திரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை

ஒரு திரைக்கதை எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அகிரா குரசேவாவின் திரைக்கதையாசிரியர் ஷினோபு ஹஷிமோடோ எழுதிய Compound Cinematics: Akira Kurosawa and I என்ற புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். இந்நூலின் வழியே அகிரா குரசேவா எவ்வாறு திரைக்கதையை எழுதுகிறார் என்பதை அறிந்து கொள்வதுடன் அவருடன் இணைந்து பணியாற்றிய திரைக்கதையாசிரியர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள் என்பதையும் துல்லியமாக அறிந்து கொள்ளமுடிகிறது. அகிரா குரசேவாவின் ரஷோமான் படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் ஹஷிமோடோ . …

திரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை Read More »

மாத்யமம்

இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் பற்றி நான் எழுதிய கட்டுரை  மாத்யமம் மலையாள இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி. நன்றி : ஷாஜி மாத்யமம்

துணிவின் பாடகன்

நேற்று இயக்குநர் ராஜு முருகனின் ஜிப்சி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். இந்தியாவின் சமகால அரசியல் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் படமாக ஜிப்சி உருவாக்கபட்டிருக்கிறது. இந்த ஆடியோ விழாவில் பஞ்சாபைச் சேர்ந்த பாந்த் சிங் என்ற பாடகரைப் பற்றிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. தேனிசை செல்லப்பா அவர்கள் வெளியிட நூலை நான் பெற்றுக் கொண்டேன். துணிவின் பாடகன் பாந்த் சிங் என்ற நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் கமலாலயன். ராஜு முருகனின் காம்ரேட் டாக்கீஸ் நூலை …

துணிவின் பாடகன் Read More »

மௌனத்தை மீட்டுகிறவன்.

“Every silence contains music in a state of gestation.” – Mia Couto கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் வெளியான போது அதன் விசித்திர கதைசொல்லும் முறைக்காக மிகவும் கொண்டாடப்பட்டது. மேஜிகல் ரியலிசம் என்ற புதிய எழுத்துமுறையின் உன்னதமாக அந்நாவல் கருதப்பட்டது. தற்போது அப்படி நாவல் உலகில் தனது மாய எழுத்துமுறையால் தனிப்பெரும் ஆளுமையாகக் கொண்டாடப்படுகிறவர் மொசாம்பிக்கைச் சேர்ந்த மியா கௌட்டோ ( Mia Couto) இவர் ஒரு கவிஞர், …

மௌனத்தை மீட்டுகிறவன். Read More »

நேர்காணல்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான எனது நேர்காணலின் காணொளி. https://www.youtube.com/watch?v=AY66vEIcm8Y&feature=em-uploademail

வாழ்த்துகள் போகன் சங்கர்

எழுத்தாளர் போகன் சங்கருக்குக் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது அறிவிக்கப்பட்டுள்ளது . சிறிய எண்கள் உறங்கும் அறை  என்ற கவிதைத் தொகுப்பு இந்த விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே தொகுப்பு 2018ம் ஆண்டிற்கான கவிஞர் ஆத்மாநாம் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போகன் சங்கருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன. போகனின் கவிதைகள் தனித்துவமான …

வாழ்த்துகள் போகன் சங்கர் Read More »

டேவிட் லீனின் காந்தி

ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பாகக் காந்தி திரைப்படத்தை இயக்க விரும்பினார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் லீன். இதற்காக இந்தியாவிற்கு வருகை தந்து நேருவைச் சந்தித்து உரையாடி காந்தி குறித்து விரிவான ஆய்வுகளையும் செய்தார். ஆனால் அவர் விரும்பியது போலக் காந்தி திரைப்படத்தை உருவாக்க இயலவில்லை. ஆகவே காந்தியைக் கைவிட்டு தயாரிப்பாளர் விரும்பிய லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தை இயக்கினார். அப்படம் திரை வரலாற்றில் பெரும் காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. ஒரு …

டேவிட் லீனின் காந்தி Read More »

இடக்கை – பவா பெருங்கதையாடல்

எனது இடக்கை நாவல் குறித்து நண்பர் பவா.செல்லத்துரை மதுரையில் சிறப்பான கதைசொல்லுதலை  நிகழ்த்தியிருக்கிறார். நாவலின் முக்கியப்புள்ளிகளைத் தொட்டுப் பேசி கேட்பவர்களை இந்நாவலை வாசிக்கும்படி தூண்டியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது. நவீன கதைசொல்லியாக பவா தமிழ் இலக்கியத்தின் முக்கியச் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கதை சொல்லும் விதம் ஒரு நண்பன் நேரில் நம்மிடம் பேசுவது போல அத்தனை நெருக்கமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் பவா. நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த நண்பர் …

இடக்கை – பவா பெருங்கதையாடல் Read More »

வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்

(சொல்வனம் இணையஇதழ் எழுத்தாளர் அம்பை அவர்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மிகச்சிறப்பான முறையில் அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன், நேர்காணலுடன் இதழ் தயாரிக்கபட்டுள்ளது. அந்த இதழில் வெளியான எனது கட்டுரை.) அம்பையின் கதையொன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களைக் குரூரமாகக் கொல்வதையும், விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்ல வைக்கும் அபத்தத்தையும் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது. அது ஒரு பெண்பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது. பாரதியார் தனது …

வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள் Read More »

தோப்பில் எனும் காலத்தின் குரல்.

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இஸ்லாமியர்களை உரிமையோடு மாமா என்று தான் அழைப்பார்கள். பதிலுக்கு அவர்களும் மாப்பிள்ளை என்று  அழைப்பார்கள். தோப்பில் முகமது மீரான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் மாமா என்றே அழைப்பேன். அதைக் கேட்கும் போது அவரது முகத்தில் சொல்ல முடியாத சந்தோஷம் வெளிப்படும். அந்த மாமா இன்றில்லை என்பது தாள முடியாத துயரமே. கேரளாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக எழுத்தில் பதிவு செய்தவர்களாக வைக்கம் முகமது பஷீரையும் புனத்தில் குஞ்ஞப்துல்லாவையும் குறிப்பிடுகிறார்கள். இருவரது படைப்புகளும் …

தோப்பில் எனும் காலத்தின் குரல். Read More »