அறிவிப்பு

கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு

கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது இதன் விலை ரூ 470. தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

ஏழாம் நாள் உரை -இதாலோ கால்வினோ

உலக இலக்கியச் சொற்பொழிவின் ஏழாம் நாள் உரை இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் பற்றியது. இன்று மாலை ஆறுமுப்பது மணிக்கு ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகும்

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி . திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார். நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். …

அஞ்சலி Read More »

ஆறாம் நாள் உரை – ஜாக் லண்டன்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் (The Call of the Wild) குறித்து உரையாற்றுகிறேன்.

வங்கச் சிறப்பிதழ்

சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது. தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள். வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர். இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் …

வங்கச் சிறப்பிதழ் Read More »

நான்காம் நாள் பேருரை

ஏழு உலக இலக்கியப் பேருரைகளில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய – “கிம்பல் மற்றும் கதைகள்” குறித்த உரை இன்று மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021

அரூ இணையதளம் அறிவித்துள்ள அறிவியல் சிறுகதைப் போட்டி. கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். போட்டியின் விதிமுறைகள்அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் …

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 Read More »

இரண்டு பரிசுகள்

ஒரு நண்பர் ரஷ்யாவிலிருந்து டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவச்சிலைகளை பரிசாக வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். எனக்கு விருப்பமான படைப்பாளிகள் எனது படிப்பறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்