அறிவிப்பு

வாழ்த்துகள்

கவிஞர் சுகுமாரன் ஆசிரியராகப் பணியாற்றிக் காலச்சுவடு 100 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காலச்சுவடு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இந்த இதழின் முகத்தை உருவாக்கியதிலும். அதன் தனித்துமிக்கப் பார்வைகள் மற்றும் படைப்புகளைத் தேர்வு செய்து வெளிக்கொண்டு வந்ததிலும் சுகுமாரனின் பங்கு முக்கியமானது. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு அவரது கனவின் வெளிப்பாடாக இருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வினை, புதிய சாளரங்களைத் திறந்து வைத்ததில் சுகுமாரன் …

வாழ்த்துகள் Read More »

சொற்களின் புதிர்பாதை

– வாசிப்பு அனுபவம் தயாஜி, மலேசியா தேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னைப் பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட …

சொற்களின் புதிர்பாதை Read More »

சிறப்பு சலுகை

தேசாந்திரி பதிப்பகம் புதிய சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது இணைப்பு தேசாந்திரி பதிப்பகம் , டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 (044)-23644947 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/ desanthiri-travel-combo  

முடிவில்லாத அறைகள்

1924 ஆம் ஆண்டில், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பினார்  அதாவது சில முடிவிலிகள் மற்றவற்றை விடப் பெரியதா? (are some infinities bigger than others?)  அவர் தந்த பதில் ஆம் என்பதே. அதை விவரிப்பதற்காக எண்ணிக்கையற்ற அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலைக் கற்பனை செய்து கொள்ளும்படியாக செய்தார். அதன் எல்லா அறைகளிலும் விருந்தினர்கள் இருந்தார்கள். அங்கே அறை காலியில்லை என்ற பலகை தொங்குகிறது. ஆனால் புதிதாக ஒருவரை தங்க அனுமதிக்க …

முடிவில்லாத அறைகள் Read More »

அபாயவீரன்

.ஒரு புத்தகத்தின் பக்கங்களை பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப படிக்க வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட ஆங்கில சிறார் நூல் ஒன்றை 2008ல் படித்தேன். என் பையன் ஆகாஷ் அப்போது ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்காக வாங்கப்படும் புத்தகங்களை நானும் படிப்பேன். புத்தகத்தை வைத்து விளையாடுவது பிடித்திருந்த காரணத்தால் அது போன்ற ஒன்றை நானே எழுதலாம் என்று முடிவு செய்து சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கினேன். அதை வீட்டிற்கு வரும் சிறுவர்களிடம் …

அபாயவீரன் Read More »

குண்டூசியின் பயணம்

– நித்தியானந்தம். ஒரு குண்டூசியை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்ல முடியுமா என்று வியப்பாகவே இருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அக்கடா என்ற சிறுவர் நூலை படித்தேன். விறுவிறுப்பான கதை. நல்ல கற்பனை. நீண்டகாலமாக யாரும் பயன்படுத்தாமல் போட்டு வைத்த ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் கதையே அக்கடா. ஒவ்வொரு குண்டூசியும் ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிறது அக்கடா. குண்டூசிகளை எல்லாம் …

குண்டூசியின் பயணம் Read More »

காந்தியின் பாடல்

காந்தியடிகளால் விரும்பி பாடப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைப் பற்றி Gandhi’s Song என்ற புதிய ஆவணப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இரவில் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். மாயங்க் சாயா எழுதி இயக்கியிருக்கிறார். நேர்த்தியான ஆவணப்படம். துஷார் காந்தியின் நேர்காணல் படத்தின் தனிச்சிறப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட இந்த குஜராத்தி மொழிப்பாடல் “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பதை விளக்குகிறது. இந்த ஆவணப்படம் நர்சிங் மேத்தாவின் வாழ்க்கை …

காந்தியின் பாடல் Read More »

தேசாந்திரி அறிவிப்பு

தேசாந்திரி பதிப்பகம் அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. புதிதாக கர்னலின் நாற்காலி, தேசாந்திரி, எனது இந்தியா ஆகிய மூன்று நூல்களும் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளிவந்துள்ளது. எனது புதிய நூல்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது ஆன்லைனில் வாங்க https://www.desanthiri.com/ தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93தொலைபேசி (044)-23644947desanthiripathippagam@gmail.com

கன்னடக் கதைகள்

எதிர் வெளியீடு கொண்டு வந்துள்ள வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் தொகுப்பை வாசித்தேன். கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். மலையாளச் சிறுகதைகள் அளவிற்குக் கன்னடச்சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தின் வழியே தேடி வாசிக்க ஒன்றிரண்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில் சமகாலக் கன்னடக்கதைகள் எப்படியிருக்கின்றன என்று அறிந்து கொள்வதற்கு இது சிறந்த அறிமுகத் தொகுப்பு. தமிழ் கதைகளோடு ஒப்பிடும் போது இந்தக் கதைகளின் களன்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் யதார்த்த …

கன்னடக் கதைகள் Read More »

கணேஷ் பாபு

சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு தீவிர இலக்கிய வாசகர். சமகால இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது படைப்புகளை தொடர்ந்து படித்து விமர்சனம் எழுதி வருபவர். 2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் இவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கில் சிறந்த கதையாக இவரது கதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது சமீபத்தில் அரூ இணைய இதழுக்காகக் கணேஷ் பாபு என்னை நேர்காணல் செய்தார். மிக விரிவான நேர்காணலிது. கேள்விகளை அனுப்பி வைக்கும்படி …

கணேஷ் பாபு Read More »