அறிவிப்பு

கலைஞனின் காத்திருப்பு

கைதட்டுகள் போதும் –  சிறுகதை வாசிப்பனுபவம் தயாஜி – மலேசியா கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து  முடித்தேன். கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி பிரகாசிப்பவர்களும்  காணாமல்  போகிறவர்களும் …

கலைஞனின் காத்திருப்பு Read More »

ஆனந்த விகடனில்

இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

உடலின் அலைகள்

. பினா பாஷ்( Pina Bausch. )உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞர். இவரது Orpheus and Eurydice – Dance opera என்ற நடனநிகழ்வினைப் பற்றிய படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. 1994ல் பினா பாஷ் சென்னையில் நடனநிகழ்ச்சி நடத்திய போது நேரில் கண்டிருக்கிறேன். மேடையமைப்பும் ஒளியும் நடனமிடும் கலைஞர்களின் உடல்திறனும் வியப்பில் ஆழ்த்தியது. நடனக்கலைஞர் சந்திரலேகாவின் புதுவகை நடனங்களைக் கண்டு ரசித்திருந்த எனக்குப் பினா ஒப்பற்ற சாதனையாளராகத் தோன்றினார். அவர் சந்திரலேகாவின் நண்பர். இருவரும் இணைந்து …

உடலின் அலைகள் Read More »

காலம் சொல்லும் பெயர்கள்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது. காலம் சொல்லும் பெயர்கள்

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார். அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! …

‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம் Read More »

தவற விட்ட மீச்சிறு தருணம்

துணையெழுத்து குறித்த வாசிப்பனுபவம் கோபி சரபோஜி ———————————————– எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் …

தவற விட்ட மீச்சிறு தருணம் Read More »

மறைக்கப்பட்ட இந்தியா

‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது. இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது. நெடுநாள் திறக்கப்படாத …

மறைக்கப்பட்ட இந்தியா Read More »

காலத்தின் அடையாளம்

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ராயப்பேட்டையின் நினைவுகள் குறித்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை புதிய பகுதி ஒளிபரப்பாகும்.

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .