அலர் மரங்களும் ஆலாப்பறவைகளும்
தனிமையின் துயரத்தையும் , பிரிவின் ஏக்கத்தையும், காதலின்வலியையும் , பொருந்திக் கொள்ளமுடியாத தினசரி வாழ்வின் மீதான சலிப்பையும் பேசுபவை உமா வரதராஜனின் சிறுகதைகள். பேருந்து நிலையத்தின் பரபரப்பிற்கு ஊடாகத் திடீரெனக் கேட்கும் புல்லாங்குழல் நம்மை ஈர்ப்பது போல இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளுக்கு இடையே அன்பின் பாடலை ஒலிக்கின்றன.. உமா வரதராஜனின் அரசனின் வருகை சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஈழச்சிறுகதை வரலாற்றில் அதற்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகள் சிலவற்றைத் தனியே வாசித்திருந்த போதும் மொத்தமாக அவரது 16 …