கண்ணதாசன் விருது

தாகூர் விருதினைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு விருது கிடைத்திருக்கிறது இது கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வரும் கண்ணதாசன் விருதாகும், இந்த விருது வழங்கும் விழா ஜுன் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நடைபெற உள்ளது, *** கண்ணதாசன் விருதுகள்-2011 குறித்த அறிவிப்பு இது: கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் …

கண்ணதாசன் விருது Read More »

துயில் விமர்சனம்

புத்தகம் பேசுது, மே இதழில் வெளியாகி உள்ள துயில் நாவல் பற்றிய விமர்சனம் ** துயில் : நோய்மையின் தரிசனம் – பி.வசந்தா தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன. வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் …

துயில் விமர்சனம் Read More »

தி எக்னாமிக் டைம்ஸ்

நேற்றைய  தி எக்னாமிக் டைம்ஸில் தாகூர் விருது பற்றிய எனது நேர்காணலுடன் இந்தக் கட்டுரை வெளியாகி உள்ளது Link : https://economictimes.indiatimes.com/articleshow/8285164.cms?prtpage=1 ***

துயில் : ஒரு பார்வை

எனது நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான டாக்டர் ராமானுஜம் திருநெல்வேலியில் உளவியல் மருத்துவராகப் பணியாற்றுகிறார், அவர் எனது துயில் நாவல் பற்றி எழுதிய விமர்சனம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ …

துயில் : ஒரு பார்வை Read More »

கார்க்கியின் இசெர்கீல்

I never meet my lovers after I had left them. It would be bad to meet them – like meeting the dead – கார்க்கி மாக்சிம் கார்க்கியின் (Maxim Gorky) தாய் நாவலை விடவும் அவரது சிறுகதைகளை எனக்கு அதிகம் பிடிக்கும். கார்க்கியின் வாழ்க்கை ஆலிவர் ஸ்டுவிட் கதாபாத்திரத்தினைப் போன்றது. டிக்கன்ஸின் நாவலில் வரும் அந்த சிறுவனைப் போலவே தான் வறுமையோடு போராடியபடி இளமையில் இருந்ததாக கார்க்கியே குறிப்பிடுகிறார் …

கார்க்கியின் இசெர்கீல் Read More »

திருத்தம்

உடற்கூறு வண்ணம் பாடலை எழுதியது அருணகிரி நாதர் இல்லை பட்டினத்தார் என்று நண்பர் கார்த்திகை பாண்டியன் சுட்டிக்காட்டி உள்ளார், என்னிடம் உள்ள பாவலர் சரித்திர தீபகம் அதை அருணகிரி நாதர் என்று அடையாளப்படுத்தியிருந்ததால் உருவான தவறு அது, மன்னிக்கவும் அருணகிரி நாதர் பற்றிய எனது அவதானிப்பு இந்த ஒருபாடலின் வழியாக மட்டும் உருவானதில்லை,  அவரது திருப்புகழ் பற்றிய உயர்வெண்ணம் அப்படியே தானிருக்கிறது அது  போலவே பட்டினத்தாரின்  உடற்கூறு வண்ணம் மீதான வியப்பும் தீராமலேயிருக்கிறது இதன் ஆங்கில மொழியாக்கம் …

திருத்தம் Read More »

உடல்கூறு வண்ணம்

உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல், பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது, உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது ••• உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி, உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து,                                                 2 பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு, …

உடல்கூறு வண்ணம் Read More »

விருது ஏற்புரை

மே 5ம் நாள் மும்பையில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் எனக்குத் தாகூர் விருது வழங்கப்பட்டது, இந்த விருதினை மராத்தியின் முக்கிய எழுத்தாளரும் இந்திய திட்டகமிஷன் உறுப்பினருமான நரேந்திர ஜாதவ் வழங்கினார், இவர் தாகூர் குறித்து முக்கியமான புத்தகங்களை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார், தாகூரின் முக்கிய படைப்புகளை மராத்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர்களுடன் கொரிய அரசின் பன்னாட்டுஉறவுச் செயலர்  Seo-hang Lee, சாகித்ய அகாதமியின் செயலாளர் திரு, அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலநாடக நடிகர் பரூக் ஷேக், நோபல் …

விருது ஏற்புரை Read More »

மும்பைத் தமிழ்சங்க விழா

தாகூர் விருது பெறுவதற்காக மே ஐந்தாம் தேதி காலை மும்பை வருகிறேன், விழா தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் நடைபெற உள்ளது மும்பையில் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை இருக்கிறேன் மே 8ம் தேதி மும்பை தமிழ்சங்கம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது சியோன் தமிழ் சங்கத்தில் காலை பத்துமணிக்கு  எப்போதுமிருக்கும் கதை – தமிழ் இலக்கியத்தின் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் மும்பையில் உள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் …

மும்பைத் தமிழ்சங்க விழா Read More »