இலக்கியம்

கடல் கடந்த கடிதங்கள்.

ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி …

கடல் கடந்த கடிதங்கள். Read More »

ஐன்ஸ்டீனின் கனவுகள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள்.  ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை. இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் …

ஐன்ஸ்டீனின் கனவுகள் Read More »

தனிமையின் கண்கள்.

இளங்கவிஞரான வே.நி.சூர்யா மிகச் சிறப்பான கவிதைகளை எழுதி வருகிறார். கரப்பானியம் என்ற அவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இதனைத் சால்ட் பதிப்பகம் வெளியீட்டுள்ளது அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகும் கவிதைகளும் அற்புதமாக உள்ளன. இணையம் மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கவிதைகள் தனித்துவமான குரலில் ஒலிக்கின்றன. தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவரது …

தனிமையின் கண்கள். Read More »

இரண்டு விநோதக் கதைகள்

குளிர்சாதனப் பெட்டி இசபெல் ஸாஜ்ஃபெர் தமிழில் : லதா ராமகிருஷ்ணன் என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் – ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே …

இரண்டு விநோதக் கதைகள் Read More »

ரஷ்யாவும் தமிழும்

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துபியான்ஸ்கி  மறைவை ஒட்டி ஈழத்தின் முக்கிய எழுத்தாளரான சாந்தன் பகிர்ந்துள்ள இந்தக் கட்டுரை சோவியத் நாட்டில் நடைபெற்ற தமிழாய்வுகள் குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. •• சோவியத்தில் தமிழாய்வு – ஐயாத்துரை சாந்தன் ரஷ்ய மற்றும் சோவியத் இலக்கியங்கள் தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஓரு நீண்ட தனி ஆய்வுக்குரியவை. இவை தவிர்ந்த பிற தொடர்புகள் பற்றிய சில தகவல்களைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம். தமிழ்மொழி பற்றிய ஆர்வமும் அதனைப் …

ரஷ்யாவும் தமிழும் Read More »

பதவிக்குப் பின்னால்.

‘கே பிளான்’ எனப்படும் “காமராஜர் திட்டம்”இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நேரு பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினுள் நிறையப் பதவிச் சண்டைகள். போட்டிகள் உருவாகின. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட காலம் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தைக் காமராஜர் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது பற்றி இன்று வரை …

பதவிக்குப் பின்னால். Read More »

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலிலிருந்த எழுத்தாளர்களில் எவரது புத்தகமாவது தமிழில் வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். ஒன்று கூட வெளியாகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பேசப்பட்ட கவிதை, நாவல். சிறுகதை கட்டுரை தொகுப்புகள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்தாலும் ஒன்றும் வெளியாகவில்லை. உரிமை பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பது பெரிய முயற்சி. நிறையப் பொருட்செலவு கொண்டது என்கிறார்கள். அது உண்மையே. மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்களே கூட நோபல் பரிசு பெற்றுள்ள ஒன்றிரண்டு …

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். Read More »

ஆர்மேனியச் சிறுகதைகள்

ஆர்மேனியச் சிறுகதைகள் நூலை வல்லிக்கண்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச்சிறந்தவை. இணையத்தில் தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/175-armeniyachchirukathaikal.pdf இந்தத் தொகுப்பிற்கு அசோகமித்ரன் எழுதியுள்ள முன்னுரை ஆர்மேனியர்களின் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து மிக நுட்பமாக விவரிக்கிறது. எவ்வளவு அரிய தகவல்கள். உண்மைகள். அசோகமித்ரனுக்கே உரித்தான நகைச்சுவை இதிலும் வெளிப்படுகிறது. அபூர்வமான முன்னுரையது. ••• “அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிறார்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிறார்கள். “ இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காகச் …

ஆர்மேனியச் சிறுகதைகள் Read More »

எழுத்தின் மொழி

சாகித்ய அகாதமி 2007ம் ஆண்டு முதல் பிரேம்சந்த் ஃபெலோஷிப்பை வழங்கி வருகிறது. சார்க் நாடுகளில் வாழும் ஒரு எழுத்தாளரைத் தேர்வு செய்து இந்த நல்கை அளிக்கிறார்கள். 2018ம் ஆண்டிற்கான பிரேம்சந்த் ஃபெலோஷிப் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியான ஐயாத்துரை சாந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு நான் சாகித்ய அகாதமி விருது பெற டெல்லி சென்றிருந்த போது சாந்தனைச் சந்தித்து உரையாடினேன். சென்னைக்கு அவர் வந்திருந்த போதும் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர். 50 …

எழுத்தின் மொழி Read More »

ரில்கேயின் காதலி.

எழுத்தாளரும், முதல் பெண் மனோதத்துவ நிபுணருமான லூ ஆண்ட்ரியாஸ்- சலோமே கவிஞர் ரில்கேயின் காதலியாக இருந்தவர், தத்துவவாதியான நீட்சே இவரைத் தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சலோமே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே வாழ்க்கையை விவரிக்கும் Lou Andreas-Salomé என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஜெர்மானிய பெண் இயக்குநரான Cordula Kablitz-Post இயக்கியது. சர்வதேச திரைப்படவிழாவில் இத் திரைப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை கோர்டுலா கப்லிட்ஸ்-போஸ்ட் பெற்றிருக்கிறார் லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே படம், முதுமையில் …

ரில்கேயின் காதலி. Read More »