admin

வண்ணதாசனின் ஓவியங்கள்

வண்ணதாசன் சிறந்த கவிஞர் சிறுகதையாசிரியர் மட்டுமில்லை. தேர்ந்த ஒவியரும் கூட. கதைகளிலும் கவிதைகளிலும் அவர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமும் நிகழ்விடத்தின் நிறங்களும் நுட்பங்களும் ஓவியனின் கண்களால் பார்த்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களே. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென், மகாகவி தாகூர், விக்டர் ஹுயூகோ, ஃபெடெரிகோ கார்சியா லோர்கா ,ஹெர்மன் ஹெஸ்ஸே, சில்வியா பிளாத். குந்தர் கிராஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிறந்த ஓவியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுநேரமாக ஓவியம் வரைவதை முன்னெடுக்கவில்லை. ஆனால் தனது குறிப்பேடுகளில் தான் …

வண்ணதாசனின் ஓவியங்கள் Read More »

தெலுங்கு மொழிபெயர்ப்பு

அவளது வீடு கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு ஈமாட்ட இணையபத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவனி பாஸ்கர் இணைப்பு: ஆமெ இல்லு இந்த கதையினை பாராட்டிதெலுங்கின் முதுபெரும் இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான திரு.கணேஸ்வர் ராவ் அவர்கள் எழுதிய குறிப்பு உங்கள் மொழிபெயர்ப்பு எங்கேயும் மொழிபெயர்ப்புபோல் தோன்றவில்லை, காரணம் மூலக்கதையின் நேர்த்தியாக இருக்கலாம். ‘Home'(இந்தப் பொருளில் தெலுங்கு சொல் இல்லை) என்ற கதைக்கருவை வைத்து உலக அளவில் கதைகள் இருக்கின்றன, புதினங்கள் இருக்கலாம. தீவிர பெண்ணீய எழுத்தாளராக இருந்திருந்தால் …

தெலுங்கு மொழிபெயர்ப்பு Read More »

இசையின் சித்திரங்கள்

அழிசி வெளியீடாக வந்துள்ள ரா. கிரிதரன் எழுதியுள்ள காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை. மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார். …

இசையின் சித்திரங்கள் Read More »

வாழ்த்துகள்

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக வழங்கப்படுகிறது. இராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பாலசுப்ரமணியன் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். நட்சத்திரவாசிகள் நாவல் மென்பொருள் துறை சார்ந்த வாழ்க்கையை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

குளிர் மிகுந்த வரிகள்

மண்டியிடுங்கள் தந்தையே – வாசிப்பனுபவம் தேவராஜ் விட்டலன் ரஷ்ய இலக்கியங்கள் எப்போதும் மனித நேசத்தை உயிர்ப்புடன் காட்டுபவையாகவே இருக்கின்றன. அந்த மகத்தான இலக்கியங்களை அளித்தவர்களில் முக்கியமானவர் லியோ டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அறிந்து, புனைவாகக் கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். குளிர் மிகுந்த, பனிபடர்ந்த ஜனவரி மாதத்தில்தான் மண்டியிடுங்கள் தந்தையே புத்தகத்தைப் படிக்கத்துவங்கினேன். எஸ். ரா அவர்களின் புத்தகங்கள் எனக்கு எப்பொழுதுமே மனதிற்கு நெருக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. இராணுவத்தில் …

குளிர் மிகுந்த வரிகள் Read More »

காரந்தின் உலகம்

மகாகவி ரவீந்திரநாத் தாகூரைத் தனது ஆதர்சமாகக் கொண்டவர் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த். இளமையில் சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகள் மற்றும் புதிய கல்வி முறை பற்றி அறிந்து வந்திருக்கிறார். பின்னாளில் காரந்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமளித்துச் சிறப்பித்திருக்கிறது. காரந்தின் பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி அறியும் போது வியப்பளிக்கிறது. அவர் தொடாத விஷயமேயில்லை. கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்திருக்கிறார். வைதீகமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் …

காரந்தின் உலகம் Read More »

புனைவெழுத்தின் அதிசயம்

மண்டியிடுங்கள் தந்தையே – நாவல் குறித்த விமர்சனம்  – மணி செந்தில் வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்து கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற்காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால, தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன. குறிப்பாக ரஷ்ய …

புனைவெழுத்தின் அதிசயம் Read More »

நூலகம் என்பது

போஜே போஜன் நூலக மனிதர்கள் குறித்த வாசிப்பனுபவம். நூலக மனிதர்கள் : இதை ஒரு கட்டுரை தொகுப்பு என்று சொல்வதை விட வாசிப்பு குறித்த அனுபவங்களின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும் புத்தகத்திற்குச் செல்வதற்கு முன்னாள் இந்தப் புத்தகம் பேசும் நூலகம் பற்றிய செய்திகள் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது . தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நூலகம் என்பது ஒரு வெற்றுச் செலவு என்கிற மனநிலை உள்ளது குறிப்பாகச் சில எல்லாம் தெரிந்த அறிவு …

நூலகம் என்பது Read More »

மறக்க முடியாத நாள்

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது. இந்தச் சரணடையும் முடிவிற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை மிக விரிவாக Japan’s Longest Day என்ற திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1967 ல் வெளியான திரைப்படமிது. யுத்த திரைப்படங்களில் இப்படம் தனித்துவமானது. போட்ஸ்டாம் பிரகடனம் எனும் ஜப்பான் சரணடைதலுக்கான விதிமுறைகளை வரையறுக்கும் பிரகடனத்தை . ஜூலை 26, 1945 இல், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன், …

மறக்க முடியாத நாள் Read More »

காழ்ப்புணர்வின் வடு

உறுபசி (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ‘உறு’ என்பது, ‘மிகுதி’ என்ற பொருளில் வரும் ஓர் உரிச்சொல். மிகுதியான ‘பசி’ என்ற பொருளில் இந்த நாவலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்தப் பசி எதைக் குறிக்கிறது?. நிச்சயமாக உணவை அல்ல. எல்லாவற்றின் மீதான ‘காழ்ப்புணர்வு’தான் இந்தப் ‘பசி’ என்று நான் கருதுகிறேன். அந்தக் காழ்ப்புணர்வு மிதமிஞ்சிப் போய்விடுகிறது. அதனால் ‘உறுகாழ்ப்புணர்வு’ என்றும் நாம் இந்த நாவலுக்குத் தலைப்பிடலாம். சரி, ‘இது யார் மீதான, எதன் …

காழ்ப்புணர்வின் வடு Read More »