இலக்கியம்

இடக்கை– நூல் விமர்சனம்

– கணேஷ் பாபு  சிங்கப்பூர் வரலாற்றின் நீண்ட பயணத்தில், மனிதன் அதிகமும் நம்பிக்கைவைத்திருந்தது நீதியின் மீதுதான். சமூகமாக மனிதன் வாழத் துவங்கியதிலிருந்து அவன் தனது வாழ்வின் காப்பாக நீதியைத்தான் நம்பிவந்திருக்கிறான். அதே சமயம் அவன் அச்சம் கொண்டது, நீதியை கையாள்பவர்களிடமும், நீதியை தீர்மானிப்பவர்களிடமும்தான். இந்தப் புள்ளியில்தான் அதிகாரம் என்ற மாபெரும் சக்தியை மனிதன் எதிர்கொள்ள நேர்கிறது. தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதியை செலுத்தக்கூடிய கரங்கள் அதிகாரம் என்ற பீடத்தில்தான் நிலைகொண்டுள்ளது என்று அறியநேர்கையில் மனித மனதில் …

இடக்கை– நூல் விமர்சனம் Read More »

உறுபசி நாவல் பற்றி

உறுபசி நாவல் பற்றி சரவணன் என்ற வாசகர் எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு. •• உறுபசி. படித்து முடித்தவுடன் இதை எழுதுகிறேன். சம்பத் என்னும் நண்பனை , அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியது. எப்போதும் இறப்பு ஒருவரின் நினைவுகளை கிளர்ந்து எழ செய்பவையே. அந்த வகையில் சம்பத்துடன் விருப்பமற்று தொடர்பில் இருக்கும் அவர்களுக்கு , அவன் வாழ்வின் மேல் ஒரு கசப்பும் அசூயையும்  உள்ளது. இந்த கசப்பு , …

உறுபசி நாவல் பற்றி Read More »

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்

தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன.. உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 …

அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும் Read More »

எழுத்தாளனின் உலகம்

இவை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் (சில வீடியோவில் சப்டைட்டில் வசதி உள்ளது. ) Profile of a Writer: Jorge Luis Borges https://youtu.be/fAM2NJnv3Dk?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Lermontov. Biographical Documentary Film https://youtu.be/eis530WT7v0 The Childhood of Maxim Gorky https://youtu.be/ADcqytnvZls Virginia Woolf Documentary https://youtu.be/2Hnlsh8WyPE?list=PLE1jl6VUbLP4o9K0fxXEcodc_zVxeMPi3 Documentary on Ernest Hemingway https://youtu.be/mv5ewz4YE1g Ray Bradbury – Story of a Writer https://youtu.be/XESDRP82png Biography: John Steinbeck https://youtu.be/7i2CDqBo9VU George Orwell: A Life …

எழுத்தாளனின் உலகம் Read More »

நட்சத்திரங்களுக்கு இடையே

அந்த்வான் து செந்த் எக்சுபெரி மிகச் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். இவர் எழுதிய குட்டி இளவரசன் எனக்கு மிகவும் பிடித்த நாவல், பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் ஊற்றுக்கண்ணைப் போன்றுள்ளது காற்று, மணல், நட்சத்திரங்கள் என்ற எக்சுபெரியின் விமானப்பயணம் பற்றிய நூல். சமீபத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் குட்டிஇளவரசனை விடவும் சிறப்பானது. வெ. ஸ்ரீராம் வெகுஅற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழிற்கு மொழியாக்கம் செய்துவருபவர் வெ. ஸ்ரீராம். இவரது சேவையைப் பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு …

நட்சத்திரங்களுக்கு இடையே Read More »

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை

தோழர் எஸ்.வி. ராஜதுரை  உலக இலக்கியம் சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள கல் தெய்வம், சாட்சி சொல்ல ஒரு மரம், பார்வையிழத்தலும் பார்த்தலும், ஆகிய மூன்று புத்தகங்களும் மிக முக்கியமானவை. அவற்றை சமீபமாக ஒருசேர வாசித்தேன்.  அற்புதமான கட்டுரைகள். தமிழ் அறிவுலகத்திற்கு எஸ்.வி.ஆர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. ரஷ்யப் புரட்சி : இலக்கியச் சாட்சியம், அந்நியமாதல். பெரியார் : ஆகஸ்ட் 15 உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். எஸ்.வி.ஆரின் இலக்கியவாசிப்புப் பிரமிப்பூட்டக்கூடியது. சர்வதேச இலக்கியங்களைத் …

எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை Read More »

கோ யுன்

உலகக் கவிதையரங்கில் கொரியக்கவிஞர் கோ யுன் (Ko Un) மிகப்பெரும் கவியாக கொண்டாடப்படுகிறார். இரண்டு முறை இவரது பெயர் நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அரசு எதிர்ப்பின் காரணமாக சிறையில் அடைக்கபட்ட கோ யுன் இருட்டறையில் வாழ்ந்த போது அவருக்குக்கிருந்த ஒரே துணை சூரிய வெளிச்சம் மட்டுமே. துளை வழியாக உள்ளே வரும் அந்த வெளிச்சத்தை கடலாகவே அவர் கருதினார். இதுவரை 155 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்.  கவிதையுலகில் இது பெரும்சாதனை. பதினைந்து மொழிகளில் இவரது கவிதைகள் …

கோ யுன் Read More »

காமரூபத்தில் உலவும் நிழல்கள்

ஞானபீடப்பரிசு பெற்ற அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. இவரது தென்காமரூபத்தின் கதை என்ற நாவல் 2011ல் வெளியாகியுள்ளது. சாகித்திய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது. தென்காமரூபத்தின் கதையைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் அ. மாரியப்பன். இவர் தில்லி பல்கலைகழகத்தில் தமிழ்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அஸ்ஸாமியர்களால் தங்களின் அன்புக்குரிய பாய்தேவ் (மூத்த சகோதரி) என்று அழைக்கப்பட்டவர் இந்திரா கோஸ்வாமி என்ற மாமோனி ராய்சோம் கோஸ்வாமி இவர் இரவீந்திரபாரதி பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், அஸ்ஸாம் ரத்னா, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட …

காமரூபத்தில் உலவும் நிழல்கள் Read More »

காலம் எழுப்பும் கேள்வி

ஈஸ்கிலஸ் மற்றும் சோபாக்ளிஸ் எழுதிய கிரேக்கநாடகங்களை முழுமையாக மொழியாக்கம் செய்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இவர் கோவை வானொலி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சில காலம் சென்னை பண்பலையிலும் பணியாற்றியிருக்கிறார். கிரேக்க இலக்கியங்களை, சிந்தனைகளை வாசிப்பதற்காகத் தன் வாழ்நாளை செலவு செய்துவருபவர் ஸ்டாலின். கிரேக்க அழகியல். சிந்தனைகள், நாடகங்கள் எனப் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். வரலாற்று மாணவரான ஸ்டாலின் தனது விருப்பத்தின் பெயரில் கிரேக்க இலக்கியங்களைத் தானே முனைந்து கற்றுக் கொள்ளத்துவங்கி இன்று …

காலம் எழுப்பும் கேள்வி Read More »

தேவதச்சனோடு உரையாடல்.

கவிஞர் தேவதச்சனுடன் கவிதைகள் குறித்த விரிவான உரையாடல் ஒன்றினை நடத்திப் பதிவு செய்திருக்கிறேன். நானும் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் நான்கு அமர்வுகளாக இந்த உரையாடலை நிகழ்த்தினோம். தேவதச்சனின் கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளுடன் இந்த உரையாடலும் இணைந்து தனிநூலாக வெளியிடப்படவுள்ளது. அதிலிருந்து சிறுபகுதி •• எஸ்.ரா: உங்கள் கவிதைகளில் பால்யகாலம் தொடர்ந்து அடையாளப்படுத்தபடுகிறதே. அது வெறும் நினைவுகள் மட்டும் தானா? தேவதச்சன் – சிறுவயது நினைவுகளின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது . பத்து வயதுச் சிறுவனுக்கு உடல் …

தேவதச்சனோடு உரையாடல். Read More »