இலக்கியம்

ஒரே ஒரு ஊரிலே

மலையாளச் சிறுகதை பால் சக்கரியா தமிழில்: எம்.எஸ். ஒரே ஒரு ஊரிலே ஒரு வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியின் ஒரு மூலையில் ஒரு மீன் குளம் இருந்தது. அதில் சில தவளைகளும் வசித்து வந்தன. தவளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காரணம், மழைக்காலங்களில் இரவு முழுதும் கலங்கிய நீரில் தாய்த் தவளைகள் அழுது அழுது இடும் முட்டைகளின் கரிய மாலைகளின் பெரும் பகுதியும் குளத்தில் வாழும் கொழுத்த மீன்களுக்கும், நீண்ட கம்புகள் ஏந்திய அந்த வீட்டுக் குழந்தைகளின் வேடிக்கைக்கும் …

ஒரே ஒரு ஊரிலே Read More »

மழைப்பயணி.

புதிய சிறுகதை •• பைக்கை தள்ளிக் கொண்டு ராதிகா சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. இப்படி வழியில் பைக் ரிப்பேர் ஆகிவிடும் என்று அவள் நினைக்கவில்லை. ராதிகாவிற்கு இருபத்திநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. கறுப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ். மெலிந்த உடல்வாகு. கௌகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் அந்த மலைப்பாதையில் ஆள் நடமாட்டமில்லை. நீண்டு வளைந்து செல்லும் பாதையில் மஞ்சள் வெயில் மினுங்கிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தின் மாலைநேரம் பேரழகு மிக்கது. அந்தப் பாதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் …

மழைப்பயணி. Read More »

இலக்கிய முகவர்

நார்டின் கோடிமர் தனது நேர்காணல் ஒன்றில் தான் எந்தப் பத்திரிக்கைக்கும் கதையை அனுப்புவதேயில்லை. எழுதத் துவங்கிய நாள் முதல் தனது கதைகளைத் தனது இலக்கிய முகவராக (Literary Agent) செயல்பட்ட சிட்னி தான் அனுப்பி வைப்பார். தனது புத்தகங்களை அமெரிக்காவின் முக்கியப் பதிப்பகங்கள் வெளியிடுவதற்கும் அவரே காரணம். ஆகவே பத்திரிக்கைகளுக்குக் கதையை அனுப்பி விட்டுக் காத்திருப்பது என்ற பழக்கமே தனக்குக் கிடையாது என்கிறார். தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இது போன்ற வசதியோ, உதவியோ கிடையாது. கதைகளை அனுப்பி …

இலக்கிய முகவர் Read More »

சிறுகதை குறித்து

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று பொருட்களை கொடுத்தவரிடம் ஒப்படைப்பது. பௌத்த சூத்திரங்களாலான ஒரு நூலை …

சிறுகதை குறித்து Read More »

புகைப்படங்களின் எதிரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே.டி.சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013ல் வெளியான இந்தப் படத்தை Shane Salerno தயாரித்திருக்கிறார் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.பெரும்பாலும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன.தமிழின் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன்.அம்ஷன்குமார் இயக்கிய ஆவணப்பபடங்களைக் குறிப்பிடலாம். சாகித்யஅகாதமியே ஆண்டு தோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.அவற்றில் …

புகைப்படங்களின் எதிரி Read More »

ஒரே மனிதன்

தி. சுபாஷிணி அவர்கள் காந்தி கல்வி நிலையத்தில் நடைபெற்ற புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றினைக் குறித்து 2011ல்  இந்தப் பதிவினை எழுதியிருக்கிறார். அதை மீள்பதிவு செய்திருக்கிறேன் •• வெங்கட் நாராயண சாலையில் தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்தினுள் “காந்தி கல்வி நிலையம் உள்ளது..  இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கே ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் …

ஒரே மனிதன் Read More »

மழையின் மனிதர்கள்

வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு தமிழ் நாவல்களில் அபூர்வமானது. மிகச்சிறப்பான நாவல். சிறந்த ஐரோப்பிய நாவல்கள் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற நாவல்களை வெளியிட்டார்கள். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய  நாவலிது. வண்ணநிலவனின் கம்பாநதியும், கடல்புரத்திலும் வேறுபட்ட கதைக்களன்கள். மொழி நடை கொண்டவை. ஆனால் ரெயினீஸ் ஐயர் தெருவின் எழுத்துமுறை முற்றிலும் கவித்துவமானது. கிறிஸ்துமஸ் பண்டிகை சமயங்களில் கேரல் பாடியபடியே வருபவர்களைக் காணும் சந்தோஷம் போன்றது. நீர்வண்ண ஓவியங்களுக்கெனத் தனி அழகு இருக்கிறது. அப்படித் தான் …

மழையின் மனிதர்கள் Read More »

கல்பற்றா நாராயணன்

இணையத்தில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை என்று கல்பற்றா நாராயணன் கவிதை ஒன்றை நண்பர் முரளி அனுப்பியிருந்தார். மிகவும் அற்புதமான கவிதை. பிறந்தநாளைப் பற்றிய மனப்பிம்பத்தை ஒரு நொடியில் கவிதை மாற்றிவிடுகிறது. பிறந்தநாளில் விரல்களுக்கும் வயதாகுமா எனச் சிறுமி கேட்பது அபாரம்.  முல்லா கதை ஒன்றில்  தனது தலைமுடிக்குத் தன்னை விட வயது அதிகம் என்று சொல்லுவார் முல்லா. அது இக்கவிதையை வாசிக்கையில் நினைவில் வந்து போனது.  கல்பற்றா மலையாளத்தின் மிக முக்கிய கவிஞர். அவரது சுமித்ரா என்ற …

கல்பற்றா நாராயணன் Read More »

பறவை

பதாகை இணைய இதழில் வெளியாகியுள்ள ஸ்ரீதர் நாராயணன் கவிதை மிகச்சிறப்பாகவுள்ளது. காத்திருப்பின் தருணத்தில் தான் எத்தனை சாத்தியங்கள்.  ஜென் கவிதைகளில் செயல்படுவது போல ஒரு புள்ளியை முதன்மைப்படுத்தி கவிதை விரிகிறது. பறவையின் சிறகசைப்பை போல கவிதையும் படபடத்து எழுகிறது. வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன். •• பறவை – ஸ்ரீதர் நாராயணன் * இறக்கைகளை பறத்திக் கொண்டு விரிந்த நிலப்பரப்பில் நின்றிருக்கிறது சாம்பல் வண்ண பறவை ஒன்று தன் நிழலைப் பார்த்தபடி. பருவமாற்றத்தின் படிநிலையைக் காட்ட வலசை போகலாம். …

பறவை Read More »

இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை

நோயல் நடேசன் . சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில் தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்;கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் என பதினைந்து கிலோ மீட்டர் நடந்து …

இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதை Read More »