சிறுகதை

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …

புதிய சிறுகதை – மீறல் Read More »

புறாப்பித்து

– சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். …

புறாப்பித்து Read More »

திருடனின் மூன்று அற்புதங்கள்.

சிறுகதை இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்டு. மதராஸில்  அவனுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒருவர் கூடக் கிடையாது. அதைப்பற்றி நினைக்கும் போது தெக்கன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனது மனதில் இப்படித் தோன்றும் “திருடனுக்கு எதற்குத் தெரிந்த மனிதர்கள்“ ஆம். தெக்கன் திருடுவதற்காகத் தான் மதராஸிற்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பு வரை பழனி, …

திருடனின் மூன்று அற்புதங்கள். Read More »

அலையின் உயரம்

மதுரை மாவட்டத்தில் நடக்கும் கந்துவட்டி பிரச்சனைகளைப் பற்றி நன்கு அறிவேன் அப்படி பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றினைப் பற்றி அலையின் உயரம் என்ற சிறுகதையை ஆறுமாத காலத்தின் முன்பாக எழுதினேன். ஆனால் பிரசுரத்திற்கு அனுப்பவில்லை. புதிய சிறுகதை தொகுப்பில் இடம்பெறட்டும் என வைத்திருந்தேன் தினமணி இதழுக்காகக் கதை வேண்டும் என நண்பர் பாவை சந்திரன் கேட்டு வாங்கினார். தற்போது கந்துவட்டி காரணமாக இசக்கிமுத்துக் குடும்பம் தற்கொலை செய்து கொண்ட சூழல் இக்கதையை முக்கியமாகிவிட்டது. இந்த வார தினமணி கதிரில் …

அலையின் உயரம் Read More »

முதல் காப்பி

புதிய சிறுகதை •• பேருந்து நிலையத்தின் மேற்கிலிருந்தது ரமண விலாஸ். சின்னஞ்சிறிய உணவகமாகத் துவங்கி பின்பு அருகிலுள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தையும் சேர்த்து வாங்கிப் பெரிது பண்ணியிருந்தார்கள். ரமண விலாஸின் சிறப்பு “காபி“. அதுவும் பசும்பால் காபி. அதிகாலையில் அந்தக் காபி குடிப்பதற்கென்றே நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். நுரை ததும்ப பித்தளை டவரா செட்டில் தரப்படும் ஃபில்டர் காபியின் சுவைக்கு நிகரே கிடையாது. பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட …

முதல் காப்பி Read More »

வெறும் பணம்

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் …

வெறும் பணம் Read More »

கற்பனைச் சேவல்

சிறுகதை அந்த மூன்று பேரும் தன்னிடமிருக்கும் சண்டைச்சேவலை விலை பேசி வாங்கிப் போவதற்காக வந்திருப்பதாகவே காயம்பு நம்பினார் மூவரும் வெள்ளை வேஷ்டி கட்டியிருந்தார்கள்.அதில் ஒருவருக்குத் தலை நரைத்துப் போயிருந்தது.வயது எப்படியும் ஐம்பதுக்கும் மேலிருக்கும்.இன்னொரு ஆள் கோடு போட்ட சட்டையை மடித்துவிட்டிருந்தான்.திருக்கை மீசை வைத்திருந்தான்.மூன்றாவது ஆள் குள்ளம்.அவன் கையில் ஊதா நிற கைப்பை ஒன்றிருந்தது.அவர்களைப் போன்ற வெளியாட்கள் இந்தக் கிராமத்திற்கு எப்போதாவது தான் வருகிறார்கள். காயாம்பு வேம்படி நிழலில் கிடந்த கல்லில் உட்கார்ந்தபடியே அவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.காயாம்புவிற்கு …

கற்பனைச் சேவல் Read More »

பகற்திருடர்கள் சங்கம்

அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமானதாகயில்லை. வைத்தியர் பலராமன் தெரு என்ற ஒன்றே அங்கேயில்லை. பிறகு எப்படி 424 என்ற கதவிலக்கத்தைக் கண்டுபிடிக்கமுடியும். எட்டரை மணியிலிருந்து நான் தேனாம்பேட்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருந்தேன். தேனாம்பேட்டைக்குள் இன்னும் ஒரு கிராமத்தின் மிச்சம் போல இருக்கிற தெருக்கள் இருக்கின்றன. வீதியில் எருமை மாடுகள் நடமாடுகின்றன. வேப்பமரங்களும், அம்மன் கோவில்களும் மோர்விற்பவர்களும் சுண்ணாம்புகல் விற்பவர்களும், தேள்கடிக்கு பச்சிலை மருந்துகட்டுபவர்களும் இன்றுமிருக்கிறார்கள் பழைய டிரிடில் பிரஸ், நாடி ஜோதிடம் பார்க்கிறவர்கள். தட்டுபிரியாணிகடை, ரப்பர் ஸ்டாம்பு செய்பவர்கள், …

பகற்திருடர்கள் சங்கம் Read More »

என்ன சொல்கிறாய் சுடரே

(உயிர்மை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை) •• ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது. உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது, அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை, ஆனால் ஒற்றை மெழுகுவர்த்திக் காற்றில் மிதந்தபடியே அவன் முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது, விசித்திரமாகயிருக்கிறதில்லை, ஆனால் அது தான் நிஜம். பிறந்தநாள் …

என்ன சொல்கிறாய் சுடரே Read More »

உனக்கு 34 வயதாகிறது

– சிறுகதை “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை, ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். …

உனக்கு 34 வயதாகிறது Read More »