அறிவிப்பு

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

அமெரிக்காவில் வசிக்கும் வித்யா சுபாஷ்  கதைகேளு கதை கேளு என்ற ஆடியோ ஒலிப்பரப்பில் எனது தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதையைச் சிறப்பாக பேசியிருக்கிறார். அவரது குரலின் வழியே குளிரையும், வெளிச்சத்தையும் நெருக்கமாக அனுபவிக்க முடிகிறது. அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. Writer: S. Ramakrishnan Narrator: Vidhya Subash Audio Credit : Vidhya Subash இணைப்பு :

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பர் கருப்பு கருணா மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய தோழன். திருவண்ணாமலை என்றாலே கருணாவும் பவாவும் தான். நானும் கோணங்கியும் எந்த இரவிலும் வந்து சேருவோம். அன்பு காட்டி ஆதரவு கொடுத்த தோழமைகள். எத்தனை நிகழ்வுகளை கருணாவும் பவாவும் நடத்தியிருக்கிறார்கள். மறக்க முடியாத நினைவுகள். கண்ணீர் கசிகிறது. அன்பின் நண்பன் கருணா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆங்கிலத்தில்

உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் கிறுகிறு வானம் நாவலின் ஆங்கில் மொழியாக்கம் எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் தேசாந்திரியில் கிடைக்கிறது

தெலுங்கு மொழியாக்கம்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு தெலுங்கில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. நைல் நதி சாட்சிகா என்ற தலைப்பில் இந்த தொகுப்பு வெளியாகிறது. ஜி.பாலாஜி எனது யாமம் நாவலை முன்னதாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்த தருணத்தில் தெலுங்கில் இந்த கதைகள் வெளிவர முன்முயற்சி எடுத்த நண்பர் குறிஞ்சி வேலன் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தக வெளியீட்டுவிழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 மாலை எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேரலையில் நடைபெறவுள்ளது. அதன் அழைப்பிதழைப் பகிர்ந்திருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இந்த நேரலை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ஸ்ருதி டிவி யூடியூப் பக்கம் மற்றும் ஸ்ருதி டிவி முகநூல் பக்கத்தில் இந்த நேரலை ஒளிபரப்பாகும்.

இலக்கியப் பேருரை

டிசம்பர் 18 வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு பி ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் கிரேக்க நாடகமான ஈடிபஸ் குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் சிறிய இடம் என்பதால் குறைவான நபர்களே கலந்து கொள்ள முடியும், ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம். 9042461472 தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். முகவரி பி ஃபார் புக்ஸ் எஸ் ஜிபி நாயுடு காம்ப்ளெக்ஸ் தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம்பாரதியார் பார்க் எதிரில் வேளச்சேரி சென்னை 31

நேரலை நிகழ்ச்சி

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது. வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை. ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம். நேரலை …

நேரலை நிகழ்ச்சி Read More »

சிந்துபாத்தின் மனைவி

நாளை டிசம்பர் 13 ஞாயிறு மாலை தியேட்டர் லேப் அரங்கில் எனது சிந்துபாத்தின் மனைவி நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை ஜெயராவ் இயக்கியுள்ளார்.அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.முகவரிதியேட்டர் லேப்No 6 Mahaveer Complex, Munusamy Salai, K K Nagar West, Chennai – 600078,(Near Discovery book palace)Ph : 097888 58881

புதிய புத்தகங்கள் 6 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது