இலக்கியம்

கதைகளின் வழியே

எழுத்தாளர் வால்டர் பெஞசமின் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை விளக்கி The Storyteller Essays என ஒரு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான கட்டுரைகள் உள்ளன. அதில் உள்ள ஒரு கட்டுரையில் கதைகளில் சில விஷயங்கள் ஏன் என்று விளக்கப்படாமல் விடப்படுகின்றன. அந்த விடுபடல் தான் கதையின் சுவாரஸ்யம். அதுவே கதைகளைக் காலம் தாண்டி பேசவைக்கின்றன என்கிறார். பாரசீக பேரரசர் காம்பிசஸால் தோற்கடிக்கப்பட்டா மன்னர் சம்மேனிடஸ் தனது மகள் சிறைபிடிக்கப்பட்டபோதோ, மகன் மரணதண்டனையை நோக்கிச் செல்லும் போதோ கண் …

கதைகளின் வழியே Read More »

வேம்பலையின் மனிதர்கள்

ஜேகே நெடுங்குருதி நாவல் குறித்த விமர்சனம் புத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். …

வேம்பலையின் மனிதர்கள் Read More »

வெளிச்சத்தைத் தேடி

பாவண்ணன் – “செகாவின் மீது பனி பெய்கிறது” – விமர்சனக் கட்டுரை (திண்ணை இணைய இதழில் வெளிவந்தது) ••• தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் …

வெளிச்சத்தைத் தேடி Read More »

வெளியில் ஒருவன்

எனது முதற்புத்தகம் வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவர ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் தமிழ்செல்வன். அவரே கதைகளைத் தேர்வு செய்து தொகுப்பை உருவாக்கிவிட்டார். நான் பதிப்பாளரைச் சந்திக்கவேயில்லை. இப்படி ஒரு அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அந்த வகையில் அண்ணன் தமிழ்செல்வனை என்றும் நன்றியோடு நினைவு கொள்வேன். திருநெல்வேலியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டு அரங்கில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதற்காக என்னை அழைத்தபோது தான் புத்தகம் வெளிவரப்போகும் தகவலே …

வெளியில் ஒருவன் Read More »

வகுப்பறையின் பாடல்

சிறந்த சிறார் எழுத்தாளரான ஷெல் சில்வர்ஸ்டைன்(Shel Silverstein) எழுதிய சிறார் பாடல்களையும் கதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன். இவரைப் போலவே  ரோல்ட் டாலின் (Roald Dahl) கதைகளையும் தேடிப் படித்திருக்கிறேன். இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த சிறார் எழுத்தாளர், பாடலாசிரியர். ஆலன் ஆல்பெர்க் (Allan Ahlberg), இவர் எழுதிய கதைகளுக்கு அவரது மனைவி ஜேனட் ஆல்பெர்க் அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஆலன். பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற இந்த …

வகுப்பறையின் பாடல் Read More »

உண்மையின் அடையாளம்

இந்து தமிழ் திசை நாளிதழில் நான் எழுதிய சிறந்த தமிழ் படங்கள் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெண்ணிற நினைவுகள் என தனி நூலாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரை •• ஒரு தமிழ்ப் படத்தின் தொடக்கத்தில் அந்தப் படத்தின் கதையை உருவாக்க எந்தெந்தப் புத்தகங்களெல்லாம் துணையாக இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்ட ஒரே படம் ‘சிவகங்கை சீமை’. படத்தின் டைட்டில் காட்சியில் ‘சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும்’, ‘திருநெல்வேலி மானுவல்’, ‘ராமநாதபுரம் …

உண்மையின் அடையாளம் Read More »

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது “அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி. “பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத் கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை …

கோடைகாலப் பறவை Read More »

ரெட் பைனின் பயணம்

முப்பது நாட்களில் முப்பது கவிஞர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுச் சீனாவில் ரெட் பைன் பயணம் செய்த அனுபவத் தொகுப்பே Finding Them Gone. வித்தியாசமான பயணநூல். இரண்டு வேறு காலங்களுக்கு இடையே அவர் பயணம் செய்து திரும்பியதை உணர முடிகிறது பீஜிங்கிலிருந்து தனது பயணத்தைத் துவங்கும் ரெட்பைன் மின்சார ரயிலில் சென்று கன்பூசியஸின் சொந்த ஊரை முதலில் காணத் திட்டமிடுகிறார். சீனாவின் அதிநவீன ரயில் சேவை பிரமிப்பூட்டக்கூடியது. ரயில் நிலையங்கள் விமானநிலையம் போலவே அமைக்கப்பட்டிருப்பதையும், …

ரெட் பைனின் பயணம் Read More »

ரெட் பைனின் சீனக்கவிதைகள்

சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது. பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார். இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் …

ரெட் பைனின் சீனக்கவிதைகள் Read More »

வாழ்வின் நிமித்தம்

திப்பு சுல்தான் நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம் •• நிமித்தம், நான் பல முறை படித்த புத்தகம் மட்டுமல்ல என்றெல்லாம் யாரையெல்லாம் தனிமை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் அவர்களெல்லாம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் …

வாழ்வின் நிமித்தம் Read More »