புயலுக்குப் பின்பு
நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது. அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் …
