அறிவிப்பு

வாழ்த்துகள்

நேற்று பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதிலும் தமிழிலே உரையாடியது மிகுந்த பாராட்டிற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தூத்துக்குடியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது முடிதிருத்தகத்தில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அதை ஆர்வத்துடன் படிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரைப் பாராட்டி எனது இணையதளத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பலரும் மாரியப்பனுடன் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். நேரில் சென்று வாழ்த்தைத் தெரிவித்தார்கள். …

வாழ்த்துகள் Read More »

தென்னிந்திய நாடகவிழாவில்

சங்கீத நாடக அகாதமியின் Festival of plays by Young Directors of South Zone நாடகவிழாவில் எனது அரவான் நாடகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த சுகுமார் சண்முகம் இயக்கியுள்ளார். முன்னதாக அவர் அரவான் நாடகத்தைப் புதுவையில் மேடையேற்றியபோது கண்டிருக்கிறேன். மிகச்சிறப்பான தயாரிப்பு. சுகுமார் சிறந்த நடிகர். நவீன நாடகங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். ஆரோவில் நாடகக் குழுவோடு இணைந்து ஆங்கில நாடகங்களிலும் பணியாற்றுகிறவர். திரைத்துறையிலும் நடிகர் தேர்வு …

தென்னிந்திய நாடகவிழாவில் Read More »

தெலுங்கில்

எனது கைதட்டல்கள் போதும் என்ற சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது.  sakshi  ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. தெலுங்கில் மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. Link : https://epaper.sakshi.com/2860049/Funday/18-10-2020#page/1/1

வாழ்த்துகள்

நவீனத் தமிழ் கவிதையின் தனித்துவமிக்க ஆளுமை கவிஞர் கலாப்ரியா. வடிவ ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தனது கவிதைகளில் இவர் நிகழ்த்திய பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திய குற்றாலம் கவிதைப்பட்டறை மறக்கமுடியாதது. கவிஞராக மட்டுமின்றி  நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார். தமிழ் விமர்சனவுலகில் தனித்துவமிக்க ஆளுமையாக விளங்குபவர் பேராசிரியர் பஞ்சாங்கம். பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப்புனைவுகள் வரை ஆழ்ந்து திறனாய்வு செய்து வருபவர். இவர்கள் இருவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் அண்ணன் கலாப்ரியா அவர்களுக்கும்,  பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தொடர்ந்து சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விளக்கு அமைப்பிற்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். ••

ஆசிய சினிமா இதழ்.

வீட்டில் ஏதோ புத்தகம் ஒன்றைத் தேடும் போது வாங்கிப்படித்து பாதுகாத்து வைத்திருந்த Cinemaya இதழ்கள் கையில் கிடைத்தன. எனது கல்லூரி நாட்களில் விரும்பி வாசித்த சினிமா இதழ் Cinemaya. டெல்லியிலிருந்து காலாண்டிதழாக வெளியானது. இந்த இதழை வாங்குவதற்காகவே திருவனந்தபுரம் போய் வருவேன். விருதுநகரிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் திருவனந்தபுரம் செல்வது பிடித்தமானது. மாதம் இரண்டு முறையாவது சென்றுவிடுவேன். நாலரை மணி நேரப்பயணம். மழைக்காலத்தில் பயணம் செல்லும் போது வழியெங்கும் பசுமை ததும்பி வழிய சிலுசிலுவெனக் காற்று வீசும். …

ஆசிய சினிமா இதழ். Read More »

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்  என்ற எனது சிறுகதை The Tenth Rasa  என்ற பென்குவின் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் லதா ராமகிருஷ்ணன். ••

காந்தி

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS

அஞ்சலி.

அன்பிற்குரிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயார்  திருமதி.ராஜாமணி அவர்கள் இன்று காலமானார். திருமதி.ராஜாமணி எங்கள் ஊருக்கே தாயாக விளங்கியவர். மல்லாங்கிணற்றில் அவர்களின் வீடு ஒரு அன்னசாலை. வீடு தேடி வந்தவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்த அன்பின் திருவுருவம். எங்கள் குடும்பத்தின் மீது அவர்கள் காட்டிய அன்பு நிகரற்றது. அன்னையை இழந்து வாடும் அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். ••

சபார்டி ஜோகோ தமோனோ

விருட்சன் என்ற புனைபெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் தமிழில் அதிகம் கவனிக்கப்படாத தென்கிழக்கு ஆசியக் கவிதைகளை ஆர்வத்துடன் மொழியாக்கம் செய்து வருகிறார். இவர் மொழியாக்கம் செய்து சிறுவெளியீடாக வெளியிட்டுள்ள சபார்டி ஜோகோ தமோனோ (Sapardi Djoko Damono ) இந்தோனோஷியாவின் முக்கியக் கவிஞர். அவரது கவிதைகளின் இரண்டு ஆங்கிலத் தொகுப்புகள் என்னிடமுள்ளன. அவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன். விருட்சன் சபார்டியின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல தேர்வு. மொழியாக்கத்தில் சில சொற்களைத் திருத்தம் செய்து மேம்படுத்தினால் …

சபார்டி ஜோகோ தமோனோ Read More »