வெய்யில்

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு வெய்யில் எழுதியுள்ள மகிழ்ச்சியான பன்றிக்குட்டி. புதிய பாடு பொருள். கவிமொழி என அற்புதமாக எழுதியிருக்கிறார். வெயிலின் கவிதைகளை தொடர்ந்து வாசித்துவருபவன். அவரது கவிதை உலகின் அடுத்த கட்டம் இத்தொகுப்பு. கவிதைகளின் தொனியும், வியப்பூட்டும் படிமங்களும் இத்தொகுப்பை மிக முக்கியமானதாக்குகிறது. நூலைச் சிறப்பாக அச்சிட்டுள்ளது கொம்பு பதிப்பகம் ••• மகிழ்ச்சியான பன்றிக்குட்டி தலைமுறை ஒன்று: என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன் என் தேவையைப் பொறுத்து …

வெய்யில் Read More »

அஞ்சலி

பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஞாநியோடு பழகியிருக்கிறேன். சிறந்த நண்பர். இலக்கியவாதிகளை மிகவும் நேசிக்ககூடியவர். அவர் நடத்திய கேணி நிகழ்வின் முதல் கூட்டத்தை நான் தான் துவக்கிவைத்தேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவிற்கு என் இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இரண்டுவார்த்தைகளும் மூன்று துறவிகளும்

ஆர். சிவக்குமார் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். தேர்ந்த இலக்கிய ஆய்வாளர். ஆங்கிலத்துறைப்  பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 90களில் மீட்சி இதழ்களில் லத்தீன் அமெரிக்கக் கதைகளைத் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து வந்தவர். அவர் தொகுத்த லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் மிக முக்கியமான நூல். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான எஸ்.ஆர்.எம் விருது பெற்றிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் மொழிபெயர்ப்பு செய்த சிறுகதைகள் யாவும் ஒரே தொகுதியாக பாதரசம் பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. அதில் உலகப்புகழ்பெற்ற 22 சிறுகதைகளை மிக நேர்த்தியாக மொழியாக்கம் …

இரண்டுவார்த்தைகளும் மூன்று துறவிகளும் Read More »

தமிழ்ச் சிறுகதையின் புதிய முகங்கள்!

தமிழ்ச் சிறுகதை உலகம் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு புதிய எழுச்சியைச் சந்தித்திருக்கிறது. புதிய முகங்களாக இளம் எழுத்தாளர்கள் அறிமுகமாகி, முந்தைய சிறுகதைகளின் வடிவத்தை, கதைக்களன்களை, மொழியைப் புத்துருவாக்கம் செய்வார்கள். 2010-க்குப் பிறகு எழுதத் தொடங்கிய இன்றைய இளம் எழுத்தாளர்களிடமும் அந்த வீச்சை, பங்களிப்பை, தொடர்ச்சியைக் காண முடிகிறது. இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளை அச்சிலும் இணையத்திலும் தேடி வாசித்துவருபவன் என்ற முறையில், என் வாசிப்பில் விருப்பத்துக்குரிய சிறுகதை ஆசிரியர்களாக கே.என்.செந்தில், மாரி செல்வராஜ், நரன், போகன் சங்கர், …

தமிழ்ச் சிறுகதையின் புதிய முகங்கள்! Read More »

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் எனது பதின், இடக்கை நாவல்களின் சிறப்பு பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னை புத்தக கண்காட்சி அரங்கு எண் 391 , 392ல் கிடைக்கும் பதின்   விலை ரூ 235 இடக்கை விலை ரூ 375

Facebook Live

13.01.2018 Shrutitv வழியாக  வாசகர்களுடன் கலந்துரையாடல் Facebook  Live  மூலமாக இன்று இரவு  8.00 (ist) மணிக்கு நேரலையாக ஒளிப்பரப்பாக உள்ளது. விருப்பமான வாசகர்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். புத்தக கண்காட்சி தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 391 392ல் இருந்து உங்களுடன் உரையாட இருக்கிறேன் #FBLive #bookstall stall no 391&392 தேசாந்திரி -Desanthiri

புத்தகக் காட்சியில் -1

நேற்று மாலை  சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக துவங்கியது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 391  & 392னை  தயார்படுத்தும் பணி காலையிலிருந்து நடைபெற்றது.  நான்கு மணிக்கு புத்தக காட்சிக்குச்  சென்றேன். ஸ்ருதிடிவி நேரடியாக புத்தக கண்காட்சி குறித்த செய்திகளை சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் பற்றிய எனது  நேர்காணல் ஒன்றினை ஸ்ருதி டிவி பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி நேற்று மாலை எழுத்தாளர்கள் பா.ராகவன்,  விமலாதித்த மாமல்லன், தமிழ்மகன், லட்சுமி சரவணக்குமார் …

புத்தகக் காட்சியில் -1 Read More »

புத்தகக் கண்காட்சியில்

புத்தக கண்காட்சியில் தினமும் வாசகர்கள் என்னைச் சந்திக்கலாம். கையெழுத்து பெற்றுக் கொள்ளலாம். இன்று துவங்கி புத்தக கண்காட்சி முடியும் ஜனவரி 22  வரை தினமும் 4 மணி முதல் 8  :30 வரை  தேசாந்திரி பதிப்பகம் அரங்கு 391 &392ல் இருப்பேன். ஜனவரி 12, மற்றும் 19 ஆகிய  நாட்களில் மாலையில் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஐந்து மணி வரை மட்டுமே புத்தக கண்காட்சியில் இருப்பேன்.