புத்தனாவது சுலபம்

சிறுகதை அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். …

புத்தனாவது சுலபம் Read More »

என்றும் சுஜாதா

இன்றுள்ள இளம்வாசகருக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக நான் அவரது படைப்புகளில் இருந்து தேர்வு செய்து என்றும் சுஜாதா என்ற புத்தகம் ஒன்றினைத் தொகுத்திருக்கிறேன் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சிறந்ததைத் தேர்வு செய்து தனியே  ரீடர் என்று  தொகைநூலாகக் கொண்டுவருவது உலகெங்கும் ஒரு மரபாக உள்ளது, அதிலிருந்து மாறுபட்டு ஒரு எழுத்தாளரின் ஆளுமையை, பன்முகத்தன்மையை முதன்மைப்படுத்தும் விதமாக நான் இந்தத் தொகைநூலை உருவாக்கியிருக்கிறேன், எழுத்து, வாழ்க்கை, கணிப்பொறி, சினிமா, ஒவியம், விஞ்ஞானம், ஹைக்கூ, புதுக்கவிதை, ஆன்மீகம், …

என்றும் சுஜாதா Read More »

நன்றி

எனக்குத் தாகூர் விருது கிடைத்துள்ளதற்கு நிறைய நண்பர்கள் போனிலும்  மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள், மூன்று நாளில் 1374 வாழ்த்து மின்னஞ்சல்கள் குவிந்துவிட்டதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன், தங்களுக்கே இந்த விருதுகிடைத்துள்ளது போல உளமாற மகிழும் நல்ல உள்ளங்களோடு சேர்ந்து செயல்படுவது மிகுந்த சந்தோஷம் தருகிறது, என்மீதும், என் எழுத்தின் மீதும் அன்பு கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த ஒரு வாரகாலமாகவே பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் நேரம் …

நன்றி Read More »

தாகூர் இலக்கிய விருது

இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எனக்கு கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது, அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன், இந்த விருது குறித்த அறிவிப்பு ** தாகூர் இலக்கிய விருது மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய …

தாகூர் இலக்கிய விருது Read More »

தலாய் லாமாவின் உரை

எனக்குப் பிடித்தமான தலாய் லாமாவின் உரை, இதைச் சில வருசங்களின் முன்பாக ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார், இன்று வரை அது என் கணிணி முகப்பில் இருந்து கொண்டேயிருக்கிறது •• THE PARADOX OF OUR TIMES-  Dalai Lama we have taller buildings, but shorter tempers Wider freeways, but narrower viewpoints We spend more, but we have less We have bigger houses, but smaller families …

தலாய் லாமாவின் உரை Read More »

மாங்குடி மருதனார்

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில்  விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது, அதைக் காண்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன். வெயிலேறிய சாலைகள், நாயோடு முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் …

மாங்குடி மருதனார் Read More »

சொந்தக்குரல்

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது. சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். …

சொந்தக்குரல் Read More »

அறிவிப்பு

கடந்த பத்து நாட்களாக  என் பையன்களுடன் கோடைப்பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் புதிதாக எதையும் எழுத இயலவில்லை, இன்று காலையில் தான் சென்னை திரும்பினேன், ஏப்ரல் 13 அன்று எனது பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வாழ்த்து அனுப்பிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் புழுதியும் வெக்கையும் வேம்பின் நிழலும் மகாமௌனமும்  நிரம்பிய கிராமங்கள் சிறுநகரங்களில் சுற்றியலைந்து திரும்புகையில் இன்னமும் எழுத வேண்டியது நிறைய இருப்பது தெரிகிறது, வெயில் கொதிக்கிறது, தாங்கமுடியவில்லை என்ற பலரின் முணுமுணுப்புக்குரலையும் …

அறிவிப்பு Read More »

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம் இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன் •• …

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம் Read More »