அறிவிப்பு

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர். லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக …

பாரதி பாஸ்கர் Read More »

அகரமுதல்வன் உரை

நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம்  நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார் நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை  வழியாக நிகழ்வு நடைபெறும். Meeting Id  : 215 501 3891 Password  : 231764. தொடர்புக்கு : இரா. தமிழ் நேசன்

சுதிர் மிஸ்ரா

இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்.. சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார். ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய …

சுதிர் மிஸ்ரா Read More »

காகிதப்பறவைகள் குறித்து

இலக்கிய அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும் சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடும் நண்பர்கள் குழுவாக அசைவு உருவாக்கபட்டிருக்கிறது அசைவு இலக்கிய விவாதக் குழு நண்பர்கள் இம்முறை விவாதத்திற்கு எனது சிறுகதை காகிதப்பறவைகளைத் தேர்வு செய்து உரையாடியிருக்கிறார்கள். காகிதப்பறவைகள்  குறித்து விவாதித்த கருத்துக்கள் தொகுத்து கீழே பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. அசைவு இலக்கிய விவாதக்குழு நண்பர்கள் ம.கண்ணம்மாள், க.விக்னேஷ்வரன், சரவணன் மாணிக்க வாசகம், சுஷில் குமார், சக்திவேல், சுஜா, நவீன், காயத்ரி, பால ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் …

காகிதப்பறவைகள் குறித்து Read More »

இசையால் வென்றவர்.

நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது. நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும்  பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள். நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு …

இசையால் வென்றவர். Read More »

ஜானகிராமனின் ஜப்பான்.

எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது ஜப்பானிய பயணநூலான உதயசூரியன் குறித்த உரை ஒன்றை வெளியிட்டுள்ளேன் தேசாந்திரி Youtube page ல் இதனைக் காணலாம் இணைப்பு: https://youtu.be/9UFRomzf3LY

காந்தி சிறுகதை

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திர ஜோதி ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. இதனை சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியை சேர்ந்த ஜி. பாலாஜி. இந்தக் கதையை வாசித்துவிட்டு ஆந்திராவிலிருந்து நிறைய பாராட்டு செய்திகள் மின்னஞ்சலில் வந்தவண்ணம் இருக்கின்றன. கடப்பா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஒரு டாக்டர் தன் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை படித்ததில்லை என்று சிறந்த பாராட்டுரை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  இன்னொரு மொழியில் எனது கதை இத்தனை தீவிரமாக வாசிக்கபட்டு …

காந்தி சிறுகதை Read More »

இரண்டு ஆவணப்படங்கள்

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீர் குறித்த ஆவணப்படம். பஷீரின் கதைகள் மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அழகாக எடுத்துக்காட்டுகிறது. பஷீரின் வீடு. அவரது மனைவியின் நேர்காணல், பஷீர் குறித்த நாடகம் என நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த ஆவணப்படம் My Name Is Basheer https://youtu.be/9-Tm24XRRCE ••• குஞ்ஞுண்ணி  மலையாளத்தின் முக்கியக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னஞ்சிறிய கவிதைகளின் மூலம்  அற்புதமான கவித்துவ அனுபவங்களை வெளிப்படுத்தியவர். அவரது …

இரண்டு ஆவணப்படங்கள் Read More »

இலக்கியச் சிந்தனை பரிசு

எனது சிறுகதை சிற்றிதழ் 2019ம் ஆண்டிற்கான இலக்கியச் சிந்தனை பரிசு  பெற்றுள்ளது. இந்தக் கதை ஆனந்தவிகடனில் வெளியானது. ஆண்டு தோறும் ஏப்ரலில் நடைபெறும் பரிசளிப்பு விழா இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. இந்தச் சிறுகதையை உள்ளடக்கிய 12 கதைகள் சேர்ந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். ••

துருபத்

ஹிந்துஸ்தானி இசையின் துருபத் குறித்த இயக்குநர் மணிகௌலின் மிக முக்கியமான படைப்பு. இதைக் காணும் போது மெய்மறந்து போய்விடுகிறது பரவசமூட்டும் அனுபவம் தரும் மிகச்சிறந்த ஆவணப்படம்.. பிலிம் டிவிசன் தயாரிப்பில் உருவானது. இணைப்பு: https://youtu.be/Lye2FSx0F4c