வானில் எவருமில்லை
புதிய சிறுகதை புரவி ஆண்டு மலரில் வெளியானது தியேட்டரில் பாதிப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே சித்ராவிற்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. மணி எட்டைக் கடந்தவுடன் வயிறு தானே பசிக்கத் துவங்கிவிடுகிறது. ஒன்பது மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவது தான் அவளது வழக்கம். ஆனால் சினிமாவிற்குப் போகும் நாட்களில் என்ன செய்வது. இடைவேளையின் போது பாப்கார்ன் சாப்பிட்டார்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை. திரையில் ஒடும் காட்சிகளில் அவளது மனம் கூடவில்லை. …









