சிறப்பு சலுகை
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு. இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு. இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அறிஞர்கள். திரைக்கலைஞர்களின் சிறந்த நேர்காணல்களைக் கொண்ட யூடியூப் சேனல் Web of Stories. இதில் இரண்டு நிமிஷங்கள் முதல் ஐந்து நிமிஷங்கள் வரை சிறுசிறு பகுதியாக நேர்காணலை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சேனலில் பிரான்சின் முக்கிய எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமானJean-Claude Carrière நேர்காணல் உள்ளது. அவசியம் காண வேண்டிய நேர்காணலிது. Jean-Claude Carrière – A house with a history
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும். ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும் மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழையும் தமிழ் …
திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம் ••• அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக் கதை என் நண்பர்களின் …
எனது நாவல் உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. டிசி புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு மலையாளத்தில் எனது மூன்று நூல்கள் வெளியாக இருக்கின்றன.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த மண்ணுலகவாழ்வு போதும் என்று உதறி விடைபெற்றுவிட்டார். விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார். இந்த வாழ்க்கையைத் தேனை ருசித்துச் சாப்பிடுவது போலத் துளித்துளியாக அனுபவித்து வாழ்ந்தார். கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் எவருமில்லை.. …
கிஷோர் குமார் எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் குறித்து. *** சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது. இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது. முகலாய பேரரசரான அவுரங்கசீபின் இறுதிக் காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்த கொடுந் தனிமையை …
பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில் Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கிறார்கள். Editions Zulma என்ற பிரெஞ்சு பதிப்பாளர் இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் அவருடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். …
தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். இறுதி நிகழ்விற்குப் போக முடியவில்லையே எனக் கண்ணீர் பெருகுகிறது கரிசல் மண்ணிலிருந்து உருவான படைப்பாளிகள் அனைவருக்கும் அவரே பேராசான். ஞானத்தந்தை. நிகரற்ற எழுத்தாளராக மட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடி சிறை சென்ற போராளியாகவும் இருந்தவர் . கரிசல் நிலத்தின் தொல் நினைவுகள், வரலாறு யாவும் அவர் மூலம் எழுத்து வடிவம் பெற்றன. நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திய ஆய்வாளர். கரிசல் வட்டார அகராதியை …