சண்டையிடும் சாப்ளின்

அகிரா குரசேவா படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற தொஷிரோ மிபுன் குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். Mifune: The Last Samurai (2015) என்ற ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் Steven Okazaki. கிழிந்த உடையுடன் வறுமையில் சுற்றித்திரிந்த இளைஞன் எப்படிப் புகழ்பெற்ற நடிகனாக உருவாகிறான் என்பதை ஆவணப்படம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பாணி பெரிதும் முகபாவத்துடன் மட்டுமே தொடர்புடையது. மார்லன் பிராண்டோ போன்ற அரிதான நடிகர்களே மொத்த உடலையும் காட்சிக்கேற்ப மாற்றவும் பயன்படுத்தவும் கூடியவர்கள். …

சண்டையிடும் சாப்ளின் Read More »

நிவாரண உதவிகள்

கஜா புயலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்துள்ளன. கிராமங்கள் மின்சாரமில்லாமல் இருளில் மூழ்கிப்போயுள்ளன. மக்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். புயலில் சிக்கி  மான்கள் இறந்து போய்கிடக்கும் புகைப்படத்தை கண்டேன். மனம் கனத்துப் போனது. தென்னையும் வாழையும் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பரிதவிக்கிறார்கள். எனது நண்பர்களும் வாசகர்களும் புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். சமீபத்திய கேரள வெள்ளத்திற்கு பலரும் உதவிக்கரம் …

நிவாரண உதவிகள் Read More »

புதிய பதிப்பு – சிரிக்கும் வகுப்பறை

சிறார்களுக்காக எழுதப்பட்ட சிரிக்கும் வகுப்பறை மிகுந்த வரவேற்பு பெற்ற நூல். இதன் புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது விலை :   110 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம். டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – கூழாங்கற்கள் பாடுகின்றன

ஜென் கவிதைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலான  நூலான கூழாங்கற்கள் பாடுகின்றன புதிய பதிப்பு  வெளியாகியுள்ளது. விலை :  75 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம்   டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – உப பாண்டவம்

மகாபாரதம் பற்றிய எனது நாவலான உப பாண்டவத்தின் புதிய பதிப்பு. எனது நாவல்களில் அதிக பதிப்புகள் வெளியானது உப பாண்டவமே. தற்போது மலையாளத்தில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது விலை :  375 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி எண்கள் 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

புதிய பதிப்பு – உலக இலக்கியப்பேருரை

டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, ஹோமர், பாஷோ, அராபிய இரவுகள் ஷேக்ஸ்பியர்  குறித்து ஆற்றிய இலக்கிய உரைகளின் தொகுப்பு நூல்.  எனது உரையுடன் புதிதாக எழுதப்பட்ட கட்டுரைகளும் இணைந்த நூலிது புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை :  325 தொடர்புக்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 044 23644947 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/

தேசாந்திரி யூடியூப் சேனல்

எனது உரைகள் யாவும் தேசாந்திரி பதிப்பகம் சார்பில் உருவாக்கபட்டுள்ள யூடியூப் சேனலில்  பார்வைக்கு உள்ளன. நண்பர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து உதவுங்கள். புதிய வீடியோக்களை  இதிலே காணலாம். subscribe செய்வதற்கு இந்த இணைப்பைத் தொடர்பு கொள்ளவும். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 நவம்பர் 14ல் சென்னையில் நேரு கண்ட இந்தியா கருத்தரங்கில் ஆற்றிய உரை நேரு கண்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை| celebrate Nehru https://www.youtube.com/watch?v=RMKq6vaghNQ&feature=share நன்றி : ஸ்ருதி டிவி

புத்தகம் வாசிப்பவர்கள்

புத்தகம் வாசிப்பதை பல முக்கிய ஒவியர்களும் ஒவியமாகத் தீட்டியிருக்கிறார்கள். இதில் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் (Carl Spitzweg) முக்கியமான ஒவியர். இவர் புத்தகம் வாசிக்கும் படிப்பாளிகள் பற்றி நிறைய ஒவியங்கள் வரைந்திருக்கிறார். இதில் மிகச்சிறந்த ஒவியம் புத்தகப்புழு. கார்ல் ஸ்பிட்ஸ்வெக் 1808 ஆம் ஆண்டில் ம்யூனிச் நகரில் பிறந்தார். கவிஞரான இவர் சுயமுயற்சியால் ஒவியம் வரைய கற்றுக் கொண்டார். இவரது தந்தை ஒரு மருந்துக்கடை வைத்திருந்தார். ஆகவே கார்ல் ஸ்பிட்ஸ்வெக்கும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் …

புத்தகம் வாசிப்பவர்கள் Read More »

நேரு கண்ட இந்தியா

மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு நேரு கண்ட இந்தியா என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். நாள் : நவம்பர் 14 புதன்கிழமை நேரம் : மாலை ஆறுமணி இடம் : மக்கள் விழிப்புணர்வு மையம் 54. ராஜாஜி சாலை துறைமுகம்.