45 வது புத்தகக் காட்சி

சென்னை நந்தனத்தில் 45 வது புத்தகக் காட்சி பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நடைபெறவுள்ளது. காலை 11 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. தேசாந்திரி பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்குபெறுகிறது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் எனது நூல்கள் யாவும் கிடைக்கும்.

கற்பனையுலகின் வரம்பு.

 செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிக் நேர்காணலின் ஒரு பகுதி . தமிழில்: லதா ராமகிருஷ்ணன். தானாஸிஸ்: கற்பனாதீதம் (fantasy) என்பது வாழ்க்கையின் உண்மைகளுக்கெதிராகப் போரிட ஒருவர் பயன்படுத்தும் ஆயுதமா? பாவிக்: மெய்யுலகிற்கும், கற்பனையுலகிற்கும் இடையே தெளிவான, திட்டவட்டமான வரம்பெல்லைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சுதந்திர மனிதன் அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையேயான வரம்பெல்லைகளை அழுத்தி, அடக்கி வைக்கிறான். ஒரு எழுத்தாளனாக இந்த உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளனிடம் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக …

கற்பனையுலகின் வரம்பு. Read More »

நாடகப் பயணம்

எனது நாடக வாழ்க்கை என்ற அவ்வை தி.க.சண்முகம் நூலில் மல்லாங்கிணருக்கு நாடகம் போட வந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில் சங்கரதாஸ் சுவாமிகள் மல்லாங்கிணருக்கு வந்து நாடகம் நடத்திய செய்தி இடம்பெற்றுள்ளது. எங்கள் வீட்டின் அருகிலுள்ள தேரடியில் தான் அந்தக் காலத்தில் நாடகங்கள் நடந்திருக்கின்றன. மல்லாங்கிணரில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறது என்றால் வேட்டுப் போடுவார்கள். அந்தச் சப்தம் கேட்டு பக்கத்துக் கிராமத்து மக்கள் யாவரும் ஒன்று திரண்டு வந்துவிடுவார்கள். அந்த விளம்பர யுக்தியை வியந்து டிகே …

நாடகப் பயணம் Read More »

கற்பனைக் குமிழிகள்

சில படங்கள் முதல் காட்சியிலே நம்மை உள்ளிழுத்துக் கொண்டுவிடக்கூடியவை. அப்படியான ஒரு திரைப்படம் தான் Asino vola.( DONKEY FLIES) 2015ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். மொரிசியோ என்ற இசைக்கலைஞரின் பால்ய நினைவுகளை விவரிக்கும் இப்படத்தின் முதற்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக மொரிசியோ செல்லும் போது அவர் கூடவே ஒரு கோழியும் செல்கிறது. அவருடன் அந்தக் கோழி பேசுகிறது. அவருக்காக ஒரு முட்டையைத் தருகிறது. மொரிசியோவும் அந்தக் கோழியுடன் உரையாடுகிறார். அதன் முன்னே இசை நிகழ்த்துகிறார். அந்தக் …

கற்பனைக் குமிழிகள் Read More »

வங்காளத்தில்

வங்காளத்தில் வெளியாகவுள்ள சிறந்த இந்தியச் சிறுகதைகள் தொகுப்பில் எனது ஐந்து வருட மௌனம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்தக் கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கிருஷ்ணசாமி.

நகரம் அழைக்கிறது

Empty Eyes 1953ல் வெளியான இத்தாலியத் திரைப்படம் காஸ்டெலூசியோவில் வசிக்கும் இளம் பெண் செலஸ்டினா பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிவருவதில் படம் துவங்குகிறது. அப்பா அம்மா இல்லாத செலஸ்டினா கிராமப்புறத்திலிருந்து ரோம் நோக்கிச் செல்கிறாள். அவளை வழியனுப்ப வந்துள்ள சகோதரர்கள் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிடுகிறார்கள். முதன்முறையாக வீட்டை விட்டு தனியே பயணம் செய்கிறோம் என்ற பயம். இனி ஊர் திரும்பி வரமுடியாதோ என்ற குழப்பம் எனப் பேருந்தினுள்ளும் அவள் அழுகிறாள். பேருந்தின் ஒட்டுநர் அவளிடம் விசாரிக்கிறார். வீட்டு …

நகரம் அழைக்கிறது Read More »

வண்ணதாசனின் ஓவியங்கள்

வண்ணதாசன் சிறந்த கவிஞர் சிறுகதையாசிரியர் மட்டுமில்லை. தேர்ந்த ஒவியரும் கூட. கதைகளிலும் கவிதைகளிலும் அவர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமும் நிகழ்விடத்தின் நிறங்களும் நுட்பங்களும் ஓவியனின் கண்களால் பார்த்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களே. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென், மகாகவி தாகூர், விக்டர் ஹுயூகோ, ஃபெடெரிகோ கார்சியா லோர்கா ,ஹெர்மன் ஹெஸ்ஸே, சில்வியா பிளாத். குந்தர் கிராஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிறந்த ஓவியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுநேரமாக ஓவியம் வரைவதை முன்னெடுக்கவில்லை. ஆனால் தனது குறிப்பேடுகளில் தான் …

வண்ணதாசனின் ஓவியங்கள் Read More »

தெலுங்கு மொழிபெயர்ப்பு

அவளது வீடு கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ஈமாட்ட இணையபத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவனி பாஸ்கர் இணைப்பு: ஆமெ இல்லு இந்த கதையினை பாராட்டிதெலுங்கின் முதுபெரும் இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான திரு.கணேஸ்வர் ராவ் அவர்கள் எழுதிய குறிப்பு உங்கள் மொழிபெயர்ப்பு எங்கேயும் மொழிபெயர்ப்புபோல் தோன்றவில்லை, காரணம் மூலக்கதையின் நேர்த்தியாக இருக்கலாம். ‘Home'(இந்தப் பொருளில் தெலுங்கு சொல் இல்லை) என்ற கதைக்கருவை வைத்து உலக அளவில் கதைகள் இருக்கின்றன, புதினங்கள் இருக்கலாம. தீவிர பெண்ணீய எழுத்தாளராக இருந்திருந்தால் …

தெலுங்கு மொழிபெயர்ப்பு Read More »

இசையின் சித்திரங்கள்

அழிசி வெளியீடாக வந்துள்ள ரா. கிரிதரன் எழுதியுள்ள காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை. மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார். …

இசையின் சித்திரங்கள் Read More »

வாழ்த்துகள்

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக வழங்கப்படுகிறது. இராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பாலசுப்ரமணியன் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். நட்சத்திரவாசிகள் நாவல் மென்பொருள் துறை சார்ந்த வாழ்க்கையை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.