அறிவிப்பு

சிந்துபாத்தின் மனைவி

நாளை டிசம்பர் 13 ஞாயிறு மாலை தியேட்டர் லேப் அரங்கில் எனது சிந்துபாத்தின் மனைவி நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை ஜெயராவ் இயக்கியுள்ளார்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.முகவரிதியேட்டர் லேப்No 6 Mahaveer Complex, Munusamy Salai, K K Nagar West, Chennai – 600078,(Near Discovery book palace)Ph : 097888 58881

புதிய புத்தகங்கள் 6 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 5 அவளது வீடு

தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 3 அரூபத்தின் நடனம்

கடந்த ஓராண்டிற்குள் நான் பார்த்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளர்கள், ஓவியர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 2 வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள் 1 : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

கர்னலின் நாற்காலி

ஊரடங்கு காலத்தில் நான் இணையதளத்தில் எழுதிய 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற பெயரில் வெளியாகிறது. டிசம்பர் இறுதியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறும் தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

அந்திமழை 100

அந்திமழையின் நூறாவது இதழ் வெளியாகியுள்ளது. என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்திமழை துவங்கப்பட்ட நாளிலிருந்து அதை அறிவேன். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நண்பர்கள் பத்திரிக்கையுலகின் மீது ஆர்வம் கொண்டு சிற்றிதழாகத் துவங்கி பின்பு இணைய இதழ், அச்சிதழ், பதிப்பகம் என்று வளர்ந்திருக்கிறார்கள் நல்ல நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு அந்திமழையின் நண்பர்களே சாட்சி. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், பண்பாடு என அந்திமழையின் பரந்த பார்வையும் …

அந்திமழை 100 Read More »

தெலுங்கில்

அவன் பெயர் முக்கியமில்லை என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி.