எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட தொகுப்பில் the Paris Review Interviews (WRITERS AT WORK) தொகுதிகளுக்கு இணையே கிடையாது. என்னிடம் 9 தொகுதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் ஒரு தொகுதியை எடுத்துப் படிப்பேன்.

எழுத்தாளர்களை நேர்காணல் செய்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்துள்ளார்கள். எது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொகுதி சிறந்த உதாரணம்.
நேர்காணலின் போது எழுத்தாளரின் வீடு எப்படியிருந்தது. அவர் என்ன உடை உடுத்தியிருந்தார். அவரது அன்றாட உலகம் எப்படியிருக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக அவதானித்து எழுதியிருக்கிறார்கள். சம்பிரதாயமான கேள்விகள் எதுவும் கிடையாது. எழுத்தாளரின் ஆளுமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும்படியான கேள்விகள். தன்னியல்பாக எழுத்தாளர்கள் தரும் பதில். அதில் வெளிப்படும் அபாரமான பார்வைகள். இதுவே இந்த நேர்காணல்களின் சிறப்பு.
பாரீஸ் ரிவியூ 1953 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. பாரீஸ் ரிவியூவில் தனது நேர்காணல் வெளியாவது இன்று வரை எழுத்தாளரின் கனவு என்றே சொல்வேன்.
ஒரு தொகுதியில் 14 முதல் 1 6 எழுத்தாளர்கள் வரை இடம்பெறுகிறார்கள். எழுத்தாளரின் கையெழுத்துப்பிரதியும் மாதிரிக்காக இதில் இடம்பெறுகிறது. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிய ஒருவரைக் கூட அதில் காண முடியாது.
இந்த நேர்காணல்கள் ஏன் முக்கியமாகின்றன. இவை எழுத்தாளனின் தேடலையும் அவன் உருவான விதத்தையும் இலக்கியம் சாராத பிறதுறைகள் குறித்த அவனது எண்ணங்களையும், பாதித்த புத்தகங்கள், ஆளுமைகள் பற்றியும் பகிர்ந்து கொள்வதால் வாசகர்களுக்கு எழுத்தாளரையும் அவரது படைப்புகளையும் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தின் நுட்பங்களையும் ரகசியங்களையும் கற்றுத் தருகிறது.
நேர்காணலை சிறிய ரிக்கார்டர் மூலம் பதிவு செய்து எழுதுவதால் ஒரு வார்த்தை கூட மாறிவிட வாய்ப்பிருப்பதில்லை. இதில் இடம்பெற்றுள்ள பலரும் நோபல் பரிசு பெற்றவர்கள். ஆனால் இந்த பரிசைப் பெறுவதற்கு முன்பு நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போது நோபல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்கள் வியப்பளிக்கின்றன.

Poetry existed before writing. Essentially, it is a verbal art, that enters us not only through our eyes and understanding but through our ears as well. Poetry is something spoken and heard. It’s also something we see and write. என்று ஆக்டோவியோ பாஸ் தனது ஒரு பதிலில் கூறுகிறார்
இது போலவே மரியோ வர்காஸ் லோசாவிடம் கேட்கப்பட்ட கேள்வி .
INTERVIEWER: Do you choose the subjects of your books or do they choose you?
VARGAS LLOSA: As far as I’m concerned, I believe the subject chooses the writer. I’ve always had the feeling that certain stories imposed themselves on me; I couldn’t ignore them, because in some obscure way, they related to some kind of fundamental experience—I can’t teally say how.
இது கவிஞர் ராபர்ட் பிராஸ்டின் பதில்
Frost: I never write except with a writing board. I’ve never had a table in my life. And I use all sorts of things. Write on the sole of my shoe.
•••••