வண்ணதாசனின் ஓவியங்கள்
வண்ணதாசன் சிறந்த கவிஞர் சிறுகதையாசிரியர் மட்டுமில்லை. தேர்ந்த ஒவியரும் கூட. கதைகளிலும் கவிதைகளிலும் அவர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமும் நிகழ்விடத்தின் நிறங்களும் நுட்பங்களும் ஓவியனின் கண்களால் பார்த்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களே. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென், மகாகவி தாகூர், விக்டர் ஹுயூகோ, ஃபெடெரிகோ கார்சியா லோர்கா ,ஹெர்மன் ஹெஸ்ஸே, சில்வியா பிளாத். குந்தர் கிராஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிறந்த ஓவியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுநேரமாக ஓவியம் வரைவதை முன்னெடுக்கவில்லை. ஆனால் தனது குறிப்பேடுகளில் தான் …









