தெலுங்கு இதழில்
எனது சிறுகதை விரும்பிக் கேட்டவள் ஜி. பாலாஜி அவர்களால் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது
எனது சிறுகதை விரும்பிக் கேட்டவள் ஜி. பாலாஜி அவர்களால் தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சென்னையும் நானும் தொடரின் ஒன்பதாவது பகுதி வெளியாகியுள்ளது. காணொளி இணைப்பு : https://youtu.be/FPBScxhdi7w
மும்பை Gateway Litfest 2020 விழாவில் கலந்து கொள்கிறேன். இதற்காக பிப்ரவரி 14 முதல் 16 வரை மும்பையில் இருக்கிறேன். விருப்பமான நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.
பிப்ரவரி 1 மாலை யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியீடு திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மகாராணி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் நூலை வெளியிட்டார். ISRO முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் நூலைப் பெற்றுக் கொண்டார். எம். ஆர். தம்பான். ஸ்ரீஷா சேதுராமன், டாக்டர் விலாக்குடி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு நாவல் குறித்து உரை நிகழ்த்தினார்கள். நிகழ்விற்குக் கவிஞர் சுகுமாரன், ஜி. ராஜேந்திரன் IAAS ஆகியோர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன் இல்லத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். …
தகடூர் புத்தக பேரவையின் சார்பில் 26.01.2020 அன்று தருமபுரியில் நடைபெற்ற புத்தக அறிமுகம்-5 நிகழ்ச்சியில் எனது சிறார் நூலான முட்டாள்களின் மூன்று தலைகள் குறித்து ஸ்ரீதுர்கா என்ற சிறுமி சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். ஸ்ரீதுர்காவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். நிகழ்வை ஏற்பாடு செய்த தகடூர் புத்தக பேரவைக்கு அன்பும் பாராட்டுகளுக்கும்.. இணைப்பு https://youtu.be/IhNGVf5Q7i8 •• 30.1.20
நாளை சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ்துறை சார்பாக நடைபெறும் நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துகிறேன் 27.01.20
யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதற்கான விமர்சனம்.
ஒலைக்கிளி என்ற எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர் ஜி. பாலாஜி
நேற்று விகடன் நம்பிக்கை விருது விழாவில் அலெக்ஸ் பால் மேனன் IAS அவர்களைச் சந்தித்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சில தினங்களுக்கு முன்பாக அவர் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கிற்கே வந்திருந்தார் என்றார்கள். அன்று சந்திக்க முடியவில்லை. ஆனால் நேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு தேடித்தேடி படித்திருக்கிறார். இலக்கியத்தின் மீது எவ்வளவு பற்றுதல் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பழங்குடி மக்கள் நிரம்பிய பகுதியில் பணியாற்றியவர் என்பதால் அவரது …
எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் பிப்ரவரி 1 , 2020 மாலை திருவனந்தபுரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரம் வருகிறேன். பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களும் திருவனந்தபுரத்தில் இருப்பேன்