ஆங்கிலத்தில்
எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/
எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/
லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன். எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார். வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் …
மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது
(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார் அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார். போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …
இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html
தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது. கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார். 16ம் தேதி மாலை …
மூன்று நாட்களாக தினமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன். திரளான கூட்டம். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். நேற்று தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு கோணங்கி வந்திருந்தார். அவரது புதிய நாவல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மாலையில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், சாரதி ஆகியோரைச் சந்தித்தேன். அன்னம் அகரம் பதிப்பகம் கதிர் ஹெப்சிபா ஜேசுநாதனின் மா–னீ‘ நாவலின் புதிய பதிப்பு கொண்டு வந்திருக்கிறார். நேற்று அந்த நூலை அவரிடமிருந்து பெற்றுக் …
நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள். தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து …
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்து முதுநிலை கல்வெட்டியல் பயிலும் தரணி லெட்சுமணன் எழுதியுள்ள வாசிப்பனுபவம். படைப்பு தகவு இதழில் வெளியாகியுள்ளது நன்றி படைப்பு தகவு
சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 415 416. தினமும் மாலை 5 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் கால்வலி காரணமாக இரண்டு வாரங்களாக ஆயுர்வேத சிகிட்சை எடுத்துவருகிறேன். கண்காட்சியில் நீண்ட நேரம் நிற்க நேரிடும் ஆகவே செல்ல வேண்டாம் என்கிறார் மருத்துவர். ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமல் இருக்க முடியாது ஆகவே நாற்காலியில் அமர்ந்தபடியே செயல்படுவேன். நாம் அமர்ந்து பேசலாம். புகைப்படம் …