இலக்கியம்

இளம்வாசகர்கள்

துணையெழுத்து வெளியான நாட்களில் அது குறித்து விக்னேஷ் என்ற இளைஞர் இணையத்தில் எழுதியுள்ள பதிவு. சமீபத்தில் இதை ஒரு பொறியியல் கல்லூரி மாணவி இந்த பதிவிலிருந்து என்னை தேடி வாசிக்க துவங்கியதாக கூறி விக்னேஷிற்கு நன்றி தெரிவித்திருந்தார். இளம்வாசகர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்குச் சாட்சியமாக இதை மீள்பிரசுரம் செய்கிறேன் S.Ramakrishnan Posted by Vignesh Saturday, July 5, 2008 Can a book change lives? Can an author alter all the perceptions …

இளம்வாசகர்கள் Read More »

நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல்

முருகபூபதி   (ஆஸ்திரேலியா) சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர்  ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம். இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் …

நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல் Read More »

பதின் நாவல் குறித்து

பதின் – எஸ். ராமகிருஷ்ணன் கணேஷ்பாபு, சிங்கப்பூர் உலகளவில் குழந்தைகளுக்கான நாவல்கள் எப்போதுமே அதிகளவில் வாசிக்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும், உடனடியான ஒரு வெளிச்சத்துக்கு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களுக்கான புனைவுகளை விடவும் சிறார்களுக்கான புனைவுகள் பரவலாக கவனிக்கப்படுவதும் நம் சூழலில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறார் நாவல் பற்றிய விமர்சனமும், அதைக் குறித்த விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் எழுதப்பட்ட சிறார் நாவல்களுக்கு இது நிகழ்கிறதா என்று பார்க்கையில் …

பதின் நாவல் குறித்து Read More »

வண்ணம் கலந்த சொற்கள்

பிரசாந்தி சேகர் எழுதிய காஃப்கா பற்றிய கட்டுரை ஒன்றை சில வருஷங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். மிகச்சிறந்த கட்டுரை. நினைவிலேயிருந்தது. நேற்றிரவு திடீரென அதை மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது. காலச்சுவடு இணையதளத்தில் தேடி மீண்டும் வாசித்தேன். அபாரமான மனஎழுச்சிதரக்கூடிய கட்டுரை. இதுவரையாரும் காஃப்கா பற்றி இப்படியொரு கட்டுரையை  எழுதியதில்லை. ஒரு எழுத்தாளனை மிகத் தீவிரமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழை கோணங்கி கல்குதிரைக்காக கொண்டுவந்த போது கவிஞர் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். …

வண்ணம் கலந்த சொற்கள் Read More »

எழுதப்படாத கதைகள்

ஆன்டன் செகாவ் தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் எழுதவிரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருக்கிறார். செகாவின் நோட்புக் தனிநூலாக வெளியாகியுள்ளது. சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு இது ஒரு அற்புதமான துணை நூல். குறிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்களை எப்படி வாழ்விலிருந்து தேர்வு செய்கிறார், எது போன்ற சம்பவங்களைக் குறித்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமானது. ஒவியர்கள் தினசரி வாழ்வு குறித்து ஸ்கெட்புக்கில் வரைந்து வைத்திருப்பது போலத் தன் கண்முன்னே கடந்து போன வாழ்வை சிறிய …

எழுதப்படாத கதைகள் Read More »

கொலைக்குப் பின்னால்

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவல் 1996ம் வெளியானது. பதிமூன்று வருசங்களுக்கு மேலாகியும் உரிய கவனமற்று போன அந்த நாவல் 2009ம் வருசம் புதிய பதிப்புக் கண்டிருக்கிறது. மா. கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியர் ஆ. மாதவைய்யாவின் மகன். தாவரவியலும் சட்டமும் படித்துவிட்டு சுண்டூர் சமஸ்தானத்தில் பணியாற்றியிருக்கிறார். புகைப்படம் எடுப்பதிலும் ஒவியத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன் ஸ்டேட்ஸ்மென் இதழில் எழுதிய இயற்கையுலகம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. கானுயிர் …

கொலைக்குப் பின்னால் Read More »

கூட்டத்தின் மனநிலை

1981ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்  எலியாஸ் கானெட்டி. ஜெர்மன் மொழி எழுத்தாளரான இவர் எழுதிய Crowds & Power மிக சுவாரஸ்யமான புத்தகம். மனிதர்கள் ஏன் கூட்டமாகத் திரளுகிறார்கள். கூட்டத்தின் மனநிலை எப்படி உருவாகிறது. ஏன் கூட்டம் சேர்ந்தவுடன் வன்முறை ஏற்படுகிறது. தனிநபர் கூட்டத்தின் வழியாக என்ன மனநிலையை அடைகிறார். எது போன்ற கூட்டங்களைச் சமாளிக்க முடிவதில்லை என்று கூட்டத்திற்கும் அதிகாரத்திற்குமான உறவைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள். அரசியல் செயல்பாட்டாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய …

கூட்டத்தின் மனநிலை Read More »

உப பாண்டவத்திற்குப் பின்னால்

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியில் ஒருவன். சென்னை புக்ஸ் நிறுவனத்தால் வெளியிட்டது. இந்தத் தொகுப்பை நான் உருவாக்கவில்லை. வெவ்வேறு இதழ்களில் வெளியான எனது சிறுகதைகளைத் தொகுத்து எழுத்தாளர் தமிழ்செல்வன் சிறுகதை தொகுப்பினை கொண்டு வந்தார். என் மீதான அன்பில் அவரே புத்தகம் வெளியிட்டு விட்டதால் முதற்புத்தகம் கொண்டுவருவது பெரிய சிரமமின்றி எளிதாக நடந்துவிட்டது. ஆனால் முதல்நாவலான உப பாண்டவத்தைக் கொண்டு வர பெரும்போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விடுத்து விருதுநகரில் குடியிருந்தேன். திருமணமாகியிருந்தது. வேலை எதுவும் …

உப பாண்டவத்திற்குப் பின்னால் Read More »

நைல் நதியின் ஊடே

டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் …

நைல் நதியின் ஊடே Read More »

கோணங்கி

எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பு குறித்து 1998ல் கோணங்கி எழுதிய விமர்சனம் ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்தேன். இது காலக்குறி இதழில் வெளியானது என நினைக்கிறேன். தாவரங்களின் உரையாடல் என்னை அடையாளப்படுத்திய சிறுகதை தொகுதி. அதன் புதியபதிப்பு தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது. அந்த மகிழ்வில் இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் •••• தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு – கோணங்கி எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் …

கோணங்கி Read More »