அறிவிப்பு

தேசாந்திரி அரங்கு

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 494 மற்றும் 495. எட்டாவது நுழைவாயிலின் இறுதியில் அமைந்துள்ளது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 9 வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது தினமும் காலை 11 மணி இரவு 8 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். எனது எல்லா நூல்களையும் தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் வருக

நீலம் இதழில்

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.

திரைப்படவிழாவில்

சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன். சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

கற்றுத் தரும் உலகம்

பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.

தாகூரைப் பற்றி

சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும். சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய …

தாகூரைப் பற்றி Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4

புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப கதையின் பாராக்களை படித்துப் போனால் எப்படியிருக்கும் என்ற சுவாரஸ்யமான விளையாட்டினை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. வீடியோ கேம் ஒன்றினை நீங்கள் புத்தகமாக உருமாற்றினால் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -3

குறத்தி முடுக்கின் கனவுகள் ஜி.நாகராஜன், சம்பத், காசியபன்,ஹெப்சிபா ஜேசுதாசன், வண்ணதாசன்,லா.ச.ரா, பஷீர், அக்ஞேயா, எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பேசத் தெரிந்த நிழல்கள் உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்கள். மற்றும் ஆசிய நாடுகளின் முக்கிய திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு. இருள் இனிது ஒளி இனிது பெட்ரிக்கோ பெலினி ,இங்மர் பெர்க்மன், அகிரா குரோசவா, டேவிட் லீன் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியத் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -3 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -2

சித்தார்த்தா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை கவிஞர் திருலோக சீதாராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அதன் புதிய பதிப்பை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஹெஸ்ஸே குறித்த விரிவான அறிமுகம் மற்றும் சித்தார்த்தா நாவல் பற்றிய எனது விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நூல் வெளியாகிறது. இதற்கு அனுமதி தந்த திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துறவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செல்லும் சித்தார்த்தன் என்ற இளைஞன் நாவலில் பகவான் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -2 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1

சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுகிறது. அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியாகின்றன சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கதைக்கம்பளம் என்ற பெயரில் ஏழு சிறு நூல்களாக முன்பு வெளியாகியிருந்தது. அதைத் தொகுத்து நான்கு நூல்கள் ஒன்று சேர்ந்த ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம் கடலோடு சண்டையிடும் மீன் என்ற தலைப்பில் வெளியாகிறது. அண்டசராசரம் நேதாஜியால் உருவாக்கபட்ட ஆசாத் வங்கியில் சேமித்து வைக்கபட்ட பணம், அவரது …

தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1 Read More »

சென்னை புத்தகக் கண்காட்சி

44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது