பசியற்றவள்
அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பேரதிர்ச்சி இன்றும் அவர்கள் ஆழ்மனதில் படிந்திருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிப்பாடு போலவே The Wonder திரைப்படம் உருவாகியுள்ளது, செபாஸ்டியன் லீலியோ இயக்கியுள்ள இந்தப் படம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையைப் படிப்பது போல விந்தையும் நிஜமும் ஒன்று கலந்திருக்கிறது. கதையின் மகத்தான விந்தையாக முன்வைக்கப்படுவது பசியே. அன்னா என்ற சிறுமி நான்குமாதங்களாக எதையும் சாப்பிடுவதில்லை. அவளிடமிருந்து பசி மறைந்துவிடுகிறது. அவள் உணவு உட்கொள்ளாமலே உயிர்வாழுகிறாள். இந்த விந்தையை ஊர் மக்களால் புரிந்து …









