ஒரே ஒரு ஊரிலே
மலையாளச் சிறுகதை பால் சக்கரியா தமிழில்: எம்.எஸ். ஒரே ஒரு ஊரிலே ஒரு வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியின் ஒரு மூலையில் ஒரு மீன் குளம் இருந்தது. அதில் சில தவளைகளும் வசித்து வந்தன. தவளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காரணம், மழைக்காலங்களில் இரவு முழுதும் கலங்கிய நீரில் தாய்த் தவளைகள் அழுது அழுது இடும் முட்டைகளின் கரிய மாலைகளின் பெரும் பகுதியும் குளத்தில் வாழும் கொழுத்த மீன்களுக்கும், நீண்ட கம்புகள் ஏந்திய அந்த வீட்டுக் குழந்தைகளின் வேடிக்கைக்கும் …