எழுத்துலகின் சாமுராய்
இரண்டாம் உலகயுத்தம் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அடி மிகவும் வலிமையானது, அதன் பாதிப்பில் இருந்து இன்றும் அவர்களால் முழுமையாக விடுபடமுடியவில்லை, ஜப்பானிய இலக்கியத்திலும் யுத்தகாலத்திற்குப் பிந்தைய எழுத்தில் நிறைய மாற்றங்கள் உருவாகின, குறிப்பாக மிஷிமாவும் கவாபதாவும் கோபே அபேயும், புமிகோவும் முக்கிய நவீன எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள், இவர்களில் யாசுனாரி கவாபதா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, யுகியோ மிஷிமா (Yukio Mishima) இரண்டு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர், அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அவருக்கு …