காலத்தின் குரல்
நேற்று மாலை முதல் மொழி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் “காலத்தின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். நன்றி : ஸ்ருதி டிவி முதல்மொழி
நேற்று மாலை முதல் மொழி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் “காலத்தின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். நன்றி : ஸ்ருதி டிவி முதல்மொழி
சீனாவைப் பற்றி அமெரிக்க ஊடகங்கள் பகிரும் செய்திகள். காட்சிகள் பெரிதும் எதிர்மறையான பிம்பத்தைத் தரக்கூடியது. இது போலவே சீன அரசு தன்னைப் பற்றியும் சீன மக்களின் வாழ்க்கை பற்றியும் பகிரும் காட்சிகளும் நம்பகத்தன்மையில்லாதவை. பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்டவை. உண்மையான சீனாவின் நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து சில ஆய்வாளர்கள். பத்திரிக்கையாளர்கள் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். அது போன்ற ஒரு ஆவணப்படமே Ascension (2021) ஜெசிகா கிங்டன் இயக்கிய இந்த ஆவணப்படம் இன்றைய சீனாவின் …
எனது பள்ளி வயதில் சினிமா பாடல்களைக் கேட்பதற்கு ரேடியோ ஒன்று தான் வழி. அதுவும் சிலோன் ரேடியாவில் அருமையான பாடல்களை ஒலிபரப்புச் செய்வார்கள். அடுத்து என்ன பாடல் வரும் என்று முன்கூட்டியே சொல்லும் போட்டி எங்களுக்குள் நடக்கும். அந்த நாட்களில் சித்திர செவ்வானம் சிரிக்கக்கண்டேன் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். காற்றினிலே வரும் கீதம் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல். இசைஞானி இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடியது.பஞ்சு அருணாசலம் எழுதியது. இந்தப் பாடலில் வரும் தையரத்தைய்யா தையரத்தைய்யாவை பாடலுடன் …
தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த மனிதர். புன்னகை மாறாத முகத்துடன் எதையும் நிதானமாக, ஆழ்ந்து அறிந்து அணுகக்கூடியவர். கம்பத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரைக்குப் பேருந்தில் வந்து இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது வேதனையளிக்கிறது. என் வளர்ச்சியிலும் எழுத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர். அவரது மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எஸ்.ஏ.பி …
வில்ஹெம் ஹாமர்ஷோய் (Vilhelm Hammershøi. )டென்மார்க்கின் புகழ்பெற்ற ஓவியர். லண்டனில் இவரது ஓவியக்கண்காட்சி நடைபெற்ற போது அதன் தலைப்பாக The Poetry of Silence என வைத்திருந்தார்கள். மிகப் பொருத்தமான தலைப்பு. பொருட்களால் நிரம்பிய நமது அன்றாட வாழ்க்கைக்கு மாற்றாகக் குறைவான பொருட்களுடன் வெற்றிடத்தின் அகன்ற கைகள் நம்மை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவரது ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. இவரது ஓவியங்களில் முக்கியப் பொருளாகக் கதவும் சுவர்களும் இடம்பெறுகின்றன. பெரும்பான்மை வீடுகளில் அலங்காரம் என்ற பெயரில் எதை எதையோ …
borderlessjournal என்ற இணைய இதழில் வெளியான எனது சிறுகதை. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழியாக்கம் செய்துள்ளார் ••• Eyes of the Python Written in Tamil by S.Ramakrishnan translated by Dr.B.Chandramouli ** Raghav dreamed of a python again. He had never dreamed of a snake till he was thirty. But ever since he married seven months ago, the python had recurred …
சிலபடங்கள் அதன் தலைப்பிலே நம்மை வசீகரித்துவிடும். அப்படியொரு படம் தான். The Loneliness of the Long Distance Runner. 1962ல் வெளியான பிரிட்டிஷ் திரைப்படம். வடக்கு இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் வறுமையான குடும்பத்தில் வசிக்கும் காலின் ஸ்மித் என்ற இளைஞன் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை முன்பின்னாகப் படம் விவரிக்கிறது துவக்கக் காட்சியில் கிராமப்புற சாலையில் தனியாகக் காலின் ஸ்மித் ஒடிக் கொண்டிருக்கிறான். ஒட்டம் என்பது அவனது ரத்தத்தில் கலந்துவிட்ட பழக்கம், அதுவும் காவல்துறையிடமிருந்து தப்பியோடுவது என்பது …
பல ஆண்டுகளாக மேற்கத்திய இசை மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பிக் கேட்டு வருகிறேன். Beethoven, Mozart, Bach, Tchaikovsky, Joseph Haydn, Antonio Vivaldi. Georges Bizet, George Frideric Handel. Chopin, Franz Schubert ,Johannes Brahms, Niccolò Paganini இவர்களைத் தொடர்ந்து கேட்டிருக்கிறேன். ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களில் முக்கியக் கச்சேரிகளைக் கேட்பதும் வழக்கம். என்னை விடவும் எனது மனைவிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் நாங்கள் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரிக்குப் போயிருந்தோம். …
2021 டிசம்பர் 25ல் எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே வெளியானது. இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுரைகளில் சிலவற்றை நானே எனது இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நாவல் குறித்த காணொளி. டால்ஸ்டாய் மற்றும் அக்ஸின்யா குறித்த ஓவியம், நாவலின் வரைபடம், டால்ஸ்டாய் போஸ்டர், கனடாவில் நடைபெற்ற ஜும் சந்திப்பு, பாலம் புத்தக கடை ஏற்பாடு செய்த அறிமுக நிகழ்வு …
The Birdcatcher’s Son திரைப்படம் 2019ல் வெளியானது. 18ம் நூற்றாண்டில் ஃபாரோ தீவில் நடக்கும் கதையிது. இந்தத் தீவின் சட்டப்படி ஆண் வாரிசு இல்லாதவர் தங்கள் குத்தகை நிலம் மற்றும் வீட்டிற்கு உரிமை கொண்டாட முடியாது பறவைகளைப் பிடித்து விற்கும் எஸ்மர் குடியிருக்கும் வீடு மற்றும் நிலத்தை அதன் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார். அவனோ தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த முறை நிச்சயம் தனக்கு ஆண் பிள்ளை பிறக்கும் ஆகவே நிலத்தின் குத்தகை அடுத்த …