எந்த உலகில் வசிக்கிறோம்.
சதத் ஹசன் மண்டோவின் புகழ்பெற்ற கதை டோபா டேக் சிங். 1955ல் வெளியான இக்கதை லாகூரிலுள்ள பழமையான மனநலக்காப்பகம் ஒன்றில் வசிக்கும் பிஷன் சிங் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. தற்போது பாகிஸ்தானிலுள்ள டோபா டேக் சிங் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் பிஷன் சிங். வசதியான விவசாயி. நிலப்பிரச்சனை காரணமாக மனநோயாளியாக மாறுகிறார். அவரை லாகூரிலுள்ள மனநலக்காப்பகத்தில் சேர்க்கிறார்கள். பதினைந்து ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கிறார். இரவிலும் சரி பகலிலும் சரி அவர் உறங்குவதேயில்லை. அது போல உட்காருவதுமில்லை. …