admin

உண்மையான பரிசு

எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது. நேற்று வரை சரியாக நடந்த விஷயம் இன்று நடக்க மறுப்பது ஏன். நாம் விரும்பாத மாற்றம் நடந்துவிடும் போது எப்படி ஏற்றுக் கொள்வது. இந்தக் கேள்விகளுக்கான பதிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது Who are you? அனிமேஷன் திரைப்படம். ஒரு எழுத்தாளருக்கும் பரிசுப் பொருளை ஒப்படைக்க வந்த இளம்பெண்ணிற்குமான உரையாடலின் வழியே செயலூக்கத்திற்கான வழி அடையாளம் காட்டப்படுகிறது 13 நிமிஷத்துக்குள் எத்தனை நிகழ்வுகளை, மாற்றங்களை அழகாகச் சித்தரித்துள்ளது என வியப்பாக உள்ளது. …

உண்மையான பரிசு Read More »

வனம் புகுதல்

Shinrin-Yoku, (Forest Bathing) என்ற இந்த ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 14 விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஜப்பானியர்கள் அடர்ந்த காட்டிற்குள் செல்லும் பயணத்தை Forest bathing (Shinrin-Yoku)என்கிறார்கள் அவர்கள் ஷின்ரின்-யோகுவை சிகிட்சை முறையாக மேற்கொள்கிறார்கள். காட்டின் விநோத ஓசைகள், மரங்களின் வாசனை, இலைகள் வழியாக கசியும் சூரிய ஒளி, சுத்தமான காற்று – இவை உடலுக்கும் மனதிற்கும் நலமளிக்கின்றன இயற்கையின் வழியே நமது ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் மீட்டெடுக்கலாம். ஆகவே வனக் குளியலை ஆரோக்கியத்திற்கான வழிமுறையாக கொள்கிறார்கள். ஷின்ரின்-யோகு …

வனம் புகுதல் Read More »

முதல்வர் சந்திப்பு

மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் விதமாக முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது . இதில் நானும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் துணை வேந்தர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் …

முதல்வர் சந்திப்பு Read More »

கவிஞர் வெய்யில் படைப்புலகம்

கவிஞர் வெய்யில் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஆகுதி நடத்துகிறது. ஜுன் 19 ஞாயிறு, சென்னை மைலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று வெய்யில் கவிதைகள் குறித்து உரையாற்றுகிறேன் எனது அமர்வு காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது நிகழ்வில் கோணங்கி, வசுமித்ரா, வெண்ணிலா, முத்துராசா குமார், காளிபிரசாத், ம.கண்ணம்மாள், ஜா. ராஜகோபாலன், மனோமோகன், வேல்கண்ணன், செந்தில் கரிகாலன், ந.பெரியசாமி, ராஜேஷ், ஜீவலட்சுமி, பேராசிரியர் அரங்க மல்லிகா பேராசிரியர் ரவிக்குமார் …

கவிஞர் வெய்யில் படைப்புலகம் Read More »

கவிஞன் சென்ற பாதை

1689ம் ஆண்டுத் தனது 45வது வயதில் கவிஞர் பாஷோ நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். வடக்கு நோக்கிய அந்தப் பயண அனுபவத்தை ஒரு நூலாக எழுதியிருக்கிறார். முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பயண வழியில் லெஸ்லி டவ்னர் நடந்து பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை On the Narrow Road: Journey Into a Lost Japan என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனைச் சேர்ந்த லெஸ்லி டவ்னர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வாழ்ந்தவர். ஜப்பானிய மொழி …

கவிஞன் சென்ற பாதை Read More »

எஸ்.வி.ஆர் – சந்திப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி சென்று உடல் நலமற்றிருந்த தோழர் எஸ்.வி. ஆர் அவர்களைச் சந்தித்தேன். தாங்க முடியாத வலியுடன் போராடியபடி படுக்கையில் இருந்தார். அவரது கட்டிலின் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் துவங்கிய அரைமணி நேரத்தில் அவரிடம் உற்சாகம் ஏற்பட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பேச்சும் எழுத்தும் தான் அவருக்கான மருந்து எங்களுக்காக மதிய உணவு தயாரிக்கச் சொன்னார். நல்ல உணவளித்தார்கள். நான்கு மணி நேரம் அவருடன் இருந்தேன். வலியின் உச்சத்தில் வாழ்ந்து வந்த …

எஸ்.வி.ஆர் – சந்திப்பு. Read More »

சாம்பல் முகங்கள்

ஆறுவயதான கர்ட் தனது அத்தை எலிசபெத்துடன் டிரெஸ்டனில் நடைபெறும் ஓவியக்கண்காட்சிக்குச் செல்வதுடன் NEVER LOOK AWAY படம் துவங்குகிறது. ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஃப்ளோரியன் ஹென்கெல் வான் டோனர்ஸ்மார்க் இயக்கியுள்ள படம் அந்தக் கண்காட்சி கர்ட்டிற்கு விநோதமாகயிருக்கிறது வருகை தந்துள்ள மனிதர்கள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் விசித்திர ஓவியங்கள், புதிரான நவீன சிற்பங்கள். காவல்காக்கும் ராணுவத்தினர் என அந்த இடமும் மனிதர்களும் மிரட்சி கொள்ளச் செய்கின்றன ஆனால் எலிசபெத் கண்காட்சியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஒவியங்களை ரசிக்கிறாள். அவளது …

சாம்பல் முகங்கள் Read More »

மதகுரு 3 – ஓநாயும் நாவலும்

மதகுரு நாவலில் ஓநாய்களின் கூட்டம் கெஸ்டாவை தாக்கும் காட்சி இடம்பெறுகிறது. அபாரமான பகுதியது. பணக்காரக் கிழவன் பிபெர்க்கும் அழகி அன்னா ஸ்டார்ண்யேக்கும் திருமணம் அறிவிக்கப்படுகிறது. அதைக் கெஸ்டா விரும்பவில்லை. அன்னா ஏன் இப்படி ஒரு கிழவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆத்திரப்படுகிறான். அன்னாவை மணந்து கொள்ள வேண்டும் எனப் பெர்டினாண்ட் பிரபு ஆசைப்படுகிறான் அன்னாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தவள் மதகுருவின் மனைவி ஸ்வார்ட்டோ. அவள் தான் பணக்காரக் கிழவனைத் திருமணம் செய்தால் வசதியாக வாழலாம் …

மதகுரு 3 – ஓநாயும் நாவலும் Read More »

மதகுரு- 2 தந்தையின் கோபம்

தந்தைக்கும் மகளுக்குமான உறவில் ஏற்படும் விரிசலையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் மதகுரு நாவலில் செல்மா லாகர்லெவ் மிகவும் நுட்பமாக எழுதியிருக்கிறார். கெஸ்டா பெர்லிங் தனது மகள் மரியாளைக் காதலிக்கிறான். மகளும் அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள் என அறியும் மெல்கியார் இதை விரும்பாமல் ஆத்திரமடைகிறார். அந்தக் கோபத்தினாலே மகளைச் சூதாட்டப்பொருளாக வைக்கிறார். சூதில் கெஸ்டா வென்றுவிடவே மரியாளை அவனிடமே விட்டுவிட்டு ஏக்பி மாளிகையை விட்டு வெளியேறுகிறார். அன்றிரவு நடந்த நடனவிருந்தில் கெஸ்டாவும் மரியாளும் கைகோர்த்து ஆடுகிறார்கள். நள்ளிரவைத் தாண்டியும் …

மதகுரு- 2 தந்தையின் கோபம் Read More »

மதகுரு- தாயின் சாபம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார் கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது. மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர். அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து …

மதகுரு- தாயின் சாபம் Read More »