அறிவிப்பு

பௌத்த சினிமா -1 கர்மா

இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி

மாக்ஸ் லிண்டர் மௌனப்படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். பிரெஞ்சு நடிகரான இவரது பாதிப்பில் உருவானர் தான் சார்லி சாப்ளின். தனது கடிதம் ஒன்றில் சாப்ளின் லிண்டரைத் தனது குருவாகக் குறிப்பிடுகிறார். மாக்ஸ் லிண்டர் நடித்த Max Takes a Bath என்ற மௌனப்படம் 1910ல் வெளியானது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன அறிவுரைக்காக மாக்ஸ் ஒரு குளியல் தொட்டியை விலைக்கு வாங்குகிறார். அதைத் தனது வீட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாகக் …

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி Read More »

பந்தல்குடி பள்ளி

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் R.ஜெயபால் . இவர் தனது வகுப்பு மாணவிகள் மாவட்ட மற்றும மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை;ப் பாராட்டும் விதமாக எனது புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் . வகுப்பறைக்குள் புத்தகங்கள் செல்வது வரவேற்க வேண்டிய செயல். ஜெயாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நீலக்குதிரைகள் – கவிதை

நீலக்குதிரைகள் என்ற ஒவியம் பற்றிய எனது பதிவில் மேரி ஆலிவர் கவிதையை குறிப்பிட்டிருந்தேன். கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன் அதை முன்னதாக மொழியாக்கம் செய்து அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். நேற்று இதனை அவரே அனுப்பி வைத்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. நீலக்குதிரைகள் – மேரி ஆலிவர் நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை …

நீலக்குதிரைகள் – கவிதை Read More »

பெலா தார் கற்றுத்தருகிறார்.

புகழ்பெற்ற The Turin Horse திரைப்படத்தை எப்படிப் பெலா தார் (BelaTarr) உருவாக்கினார் என்பதை விவரிக்கிறது Tarr Bela: I Used to Be a Filmmaker ஆவணப்படம். இளம் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இதனை அவசியம் காண வேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் பெலா தார் எவ்வளவு தீவிரம் காட்டுகிறார். எப்படி ஒரு காட்சியைத் துல்லியமாக உருவாக்குகிறார் என்பதற்கான மாஸ்டர் கிளாஸ் போல இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது. ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் பெலா தார் …

பெலா தார் கற்றுத்தருகிறார். Read More »

கவின் கடிதம்

டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூலை வாசித்துவிட்டு இரா.கவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் எழுதியுள்ள கடிதம். கவினின் கடிதத்திற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி. வாசிப்பைத் தொடர வாழ்த்துகிறேன். கவின் கேட்ட கேள்விக்குப் பதில் : எறும்பின் வாழ்க்கை என்பது சில நாட்கள் தானே., ஆகவே கதை முடிவதற்குள் டான்டூன் இளைஞனாகி விடுகிறான்.

புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு

இரண்டு நாட்களும் புதுமைப்பித்தன் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.  நாடகத்தை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள்.  நிறைய இளைஞர்கள் நாடகம் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. நாடக இயக்குநர் கே.எஸ்.கருணா பிரசாத், நடிகர்கள், மேடை அமைப்பு, ஒளியைக் கையாண்ட கலைஞர்கள். நாடகத்தைத் தயாரித்த கூத்துப்பட்டறைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள். புதுமைப்பித்தன் குடும்பத்தினர், புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கண்மணி கமலாவிற்கு நூலை வெளியிட்ட இளையபாரதி, புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை உருவாக்கிய ஆ.இரா.வேங்கடாசலபதி. …

புதுமைப்பித்தன் நாடக நிகழ்வு Read More »

புதுமைப்பித்தன் நாடகம்

புதுமைப்பித்தன் வாழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய நாடகத்தைக் கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கிறார். கூத்துப்பட்டறையின் முக்கிய நடிகர்கள் இதில் பங்கேற்கிறார்கள். டாக்டர் ரவீந்திரன் ஒளியமைப்பு செய்கிறார். நவீன நாடக உலகில் தனிச்சிறப்பு மிக்க நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படும் கே.எஸ்.கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை முன்னதாக இயக்கியிருக்கிறார். எழுத்தாளர் ந.முத்துசாமி அவர்களால் நவீன நாடகப் பயிற்சி பள்ளியான கூத்துப்பட்டறை 1977ல் துவங்கப்பட்டது. மிகச்சிறந்த நவீன நாடகங்களைக் கூத்துப்பட்டறை நிகழ்த்தியிருக்கிறது. கூத்துப்பட்டறை சார்பில் நடைபெறும் இந்நாடகம் மார்ச் 24 முதல் 28 …

புதுமைப்பித்தன் நாடகம் Read More »

மாணவர்களின் கடிதம்.

காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எனது சிறார் கதைகளைப் படித்துப் பாராட்டுக் கடிதம் அனுப்பியிருந்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல். மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார். மாணவர்கள் கூட்டாக எழுதிய கடிதத்திற்கு நன்றி கூறும்விதமாக அவர்களுக்கு எனது சிறார் நூல்களைப் பரிசாக அனுப்பி வைத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்கள்.