அறிவிப்பு

ஆவநாழி

ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது. சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் …

ஆவநாழி Read More »

24 சிறுபாடல்கள்

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமகாலக் கவிஞர்கள் பற்றிய கவிதையின் கையசைப்பு என்ற தடம் இதழில் வெளியான பத்தியிலும் அவரைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். கவிஞர் சமயவேல் அவரது பத்து கவிதைகளை மொழியாக்கம் செய்து உதவியிருந்தார். தேர்வு செய்யப்பட்ட கோ யுன் கவிதைகளை 24 சிறுபாடல்கள் என்ற தொகுப்பாக விவேக் கிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். விவேகானந்தன் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இது …

24 சிறுபாடல்கள் Read More »

புயலுக்குப் பின்பு

நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது. அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் …

புயலுக்குப் பின்பு Read More »

கனலி ஜப்பானிய சிறப்பிதழ்

இந்த ஆண்டிற்கான எனது புதிய புத்தகங்களின் தயாரிப்புப் பணிகள் காரணமாக இணையத்தில் வெளியாகும் இதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. கனலி இணைய இதழ் வெளியிட்டுள்ள ஜப்பானியச் சிறப்பிதழைத் தினமும் ஒன்றிரண்டு எனக் கடந்த பத்து நாட்களாக வாசித்தேன். கனலியின் ஜப்பானியச் சிறப்பிதழ் மிக முக்கியமான பங்களிப்பு. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள் எனச் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். மிகச்சிறப்பான மொழியாக்கங்கள். நேர்த்தியான வடிவமைப்பு. சிறுகதைகளில் என் கனவுகளின் கெண்டை மீன், கடைசிப் புகைப்பிடிப்பாளன், தூய …

கனலி ஜப்பானிய சிறப்பிதழ் Read More »

புதிய நாவல்

( முகப்பு அட்டை தற்காலிகமானது.) இன்று லியோ டால்ஸ்டாய் நினைவு நாள் நவம்பர் 20, 1910 ல் டால்ஸ்டாய் தனது 82வது வயதில் மறைந்தார். தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலே டால்ஸ்டாய் புதைக்கபட்டார்.  அவருக்குக் கல்லறை அமைக்கபடவில்லை. புல்வெளியில் தான் அவரது புதைமேடு காணப்படுகிறது. ஏழை விவசாயி ஒருவனைப் போலவே தானும் புதைக்கப்பட வேண்டும் என்று டால்ஸ்டாய் விரும்பினார். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் டால்ஸ்டாயை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவர் பற்றிச் …

புதிய நாவல் Read More »

ஏழுதலை நகரம்

சில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் …

ஏழுதலை நகரம் Read More »

அஞ்சலி

தமிழ் பதிப்புலகின் முன்னோடி ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தரத்தில் தமிழ் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நேர்த்தியான வடிவமைப்பு. அச்சாக்கம் எனப் புத்தக உருவாக்கத்தைக் கலைப்படைப்பாக மாற்றியவர். அவர் உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி ஈடு இணையற்றது. க்ரியா பதிப்பகம் போலப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அளவுகோலை பதிப்புலகிற்கு உருவாக்கித் தந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தேர்ந்த இலக்கிய வாசகர். மிகச்சிறந்த எடிட்டர். அவரது முயற்சியின் காரணமாகவே ஆல்பெர் …

அஞ்சலி Read More »