அறிவிப்பு

திசை எட்டும்

சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்

பொங்கல் புத்தகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5 தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும் வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது …

பொங்கல் புத்தகத் திருவிழா Read More »

துணையெழுத்து சிறப்பு பதிப்பு

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது இதன் விலை ரூ 475 தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு

கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது இதன் விலை ரூ 470. தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

ஏழாம் நாள் உரை -இதாலோ கால்வினோ

உலக இலக்கியச் சொற்பொழிவின் ஏழாம் நாள் உரை இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் பற்றியது. இன்று மாலை ஆறுமுப்பது மணிக்கு ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகும்

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி . திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார். நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். …

அஞ்சலி Read More »

ஆறாம் நாள் உரை – ஜாக் லண்டன்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் (The Call of the Wild) குறித்து உரையாற்றுகிறேன்.

வங்கச் சிறப்பிதழ்

சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது. தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள். வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் …

வங்கச் சிறப்பிதழ் Read More »