சுதந்திர தின வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அண்ணா நூலக அரங்கில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் கவிதை நூலை நான் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். இந்த நூல் குறித்து கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார். செறிவான உரை. கவிதையை சமகால நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டிப் பேசியது சிறப்பு. நிகழ்வில் தோழர் எஸ்.ஏ.பெருமாள், கவிதா சொக்கலிங்கம், இரா.தே. முத்து, பாரதி நாகராஜன் கலந்து …
எனது திருடனின் மூன்று அற்புதங்கள் சிறுகதை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹேம் மகேஷ் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை மலையாளம். தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் முன்பே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்ட வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்டு விற்பனை பொருளாக மாறியது. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் தான் வீடு தோறும் காலண்டர் வாங்கி வைத்திருப்பது நடந்தேறியது. குறிப்பாக ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பங்களிப்பு மற்றும் கொண்டைய ராஜுவும் அவரது சீடர்களும் வரைந்த சாமிபடங்கள் பற்றிய ஆய்வின் மூலம் காலண்டர் கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் வெளிப்படுத்தபடுகின்றன. 1954 ஆம் ஆண்டில் …
மாக்சிம் கார்க்கியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு The Fall of a Titan என்ற நாவலை எழுதியிருக்கிறார் ரஷ்ய எழுத்தாளர் இகோர் கூஸெங்கோ. இரண்டாம் உலகப்போரின் போது இவர் கனடாவில் ரஷ்ய உளவாளியாகப் பணியாற்றியவர். இந்த நாவலை 1955ம் ஆண்டுத் தமிழ்சுடர் பதிப்பகம் வீழ்ச்சி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கே.எம்.ரங்கசாமியும். ஜி. கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.. 492 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இப்போது இந்நூலின் பதிப்பு கிடைப்பதில்லை. அமெரிக்க அரசு அணுஆயுதம் தயாரிப்பதை அறிந்த …
குலேபகாவலி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். குலேப் என்ற மலரை தேடி பகாவலி நாட்டிற்கு மேற்கொள்ளும் இளவரசனின் சாகசபயணமே படம். அந்த மலரைக் கொண்டு வந்தால் மட்டுமே தந்தையின் பார்வையை மீட்க முடியும். இளவரசன் தாசன் குலேப் மலரைத்தேடி செல்லும் வழியில் சூதாடி இளவரசர்களை அடிமைப்படுத்தும் லக்பேஷா என்ற இளம்பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டு தந்திரமாக அவளை வெல்கிறான் குலேப் என்ற சொல் படம் பார்த்து முடித்த நிமிஷத்திலிருந்து மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. கண்பார்வையை மீட்கும் …
புதிய குறுங்கதை. இரண்டு கிழவர்களும் தினமும் பூங்காவில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருவர் கையில் சிவப்பு பிடி கொண்ட குடை வைத்திருப்பார். மற்றவர் பச்சை நிற கைப்பிடி கொண்ட குடை. ஒருவர் அடர்ந்து நரைத்த தாடியுடன் இருப்பார். மற்றவர் தினசரி முகச்சவரம் செய்து மீசையில்லாமல் இருப்பார். இருவரும் சரியாக மாலை நான்கு முப்பதுக்குப் பூங்காவிற்குள் நுழைவார்கள். அவர்களுக்கான அதே சிமெண்ட் இருக்கையில் அமர்வார்கள் மீசையில்லாதவர் கொண்டு வந்த பிளாஸ்கில் இருந்து காபி ஊற்றி இருவரும் குடிப்பார்கள். பின்பு ஆளுக்கு …
எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி
தனது தாத்தாவிற்குச் சொந்தமான குடும்பத்தின் கோடைக்கால வீட்டில், பழைய உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்கு நடுவே இருந்த பை ஒன்றைக் கண்டுபிடிக்கிறான் இகோர். அதில் நிறையப் புகைப்படச்சுருள்கள் காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலுள்ள அந்தப் புகைப்படச்சுருளை இன்றுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு மீள் உருவாக்கம் செய்கிறான். அந்தப் புகைப்படங்கள் வியப்பளிக்கின்றன. சோவியத் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான தனது தாத்தா லியோனிட் புர்லாகாவின் இளமைக்காலச் சாட்சியமாக உள்ள அந்தப் புகைப்படங்களை ஆராயத் துவங்குகிறான். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு நினைவு அழிந்து போன தாத்தாவிடம் …
புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன. இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.