வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்
பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான். இந்தத் தொகுப்பில் …








