அறிவிப்பு

நன்றி நண்பர்களே

புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடியதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், அன்பைப் பெற்றதும் மறக்க முடியாதது. இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் என்ன நன்றி சொல்லிவிட முடியும். என் கைகளைப் பற்றிக் கொண்டு வாசகர்கள் பேசிய சொற்கள் தான் என் எழுத்திற்கான உண்மையான அங்கீகாரம். விருது. இந்த அன்பின் துணை தான் ஒரு எழுத்தாளனாக என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. இந்த ஆண்டு நிறைய இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் …

நன்றி நண்பர்களே Read More »

ரஷ்ய இலக்கியங்கள்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மக்கள் ரஷ்ய இலக்கியங்களைப் பெருவாரியாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும், செகாவும் துர்கனேவும், புஷ்கினும் கார்க்கியும் இவ்வளவு ஆசையாக வாசிக்கப்படுவதைக் காணுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முப்பது பேர் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களில் என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார்கள். தமிழின் இளந்தலைமுறை தஸ்தாயெவ்ஸ்கியை, டால்ஸ்டாயை ,செகாவை வாசிக்கத் துவங்கியிருப்பது ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. ரஷ்ய இலக்கியங்களை ஆதர்சமாகக் கொண்டவன் என்ற முறையில் இதுவே …

ரஷ்ய இலக்கியங்கள். Read More »

புத்தகத் திருவிழா பரிந்துரை -1

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் என்ற அரிய நூலை நேற்று விருட்சம் கடையில் வாங்கினேன். வால்டெர் ஏரிஷ் ஷேபேர் என்ற ஜெர்மானிய நாடக ஆசிரியர் எழுதிய ரேடியோ நாடகமிது. கூத்துப்பட்டறை இந்த நாடகத்தை மேக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்திய போது கண்டிருக்கிறேன். அற்புதமான நாடகமிது. ஏ.கே. கோபாலன் பப்ளிஷர் இதை வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலின் பழைய பிரதிகள் தற்போது ரூ 25க்குக் கிடைக்கிறது. இந்த நூல் இனி மறுபதிப்பு வருவது சந்தேகமே. விருப்பமானவர்கள் உடனே விருட்சம் அரங்கில் …

புத்தகத் திருவிழா பரிந்துரை -1 Read More »

சென்னையும் நானும் -8

சென்னையும் நானும் காணொளித் தொடரின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது தேசாந்திரி youtube channel ல் இதனைக் காணலாம் இணைப்பு : https://youtu.be/gwOEoFdBKjg ••

தி இந்து நாளிதழ் தொடர்

தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகிவரும் எனது வெண்ணிற நினைவுகள் என்ற பத்தி சென்னை புத்தகத் திருவிழா முடியும் வரை வெளியாகாது. புத்தகத் திருவிழா குறித்த சிறப்பு செய்திகள் நாளிதழில் அதிகம் இடம்பெறுவதால் ஆசிரியர் குழு இதனை முடிவு செய்திருக்கிறார்கள் ஜனவரி 21க்குப் பிறகு  ஞாயிறு தோறும் பத்தி இடம் பெறும்.

புத்தகத் திருவிழா -3

புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தீராத நன்றிக்குரியது.

திரையிடல்

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கிய மை டியர் செகாவ்-  குறும்படம் சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் 16  ஜனவரி வியாழன் மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது. குறும்படங்களைத்  திரையிடுவதற்காக புத்தக கண்காட்சி சிறப்பு அரங்கு ஒன்றை அமைத்துள்ளது. அங்கே இந்தக் குறும்படம் திரையிடப்படுகிறது. இந் நிகழ்வில் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுமென அழைக்கிறேன்

புத்தகத் திருவிழாவில் -2

சென்னை புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 தயாராகிவிட்டது. ஜனவரி 21 வரை எல்லா நாட்களும் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். விருப்பமானவர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.

2019 சிறந்த புத்தகங்கள்- 15

சுருக்கமான தென் இந்திய வரலாறு :  நொபோரு கராஷிமா தமிழில் முனைவர் ப . சண்முகம். நொபோரு கராஷிமா தமிழக வரலாற்றைச் சிறப்பாக ஆராய்ந்து வரும் ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர். இவர் தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கிறார். A concise History of South India: Issues and interpretations. என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், இதனை வெளியிட்டுள்ளது.

2019 சிறந்த புத்தகங்கள் – 14

எழுதாப் பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் ஆட்டிசம் பாதிப்புக் கொண்ட கனி என்ற தனது மகனை வளர்ப்பதிலும் கல்வி நிலையத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதிலும் அவரது அன்னை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பட்ட கஷ்டங்களையும் படிப்பினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம். ஆங்கிலத்தில் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mothers Heart : How Suffering Refutes வாசித்தபோது கலங்கிப்போனேன். அதைவிடச் சிறப்பாகவே லக்ஷ்மி …

2019 சிறந்த புத்தகங்கள் – 14 Read More »