இலக்கியம்

மணலின் நடுவே

William Stanley Merwin எனப்படும் w.s. மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது Sand என்ற சிறுகதை இரண்டேபக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. மணல்கடிகாரம் ஒன்றினுள் நிரப்பட்ட மணலிலுள் எப்படியோ ஒரு எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல்துகள்களை தனது சகோதரர்களாக  நினைக்கிறது. மேலிருந்து கீழாக, பின்பு கீழிலிருந்து மேலாக எதற்காக இப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என  குழம்பிப் போகிறது. தன்னை எதற்காக மணல்துகள்கள் …

மணலின் நடுவே Read More »

பதின் நாவல் குறித்து

‘பதின்’பருவ உலகம் அழகானது… வீரபத்திர லெனின் இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை …

பதின் நாவல் குறித்து Read More »

மலைமேல் நெருப்பு

அனிதா தேசாயின் Fire on the mountain நாவலை அசோகமித்ரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மலைமேல் நெருப்பு சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல். அசோகமித்ரனின் மொழியாக்கம் வெகுசிறப்பானது. சாகித்ய அகாதமி இந்நாவலை வெளியிட்டுள்ளது. மலைப்பிரதேசமான கசவுலியிலிருந்த கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். வயதானவள். மேல்தட்டுவர்க்கத்தைச் சேர்ந்தவள். கர்னலின் மனைவி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது அவளது வீடு. முதுமையைத் தனியே கழிக்கும் அவளுக்கு ஒரு நாள் ஒரு தபால் வந்து சேருகிறது. அதில் அவளது கொள்ளுப் …

மலைமேல் நெருப்பு Read More »

ஐன்ஸ்டீன் கடிதங்கள்

உலககெங்கும் பள்ளி மாணவர்களின் லட்சியமனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . ஜீனியஸ் என்பதற்கு அடையாளமாக ஐன்ஸ்டீனைத் தான் காட்டுகிறார்கள்.  தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள் “Dostoevsky gives me more than any scientist“ ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம் பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய …

ஐன்ஸ்டீன் கடிதங்கள் Read More »

அந்திமழை இதழில்

இம்மாத அந்திமழை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்னைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு என் அன்பும் நன்றியும் ** எஸ்.ரா: அன்பும் நட்பும் மதிப்பும் மனுஷ்ய புத்திரன் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயர் அவர் எழுத வந்த சிறிதுகாலத்திலேயே நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்த  அடையாளமாக மாறிவிட்டது. 90 களில் வெளிவந்த சுமங்களா இதழ் ஒன்றில் எதிர்கால நவீன இலக்கியத்தின் முகமாக இருக்கப்போகும் ஐவரில் ஒருவராக எஸ்ராவும் இனம்காணப்பட்டிருந்தார். அது உண்மை என்பதை எஸ்ராவும் அவரது காலமும் …

அந்திமழை இதழில் Read More »

2016ல் நான் படித்த புத்தகங்கள்

இந்த ஆண்டில் நிறைய வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. இலக்கியம், வரலாறு, சினிமா, தத்துவம், பண்பாட்டு ஆய்வுகள் எனப் பல்வேறு தளங்களில் வாசிக்ககூடியவன் என்பதால் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் பெரியது. அதில் மிக முக்கியமாகக் கருதும் சில புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். A DISTANT MIRROR: THE CALAMITOUS 14TH CENTURY  – BARBARA W. TUCHMAN AN NA AKHMATOVA – THE WORD THAT CAUSES DEATH’S DEFEAT ATTORNEY AT LAW -M. …

2016ல் நான் படித்த புத்தகங்கள் Read More »

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்

தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள். சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப்படித்துவிடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன். சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள்.  என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் …

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் Read More »

கசந்த உறவு

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த Norman Thomas di Giovanni தனது அனுபவங்களையும் போர்ஹேயின் திருமண வாழ்வு குறித்தும் Georgie & Elsa என்ற சுவையான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த அளவு யாரும் போர்ஹேயின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை.  மிரட்சியோடு வியந்துபார்க்க வைக்கும் எழுத்துகளைப் படைத்த போர்ஹேயும் சாமானியரின் ஆசைகளுடன் விருப்பு வெறுப்புகளுடன், ஏமாற்றங்கள். குடும்பச் சண்டைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார் ஜியோவனி. தான் கல்லூரி நாட்களில் காதலித்த …

கசந்த உறவு Read More »

தஸ்தாயெவ்ஸ்கி எனும் தந்தை

தஸ்தாயெவ்ஸ்கியின் இரண்டாவது மகள் லூபோவ் (Lyubov Dostoyevskaya )தனது தந்தை குறித்த நினைவுகளை FYODOR DOSTOYEVSKY- A STUDY என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு 1921ல் இந்நூல் வெளியாகியிருக்கிறது. தந்தையைப் போலவே நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட லூபோவ் சிகிட்சைக்காக இத்தாலி சென்றார். அங்கேயே தங்கி வாழத் துவங்கி தனது 56வது வயதில் அடையாளமற்ற பெண்ணாக இறந்து போனார். லூபோவ் இந்நூலை AiMEE DOSTOYEVSKY என்ற பெயரில் பிரெஞ்சில் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய The Emigrant …

தஸ்தாயெவ்ஸ்கி எனும் தந்தை Read More »

புனைவின் அடையாளம்.

சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை சத்யானந்தன் ** உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை – அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை …

புனைவின் அடையாளம். Read More »