மோனேயின் நீர் அல்லிகள்

பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே (Claude Monet – 1840-1926) இயற்கையை துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஒவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் கண்டிருக்கிறேன் Water Lilies என்ற ஒவிய வரிசை அபாரமானது. இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. இயற்கையை நேரில் காணும் போது பெரிய பொருட்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. அவற்றையே மனம் பிரதானமாக அவதானிக்கிறது. உள்வாங்கிக் கொள்கிறது. காற்றினால் தண்ணீரில் ஏற்படும் அலைகளையோ, ஒளி ஊடுருவி விளையாடுவதையோ. பூக்களின் திறந்த …

மோனேயின் நீர் அல்லிகள் Read More »

நுவ்வை

பிரெஞ்சு எழுத்தாளரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான ஜீன் க்ளாட் காரியரின்(jean claude carrier) நேர்காணல் ஒன்றை கண்டேன். அதில் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றிவரும் ஒரு பழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதாவது அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தச் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு மரம் வைக்கப்படுமாம். காரியர் பிறந்த போது அவரது தந்தை வால்நட் மரத்தை வைத்திருக்கிறார். அது பதினெட்டு ஆண்டுகள் வளர்ந்து பின்பு விழுந்துவிட்டது என்கிறார் காரியர். அத்தோடு காரியர் தனது …

நுவ்வை Read More »

ஏங்கெல்ஸின் மனைவி

கார்ல் மார்க்ஸின் இணைற்ற நண்பனாகவும், சிறந்த தோழனாகவும் விளங்கியவர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ் ஏங்கெல்ஸின் மனைவி லிடியா எனப்படும் லிசி பென்ஸ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய நாவல்-Mrs Engels வெளியாகியுள்ளது. ஐரீஷ் எழுத்தாளரான கெவின் மெக்ரே இதனை எழுதியிருக்கிறார். லிசி பென்ஸ் தோழர் ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸின் துணைவி. ஐரீஷ் பெண்ணான இவர் பஞ்சாலை ஒன்றில் சாயமிடும் தொழிலாளியின் மகள்., அவரது சகோதரி மேரி பர்ன்ஸை தான் ஏங்கெல்ஸ் காதலித்தார். மான்செஸ்டரில் மேரியுடன் ஏங்கெல்ஸ் ஒன்றாக வாழ்ந்த போது …

ஏங்கெல்ஸின் மனைவி Read More »

சுராவிற்குப் பிடித்த சினிமா

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அபூர்வமாகத் திரைப்படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். பேசியிருக்கிறார். தனிப்பட்ட சந்திப்புகளின் போது சினிமா குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததை அறிவேன். ஆனால் தனக்குப் பிடித்த படங்கள் பற்றியோ, சினிமா இயக்குனர்கள பற்றியோ அதிகம் எழுதியதில்லை. அடூர் பற்றியும் சத்யஜித் ரே பற்றியும் எழுதியிருக்கிறார் என்று நினைவு. அவரது குறிப்பு ஒன்றில் Fried Green Tomatoes திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அது புகழ்பெற்ற படமில்லை. ஆனால் நேர்த்தியாக …

சுராவிற்குப் பிடித்த சினிமா Read More »

கவிஞர் தேவதச்சனுக்கு விருது

கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான கவிக்கோ விருது வழங்கப்படுகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் பணமும் பாராட்டு பத்திரமும் கொண்டது. நவீன தமிழ் கவிதையுலகின் நிகரற்ற கவியாக விளங்கும் தேவதச்சனுக்கு இவ் விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 9 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள சோலை அரங்கத்தில் நடை பெறுகிறது.

அரவான்

பழைய புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அதில் அரவான் நாடகநிகழ்வின் புகைப்படங்கள் கிடைத்தன. அரவான் என்ற எனது நாடகத்தைப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கருணாபிரசாத் இயக்கி நடித்தார். கருணா பிரசாத் கூத்துப்பட்டறையில் பயின்ற மிகச்சிறந்த நடிகர். தனக்கென ஒரு நாடகக்குழுவை நடத்திவருபவர். அரவான் நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். ஒரு நபர் நடிக்கும் அந்த நாடகம் 50 நிமிஷங்கள் நிகழக்கூடியது. மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பாக அரவான் களப்பலியிடப்படுகிறான். தன் மரணத்தின் முந்திய இரவில் அரவான் எப்படியிருந்தான் என்பதே …

அரவான் Read More »

ஒரு தீவு : இரண்டு பயணங்கள்

சமீபத்தில் பார்த்த இரண்டு திரைப்படங்களிலும் மையாக இருந்தது டஹிடி (Tahiti) தீவு. பசிபிக் கடலிலுள்ள இந்தத் தீவு ஒரு காலத்தில் கலைஞர்களின் கனவுதேசம். டஹிடி பாலினேசியாவில் உள்ள மிகப்பெரிய தீவாகும். ஒவியர் பால் காகின் (Gauguin) இந்தத் தீவிற்குச் சென்று வாழ்ந்து வரைந்த ஒவியங்கள் அதன் புகழை உலகெங்கும் பரவச் செய்தன. இன்றும் சுற்றுலா பயணிகள் டஹிடி தீவினை உல்லாச உலகமாகக் கருதியே பார்வையிட வருகிறார்கள். Gauguin: Voyage to Tahiti என்ற 2017ல் வெளியான திரைப்படம் …

ஒரு தீவு : இரண்டு பயணங்கள் Read More »

அஞ்சலி

சிறந்த சிறுகதை ஆசிரியரும், முன்னோடி நாடக ஆளுமையுமான எழுத்தாளர் ந.முத்துசாமி இன்று சென்னையில் காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முத்துசாமியோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். அவரது சிரித்த முகமும் அலாதியான குரலும், கைளை வீசிப் பேசும் பாணியும் மிகவும் வசீகரமானது. தமிழ் நவீன நாடகத்திற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் முத்துசாமி. தெருக்கூத்தினைத் தமிழர்களின் அடையாளமாக உயர்த்திப்பிடித்தவர் . கூத்துப்பட்டறை என்ற நவீன நாடக அமைப்பை தோற்றுவித்துச் சிறப்பான நாடகங்களைத் தந்திருக்கிறார். அவரிடம் நடிப்பு பயின்றவர்களே இன்று …

அஞ்சலி Read More »

காலம் மாறுகிறது

சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பியது போலப் புத்துணர்வு வந்துவிடும். கிராவிடம் நான் கண்ட முக்கிய அம்சம் எவரைப் பற்றியும் புரணி பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ பிடிக்காது. வேண்டாத விஷயங்களை ஏன் பேசிகிட்டு என்று ஒதுக்கிவிடுவார். அது போலவே நன்றாகயில்லை என்று தோணுகிற விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார். யாரையும் துதி பாட மாட்டார். 96 வயதில் அவர் புதிய நாவலை எழுதியிருக்கிறார் …

காலம் மாறுகிறது Read More »

மேகங்களுக்கு அப்பால்

ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி (Majid Majidi) இயக்கிய Beyond the clouds பார்த்தேன். இந்தியாவில் அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு இந்திப்படம் எடுத்திருக்கிறார் என்பது படம் பார்த்தபிறகு தான் புரிந்தது. போதை மருந்து கடத்தி விற்பனை செய்யும் ஒருவனின் கதை. அவனது அக்கா தன்னைப் பலவந்தப்படுத்தியவரைத் தாக்கிவிடுகிறாள்.. இதனால் அவளைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சிறையில் அவள் என்னவாகிறாள் என்பது ஒரு புறம். மறுபுறம் தாக்கபட்டவனின் குடும்பம் என்ன …

மேகங்களுக்கு அப்பால் Read More »