சுதிர் மிஸ்ரா
இந்தி திரைப்பட இயக்குநர் சுதிர் மிஸ்ரா பற்றிய ஆவணப்படத்தில் அவர் தான் படித்த சாகர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே உள்ள மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் உரையாடுகிறார். அப்போது இந்திய இலக்கியத்தில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்கிறார். ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மாணவன் மட்டும் பிரேம்சந்த் என்கிறான்.. சமகால எழுத்தாளர்கள் ஒருவரையும் படிக்கவில்லையா என்று மறுபடியும் கேட்கிறார். ஒரு மாணவன் மட்டும் சேதன் பகத் என்கிறான். இப்படித்தானிருக்கிறது நமது கல்விமுறை. யாரும் எந்த முக்கிய …