நன்றி நண்பர்களே
புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடியதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், அன்பைப் பெற்றதும் மறக்க முடியாதது. இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் என்ன நன்றி சொல்லிவிட முடியும். என் கைகளைப் பற்றிக் கொண்டு வாசகர்கள் பேசிய சொற்கள் தான் என் எழுத்திற்கான உண்மையான அங்கீகாரம். விருது. இந்த அன்பின் துணை தான் ஒரு எழுத்தாளனாக என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. இந்த ஆண்டு நிறைய இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் …