வெயிலைக் கொண்டுவாருங்கள்/ ஈபுக்

எனது வெயிலைக் கொண்டு வாருங்கள் சிறுகதைத் தொகுப்பு ஈபுக்காக வந்துள்ளது வெயிலைக் கொண்டு வாருங்கள்: By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan Kindle eBook ASIN: B07B91YP3M 125 INR https://www.amazon.com/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=ASIN%3A+B07B91YP3M&rh=i%3Aaps%2Ck%3AASIN%3A+B07B91YP3M

உலகின் மறுபக்கம்

ஆன்லைன் வர்த்தகம். காகிதமில்லா பரிவர்த்தனை என உலகம் அதிநவீன வர்த்தகத்தை நோக்கி  ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில் மறுபக்கம் இன்னமும் பண்டமாற்றுமுறையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கவே செய்கிறது என்பதைக் காட்டுகிறது தி டிரேடர் என்ற ஆவணப்படம். 25 நிமிஷங்களே ஒடக்கூடிய இந்த ஆவணப்படம் நாம் உண்மையிலே வளர்ச்சியடைந்த உலகில் தான் வாழ்கிறோமோ என்றே கேள்வியை முன்வைக்கிறது. ஜார்ஜியா என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள நாடாகும்.இதன் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மீனியா, கிழக்கே அஜர்பைஜான் ஆகிய …

உலகின் மறுபக்கம் Read More »

Kindle eBooks

கிண்டிலில் கிடைக்கும் எனது ஈபுத்தகங்கள். Kindle eBook Whirling Swirling Sky By S.Ramakrishnan எஸ்.ராமகிருஷ்ணன் விலை ₹100 INR View on Amazon ASIN: B07B8KH6DH ** எனதருமை டால்ஸ்டாய்: enatharumai tol… By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan விலை 100 INR ASIN: B07B8QCXZQ ** காண் என்றது இயற்கை By எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan விலை100 INR ASIN: B07B8FKST7 ** தாவரங்களின் உரையாடல் By எஸ் ராமகிருஷ்ணன் S.Ramakrishnan ₹125 INR View on …

Kindle eBooks Read More »

காஃப்கா சிரிக்கிறார்

இணையத்தில் இன்று காஃப்காவின் அரிய புகைப்படம் ஒன்றைக் கண்டேன். சட்டை அணியாத சிரித்த முகத்துடன் உள்ள காஃப்காவின் புகைப்படம். கடற்கரையில் எடுக்கபட்ட படம் போலுள்ளது. அருகில் அவரது நண்பன் மாக்ஸ் பிராட் இருக்கிறார். கூச்சத்துடன் கேமிராவை நோக்கியபடி இருக்கிறார் காஃப்கா. காப்காவின் பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் கோட் அணிந்தபடியே தீவிரமான முகத்துடன் இருப்பார். சில புகைப்படங்களில் கறுப்பு தொப்பி அணிந்திருப்பார். சிலவேளை கையில் ஒரு பையுடன் காணப்படுவார். இந்த படத்திலுள்ள காஃப்காவிடம் காணப்படுவது மெலிந்த இளைஞனின் வெட்கம். …

காஃப்கா சிரிக்கிறார் Read More »

சலூனுக்குள் புத்தகங்கள்

காலையில் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து நான் மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். சலூனுக்கு வருபவர்கள் படிப்பதற்காகச் சிறிய புத்தக அலமாரி ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் நாற்பது ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நிறையப் பேர் ஆர்வமாகப் புத்தகம் எடுத்துப் படிக்கிறார்கள். இது மட்டுமின்றி யூடியூப்பிலுள்ள உங்களது இலக்கிய உரைகளை ஆடியோவாக்கி அதை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகிறேன். பலரும்  ஆர்வமாகக் கேட்கிறார்கள். இன்னும் அதிகமான புத்தகங்கள் சலூனில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எது போன்ற …

சலூனுக்குள் புத்தகங்கள் Read More »

பூமியை வணங்குகிறார்கள்

புனித யாத்திரைக்குச் செல்லுவது உலகெங்கும் உள்ள வழக்கம். எல்லாச் சமயங்களிலும் புனித யாத்திரை முக்கியக் கடமையாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்தே புனித தலங்களுக்குச் செல்வது உயர்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பாதயாத்திரை செல்வது தலைமுறையாகத் தொடரும் பழக்கம். கிறிஸ்துவச் சமயத்திலும் இது போன்ற புனித யாத்திரைகள் இருக்கின்றன. காண்டர்பரி தேவாலயத்திற்குப் பாதயாத்திரை போனவர்களின் கதையைத் தான் ஆங்கிலத்தில் சாசர் காண்டர்பரி கதைகள் என எழுதியிருக்கிறார். திபெத்திலுள்ள பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் புனித யாத்திரை வியப்பூட்டக்கூடியது. லாசாவிலுள்ள பௌத்த …

பூமியை வணங்குகிறார்கள் Read More »

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ

சியோ ஜியோங்-ஜூ கொரியாவின் முக்கிய கவிஞர். (Seo Jeong-ju) ஐந்து முறை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர், மிதாங் என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். பதினைந்து கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. கொரிய நவீன கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். கவிதைகள் குறித்து சிறப்பாக உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவரது Poems of a Wanderer தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான கவிதைகள். தமிழில் இவரது கவிதைகள் ஏதும் வெளியாகியுள்ளதாக தெரியவில்லை.  சங்க தமிழ் கவிதையின் சாயலை இவரிடம் காணமுடிகிறது. குறிப்பாக இயற்கையின் …

உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ Read More »

இயற்றமிழ் வித்தகர் விருது

தமிழ் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் பற்றும் அன்பும் கொண்டவர்  வைகோ. கலிங்கத்துபரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என அவர் ஆற்றிய விரிவான இலக்கிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மடைதிறந்த வெள்ளம் போலக் கருத்துகளைப் பொழிவார். வாழும் காலத்திலே எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு ஆண்டிற்கு ஒரு இலக்கியவாதியைத் தேர்வு செய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான இயற்றமிழ் …

இயற்றமிழ் வித்தகர் விருது Read More »