தேவதச்சன் நேர்காணல்

கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் படிகம் இதழில் வெளிவந்துள்ள கவிஞர் தேவதச்சன் நேர்காணல் கேள்விகள் – ரோஸ் ஆன்றா ,ஆகாசமுத்து,கோணங்கி,லக்ஷ்மி மணிவண்ணன் •••• கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய …

தேவதச்சன் நேர்காணல் Read More »

தேவதச்சனுக்கு விருது

என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த விருதை அளிக்கும் விஷ்ணுபுரம் வாசக வட்டத்திற்கும் நண்பர் ஜெயமோகனுக்கும் மிகுந்த நன்றி ••• 1952இல் பிறந்த தேவதச்சன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவில்பட்டியில் நகைவணிகம் செய்து வருகிறார். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். முதல் கவிதைத் தொகுப்பு ஆனந்த் உடன் சேர்ந்து வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’ அதை தொடர்ந்து அத்துவான …

தேவதச்சனுக்கு விருது Read More »

அனடோலியாவின் மலைப்பாதைகள்

கடந்த இரண்டு வாரங்களாகத் துருக்கி சினிமாவின் சிறந்த இயக்குனரான நூரி பில்கே ஜெலான் (Nuri Bilge Ceylan ) படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமகால உலகசினிமாவில் என்னை மிகவும் பாதித்த இயக்குனர் இவரே. அதிலும் குறிப்பாக இவரது Once Upon a Time in Anatolia ஒரு காவியம். ரஷ்ய இயக்குனரான தார்கோவெஸ்கியின் திரைப்படங்கள் ஏற்படுத்திய ஆழமான பாதிப்பிற்கு நிகரானவை நூரியின் படங்கள். Clouds of May, Uzak, Climates, Three Monkeys , Once Upon …

அனடோலியாவின் மலைப்பாதைகள் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 26

மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தமிழில் : ஆர்.சிவகுமார் வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் …

எனக்குப் பிடித்த கதைகள் 26 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 25

மணியோசை – ஜப்பானிய பழங்கதை. தமிழில்/ புதுமைப்பித்தன் “நான் சாவதற்குப் பயப்படவில்லை” என்றாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மனைவி. “இப்பொழுது என் கவலை எல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நான் போன பிறகு யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?” வேதனைப்பட்டுக்கொண்டிருந்த கணவன் சொன்னான்: “உனக்குப் பதிலாக யாரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள்; நீ போய்விட்டால் கலியாணமே செய்து கொள்ளமாட்டேன்.” அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது மனப்பூர்வமாகத்தான் சொன்னான்; அவள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு. …

எனக்குப் பிடித்த கதைகள் 25 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 24

கோயில் / கௌ ஷிங்ஜென்.  தமிழில் / நதியலை நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. …

எனக்குப் பிடித்த கதைகள் 24 Read More »

தமிழ் விக்கிபீடியா

பெரும்பான்மை கல்லூரி நிகழ்ச்சிகளில் என்னை அறிமுகப்படுத்தும் போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சுயவிபரக்குறிப்பை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எனது விக்கிபீடியா தகவல்களை யார் உருவாக்கினார்கள் எனத் தெரியவில்லை ஆனால் முழுமையான விபரங்களில்லை நான் மொழிபெயர்த்த ஆலீஸின் அற்புத உலகம் நூலை நான் எழுதிய புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள், குழந்தைகள் புத்தகமான ஏழுதலைநகரம் நான் எழுதிய நாவலாக இடம் பெற்றுள்ளது ( நாவல் என்ற சொல்லை தமிழ் விக்கிபீடியா பயன்படுத்தாது என்பது இன்னொரு விசித்திரம் ) எனது வாழ்க்கைக் …

தமிழ் விக்கிபீடியா Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 23

கரடி வேட்டை                     லியோ டால்ஸ்டாய்- தமிழில் :எம்.ஏ.சுசீலா நாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். …

எனக்குப் பிடித்த கதைகள் 23 Read More »

இந்திய வானம்

இந்த வாரம் முதல் ஆனந்தவிகடனில் புதிய தொடர் ஒன்றைத் துவங்கியிருக்கிறேன் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமான பலமுறை போய் வந்திருக்கிறேன், ஒவ்வொரு பயணமும் ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது. இந்திய வானம் தொடரின் வழியாக இந்தியாவை ஒன்றிணைக்கும் புள்ளிகளை, மனிதர்களை, நிகழ்வுகளை, மகத்தான அறவுரைகளை, வழிகாட்டும் நெறிகளை, மனித மாண்புகளை, நம்பிக்கைகளை முதன்மைப்படுத்த விரும்புகிறேன் துணையெழுத்து, கதாவிசாலம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் என விகடனில் நான் எழுதிய தொடர்கள் வாசகர்களின் பேரன்பையும் பாராட்டையும் எனக்களித்தன, அந்தத் தொடர்களின் வரிசையில் …

இந்திய வானம் Read More »

பசுமை நடை 50

என் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், எழுத்தாளருமான அ. முத்துகிருஷ்ணன் மதுரையில் பசுமை நடை என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலையும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களையும் பாதுகாக்க மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் பசுமை நடை மதுரையைச் சுற்றியுள்ள சமண மலைகள் குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆர்வம் மிக்க இளைஞர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இயங்கும் பசுமை நடை தமிழகத்திற்கே முன்னோடியான சுற்றுசூழல் அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் விருட்சத்திருவிழா, பாறைத்திருவிழா என மிகச்சிறந்த இயற்கை …

பசுமை நடை 50 Read More »