admin

இரண்டு யசோதரா

சித்தார்த்த யசோதரா’ என்ற நாவலை வாசித்தேன் சிங்கள எழுத்தாளர் சோமா ஜயகொடி எழுதிய இந்த நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் சரோஜினி அருணாசலம். குமரன் புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது புத்தரின் மனைவியான யசோதராவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் அவர்களின் காதல், திருமணம், புத்தரின் துறவு பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் யசோதராவிற்கும் புத்தருக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது என்பதே மைய இழையாக உள்ளது. ரோஹிணி நதி நீரைப் பங்கு போடுவதில் சாக்கிய வம்சத்திற்கும் கோலிய …

இரண்டு யசோதரா Read More »

அக்ஸின்யா

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் வரும் அக்ஸின்யாவை ஓவியமாக வரைந்திருக்கிறார் சுரேஷ். நாவலைப் படித்த நண்பர் வேலூர் லிங்கம் அக்ஸின்யாவை யாராவது ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சுரேஷிற்கு மனம் நிறைந்த நன்றி

சென்னை புத்தகத் திருவிழா -1

கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது. தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன். வழியில் சந்தித்து …

சென்னை புத்தகத் திருவிழா -1 Read More »

சொல்லப்படாத வாழ்க்கை.

தி.லட்சுமணன். நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி நாவல்கள் எழுதப்படுவது மிகவும் குறைவு. இத்தகு சுழலில் எஸ்.ராமகிருஷ்ணன் “நிமித்தம்” என்ற சிறப்பான நாவலைப் படைத்துள்ளார். அந்த நாவலில் வரும் தேவராஜ் காதுகேளாத மாற்றுத்திறனாளி, அவன் தன் வாழ்க்கையில் காது கேளாத காரணத்தால் எவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது என்பதைச் சிறப்பாக விளக்குகிறார். நாவலின் முதல் அத்தியாயத்திற்கு “அவனது இரவு” என்ற தலைப்பிட்டு ஆசிரியர் கதையைத் துவக்குகிறார். அந்த ஒர் இரவுதான் அவனுடைய …

சொல்லப்படாத வாழ்க்கை. Read More »

கிடைக்காத புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் நிறைய வெளியாகியுள்ளன. நான் எப்போதும் கிடைக்காத அரிய நூல்களைத் தான் முதலில் தேடி வாங்குவேன். எனது சேமிப்பிலிருந்து காணாமல் போனவை. இரவல் கொடுத்துத் திரும்பி வராதவை எனப் பல அரிய நூல்களை மறுபடி வாசிக்கத் தேடிவருகிறேன். சிறந்த இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேடிப் பாருங்கள். கிடைத்தால் அவசியம் வாசியுங்கள்.

கதாவிலாசம்

தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் …

கதாவிலாசம் Read More »

மூன்று மௌனங்கள்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள CODA என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Sian Heder என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். CODA என்றால் காது கேளாத பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தை என்று பொருளாம். (child of deaf adults) இப்படத்தின் கதாநாயகி ரூபி அப்படியான இளம்பெண். அவளைச் சுற்றியே கதை நிகழுகிறது. ரூபியின் அப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் காது கேளாதவர்கள். ரூபியின் அப்பா ஒரு மீனவர். தலைமுறையாக அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு …

மூன்று மௌனங்கள் Read More »

நாதஸ்வரத்தின் பின்னால்

கோபாலகிருஷணன் கணேசன் சஞ்சாரம் நாவல் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு முறை எஸ். ரா வின் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் மனதில் விட்டில் பூச்சிகள் அலைவதைப் போல நினைவுகளும் வலிகளும் அலையத் துவங்கிவிடுகிறது. திடீரென்று எனது ஊரில் யாராவது நாதஸ்வரம் வாசித்திருக்கிறார்களா? என்று யோசித்துப் பார்த்தேன். கோவில் கொடையில் நாயனம் வாசித்தது நினைவிற்கு வந்தது. மற்றபடி எங்கள் ஊர் முருகன் கோவிலில் அன்றாடம் சிறிது நேரம் ஒருவர் நாயனம் வாசிப்பது வழக்கம். அதைத்தவிர வேறு எதுவும் நாதஸ்வரம் …

நாதஸ்வரத்தின் பின்னால் Read More »