மலேசியத் தமிழறிஞர்

மலேசியாவில் வசிக்கும் தமிழறிஞரான டாக்டர் எஸ் ஜெயபாரதியின் எழுத்துகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன், பழந்தமிழ் இலக்கியம். ஆன்மீகம். விஞ்ஞானம், ஜோதிடம், தமிழ்பண்பாடு, நுண்கலை. வரலாற்று ஆய்வுகள் என்று பரந்த தளங்களில் சிறப்பாக எழுதிவருபவர், அவரது மலேசிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் அற்புதமானவை, அவரது எழுத்து தேர்ந்த நகைச்சுவையும் செழுமையான மொழிநடையும் கொண்டது, டாக்டர் ஜெயபாரதி தேர்ந்த படிப்பாளி, அவரது எழுத்தில், வியக்க வைக்கும் தகவல்கள். நுட்பமான விபரங்கள்.  நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட …

மலேசியத் தமிழறிஞர் Read More »

துணையெழுத்து

எனது துணையெழுத்து புத்தகம் பற்றி விக்னேஷ் என்ற இளம் வாசகர் தனது வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு இது, மிக உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பு. துணையெழுத்து வெளியாகி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நான் எழுதிய புத்தகங்களில் அதிகம் விற்பனையானது அதுவே, ஒரு லட்சம் பிரதியைக் கடந்திருக்கும் என்று நம்புகிறேன், ஒவ்வொரு நாளும் அதற்கான வாசகர்கள் விரிந்து கொண்டேயிருக்கிறார்கள், துணையெழுத்து புத்தகத்தை ஆங்கிலத்தில் சுதா நரசிம்மாச்சாரி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் , விரைவில் அது பிரபல …

துணையெழுத்து Read More »

ஜோன் வலியோடு பேசுகிறாள்

சினிமாவின் அழியாத பிம்பங்களாகச் சில முகங்களே நினைவில் தங்கியிருக்கின்றன, அப்படியான ஒரு முகம் மரியா பல்கெனடியுடையது,(Maria Falconetti) அவள் நடித்த The Passion of Joan of Arc சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம், அதை இயக்கியவர் டேனிஷ் இயக்குனர் கார்ல் டிரையர்,(Carl Th. Dreyer) மௌனப்படமான  ஜோன் ஆப் ஆர்க்கில் ஜோனாக பல்கெனடி நடித்திருக்கிறார், சினிமா எவ்வளவு வலிமையான காட்சி ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே சாட்சி, உரையாடலின்றி காட்சிகளின் …

ஜோன் வலியோடு பேசுகிறாள் Read More »

கதைருசி

நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலை காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத்  தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது, அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் அது போன்ற ஒரு தருணம் வருகிறது, அத்தருணம் கதையின் அன்றாடத்தன்மையில் இருந்து மேலெழும்பி ஜிவ்வெனப் பறக்க ஆரம்பிக்கிறது, வாசகன் அதன் வழியே  வாழ்க்கை குறித்த ஒரு தரிசனத்தை அடைகிறான், …

கதைருசி Read More »

மீன்களோடு பேசத்தெரிந்தவன்

கனவுகளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அதை ஒரு கதையாக்கிவிடுகிறேன், என்று அரிசோனா ட்ரீம்ஸ் படத்தில் எனக்குப் பிடித்தமான ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. 1993ல் வந்த இந்த ஹாலிவுட் படத்தை இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன், முக்கியமான காரணம், இதன் கதை சொல்லும் முறை மற்றும் வசனங்கள், பெரும்பான்மையான உரையாடல்கள் மிகுந்த கவித்துவமானவை, எமிர் கஸ்தூரிகாவின் படமது ( Emir Kusturica) முக்கிய வேஷத்தில் ஜானி டீப் மற்றும் ஜெரி லூயிஸ் நடித்திருக்கிறார்கள், அமெரிக்க …

மீன்களோடு பேசத்தெரிந்தவன் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை

எந்தச் சாவி கதவைத் திறக்கப் பயன்படுகிறதோ அதுவே கதவைப் பூட்டவும் பயன்படுகிறது என்று ஒரு யூதநீதிமொழியிருக்கிறது, நாவல்களுக்குள்ளும் அப்படித்தான்  நடைபெறுகிறது எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன, நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகன் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான்,  அதனால் நாவலின் முழுமையான தரிசனத்தை அவனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை, எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள். சந்தேகங்கள் அனுமானங்கள். …

தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை Read More »

வரலாறு என்னும் கதை

எடுவர்டோ கலியானோ (Eduardo  Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்,  உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர் இவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர், போர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா,  நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க …

வரலாறு என்னும் கதை Read More »

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை

சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர் சிறுவன் முணுமுணுத்தான் டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன், நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர் நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன் நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையாட்டினார் கிழவர் எல்லாவற்றையும்விட மோசம் , பெரியவர்கள் என்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்றான் சிறுவன் சுருக்கம்விழுந்த கைகளின் இதமான அரவணைப்பை அச்சிறுவன் உணர்ந்தான் நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றார் அந்தச் சிறிய …

ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை Read More »

வான்கோவின் இரவு

People use art to explain each other their feelings –  Leo Tolstoy. எனக்கு வான்கோவின் ஒவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஒவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கோ, அவரது  புகழ்பெற்ற ஒவியமான நட்சத்திரங்களோடான இரவு என்ற ஒவியத்தைப் பாருங்கள் தைல வண்ணத்தில் 29 x 36  அளவில் வரையப்பட்ட ஒவியமது ,இன்று நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் உள்ளது 1889ம் ஆண்டு இந்த ஒவியத்தை வரையும் போது வான்கோ சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள …

வான்கோவின் இரவு Read More »

பிடாரன்

நான் கதைவசனம் எழுதி அருண்பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான பிடாரன் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது,  இக்குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது, https://youtu.be/i2h75PBHirg **