புதிய புத்தகங்கள் 5 அவளது வீடு
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
கடந்த ஓராண்டிற்குள் நான் பார்த்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாளர்கள், ஓவியர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
ஊரடங்கு காலத்தில் நான் இணையதளத்தில் எழுதிய 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற பெயரில் வெளியாகிறது. டிசம்பர் இறுதியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறும் தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
அந்திமழையின் நூறாவது இதழ் வெளியாகியுள்ளது. என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்திமழை துவங்கப்பட்ட நாளிலிருந்து அதை அறிவேன். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நண்பர்கள் பத்திரிக்கையுலகின் மீது ஆர்வம் கொண்டு சிற்றிதழாகத் துவங்கி பின்பு இணைய இதழ், அச்சிதழ், பதிப்பகம் என்று வளர்ந்திருக்கிறார்கள் நல்ல நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு அந்திமழையின் நண்பர்களே சாட்சி. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், பண்பாடு என அந்திமழையின் பரந்த பார்வையும் …
அவன் பெயர் முக்கியமில்லை என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி.
ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது. சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் …
கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமகாலக் கவிஞர்கள் பற்றிய கவிதையின் கையசைப்பு என்ற தடம் இதழில் வெளியான பத்தியிலும் அவரைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். கவிஞர் சமயவேல் அவரது பத்து கவிதைகளை மொழியாக்கம் செய்து உதவியிருந்தார். தேர்வு செய்யப்பட்ட கோ யுன் கவிதைகளை 24 சிறுபாடல்கள் என்ற தொகுப்பாக விவேக் கிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். விவேகானந்தன் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இது …