடமிருந்து பெற்றுக் …

புத்தகக் கண்காட்சி -2 Read More »

புத்தகக் கண்காட்சியில் -1

நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள். தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து …

புத்தகக் கண்காட்சியில் -1 Read More »

டால்ஸ்டாயைக் கண்டறிந்தேன்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்து முதுநிலை கல்வெட்டியல் பயிலும் தரணி லெட்சுமணன் எழுதியுள்ள வாசிப்பனுபவம். படைப்பு தகவு இதழில் வெளியாகியுள்ளது நன்றி படைப்பு தகவு

சென்னை புத்தகத் திருவிழா

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 415 416. தினமும் மாலை 5 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் கால்வலி காரணமாக இரண்டு வாரங்களாக ஆயுர்வேத சிகிட்சை எடுத்துவருகிறேன். கண்காட்சியில் நீண்ட நேரம் நிற்க நேரிடும் ஆகவே செல்ல வேண்டாம் என்கிறார் மருத்துவர். ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமல் இருக்க முடியாது ஆகவே நாற்காலியில் அமர்ந்தபடியே செயல்படுவேன். நாம் அமர்ந்து பேசலாம். புகைப்படம் …

சென்னை புத்தகத் திருவிழா Read More »

சென்னை இலக்கியத் திருவிழா

நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாகத் துவங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விழாவைத் துவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்கள். சென்னை நகர மேயர், பாடநூல் கழக தலைவர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சென்னை இலக்கியத் திருவிழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தார்கள். தமிழக அரசின் சார்பில் இப்படி ஒரு இலக்கியவிழாவை முன்னெடுத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. இந்த நிகழ்விற்கு …

சென்னை இலக்கியத் திருவிழா Read More »

நிறங்களை இசைத்தல்- வாசிப்பனுபவம்

Boje Bhojan 110 பக்கங்களும் 16 தலைப்புகளும் கொண்ட இந்த புத்தகத்தில் ஓவியங்கள் பற்றியும் அதை வரைந்த ஓவியர்களின் வரலாறு பற்றியும் மிகவும் பயனுள்ள தகவல்களையும் சொல்லி இருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு. பொதுவாக ஓவியம் என்பது கலை என்பதையும் தாண்டி அது ஒரு தியானத்திற்கு இணையான விஷயம் என்றே சொல்லலாம் தியானத்தில் நாம் உணரும் ஒரு அமைதியும் சரி , இசையில் நாம் அடையும் பரவசமும் சரி இவை ரெண்டுக்கு இணையாது  ஓவியம். பொதுவாக ஓவியம் …

நிறங்களை இசைத்தல்- வாசிப்பனுபவம் Read More »