அஞ்சலி
என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு வெண்ணிற இரவுகள் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைத்தது. மற்ற நாவல்களை, குறுநாவல்களை, சிறுகதைகளை ஆங்கிலம் வழியாகவே வாசித்தேன். இன்று என்னிடம் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய எல்லா நூல்களும் இருக்கின்றன. இதில் The Brothers Karamazov நாவல் ஐந்து வேறுபட்ட …
சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் அபு என்ற சிறுவனாக நடித்த சுபீர் பானர்ஜி பின்னாளில் என்னவானார். அவரது சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. ஏன் அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார் என்பதை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட வங்க மொழித் திரைப்படம் அபுர் பாஞ்சாலி( Apur Panchali ) இதனை இயக்கியிருப்பவர் கௌசிக் கங்குலி. சர்வதேச திரைப்படவிழாக்களில் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பதேர் பாஞ்சாலியின் பின்னால் மறைந்துள்ள அறியாக்கதையொன்றை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது சுபீர் பானர்ஜி பதேர் பாஞ்சாலி படத்தில் …
பாலம் கல்யாணசுந்தரம் மிகச்சிறந்த சமூகச் சேவகர்.. தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்தவர். சர்வதேச அளவில் சிறந்த மனிதர் என Man of Millinium என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றவர். அந்தப் பணம் முழுவதையும் ஏழை எளிய குழந்தைகள் நலனுக்காக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திவரும் அன்பு பாலம் என்ற சேவா அமைப்பு துறை தோறும் சாதனைகள் செய்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு …
Ode to My Father 2014ல் வெளியான கொரியப்படம். ஒரு தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தை, வலியை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள நவீன காவியம் என்றே சொல்வேன். கொரிய சினிமா என்றாலே கொலை, போதை மருந்துகடத்தல், செக்ஸ், பேய், மாபியா என்ற பிம்பத்தை மாற்றி ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனது பத்துவயதில் துவங்கி முதுமை வரை அழுத்தமாகச் சித்தரிக்கிறது இத்திரைப்படம். டீக்-சோ என்ற கதாபாத்திரத்தின் வழியாக வட கொரிய அகதிகளின் கதையை நாம் அறிந்து கொள்ளத் துவங்குகிறோம். கிளாசிக்கல் …
கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய வண்ணநிலவனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்
நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம். 1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது. டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக …
கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்ய சினிமாவில் புது இயக்குநர்கள் மிகச்சிறப்பான படங்களை உருவாக்கிவருகிறார்கள். ஹாலிவுட் சினிமாவிற்குப் போட்டியாகப் பிரம்மாண்டமான படங்கள் ரஷ்யாவிலும் உருவாக்கப்படுகின்றன. Gogol Viy (2018) என்ற படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். கோகல் எழுதிய திகில் கதையைப் பிரமாண்டமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இது போலவே Mathilde (2017) என்ற படமும் நடனமும் இசையும் கலந்த சரித்திரக் கதையை விவரிக்கிறது. இப்படமும் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது யதார்த்தப் படங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் ஹாலிவுட் போன்று பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் …
– சிறுகதை •• கதவைத் தட்டும்போது அப்படியொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம். மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது. “வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத் தட்டிக்கிட்டு இருக்கு. கதவைத் திறந்து தொலைம்மா’’ என்று உள்ளிருந்து கனத்த ஆண் குரல் கேட்டது. அடுத்த சில நிமிடத்தில் பச்சைக் கட்டம் போட்ட சேலை கட்டிய வயதான பெண் …
செகாவ் பற்றிய எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=q8NQ_pUu2qw&feature=youtu.be